- Home
- Tamil Nadu News
- தமிழகத்தில் அடுத்த 3 மணிநேரத்தில்! 6 மாவட்டங்களில் அலறவிட போகுதா மழை? வானிலை மையம் கூறுவது என்ன?
தமிழகத்தில் அடுத்த 3 மணிநேரத்தில்! 6 மாவட்டங்களில் அலறவிட போகுதா மழை? வானிலை மையம் கூறுவது என்ன?
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

தமிழகத்தில் சுட்டெரித்த வெயில்
தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் 100 டிகிரி தாண்டி வெயில் வாட்டி வதைத்து வந்தது. அதாவது கோடை வெயிலை மிஞ்சும் அளவுக்கு வெயில் வாட்டி வதைத்து வந்ததால் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகினர். இந்நிலையில் கடந்த சில நாட்களாக சென்னை உள்ளிட்ட தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் அவ்வப்போது மழை பெய்து குளிர்ச்சியான சூழல் நிலவி வருகிறது.
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி
இந்நிலையில் தெற்கு ஒரிசா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. அதேபோல் தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஓரிரு இடங்களில் பலத்த தரைக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். நீலகிரி மாவட்டம் மற்றும் கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலை பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
தமிழகத்தில் மழை
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 32-33° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26-27° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
6 மாவட்டங்களில் மழை எச்சரிக்கை
இந்நிலையில் தமிழகத்தில் அடுத்த 3 மணிநேரத்தில் 6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது. அதாவது கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, விருதுநகர், தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் காலை 10 மணி வரை லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை மையம் கணித்துள்ளது.