MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • குரூப் 4 தேர்வு எழுதியவர்களுக்கு! 10 நாளில் இன்ப அதிர்ச்சி கொடுத்த டிஎன்பிஎஸ்சி!

குரூப் 4 தேர்வு எழுதியவர்களுக்கு! 10 நாளில் இன்ப அதிர்ச்சி கொடுத்த டிஎன்பிஎஸ்சி!

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) குரூப்-4 தேர்வுக்கான விடைக்குறிப்பை வெளியிட்டுள்ளது. தேர்வர்கள் தங்கள் விடைகளை சரிபார்த்து, ஆட்சேபனைகள் இருப்பின் ஜூலை 28ம் தேதிக்குள் தெரிவிக்கலாம்.

2 Min read
vinoth kumar
Published : Jul 22 2025, 08:48 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Image Credit : Google

தமிழ்நாடு முழுவதும் கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர் உள்ளிட்ட 3,935 பணியிடங்களுக்கான டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வு கடந்த 12ம் தேதி நடைபெற்றது. இந்த தேர்வுக்கு சுமார் 13 லட்சம் பேர் விண்ணப்பத்திருந்த நிலையில் 11 லட்சத்து 50 பேர் மட்டுமே தேர்வு எழுதியதாக கூறப்படுகிறது. 2,41,719 பேர் தேர்வு எழுதவில்லை. அனைத்து மாவட்டங்களிலும் 4,922 தேர்வு மையங்களில் தேர்வு நடைபெற்றது. எப்போதும் இல்லாத வகையில் இந்த முறை பொதுத் தமிழ் தொடர்பான கேள்விகள் மிகவும் கடினமாக இருந்ததாக தேர்வர்கள் கூறியிருந்தனர். இதனால் குரூப்-4 தேர்வை ரத்து செய்துவிட்டு மறுதேர்வு நடத்த வேண்டும் என வலியுறுத்தி வந்தனர்.

24
Image Credit : our own

இந்நிலையில் நாம் எழுதிய விடை சரியா என்று தெரியாமல் புலம்பி தவித்து வரும் தேர்வர்களுக்கு டிஎன்பிஎஸ்சி ஒரே வாரத்தில் இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளது. குரூப்-4 தேர்வர்கள் அளித்த விடை சரியானதா என்பதை தெரிந்துகொள்ளும் விதமாக Answer Key எனப்படும் விடைக்குறிப்பை வெளியிட்டுள்ளது. டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ள விடைக்குறிப்பில் ஆட்சேபம் இருந்தால் தேர்வர்கள் இது குறித்து முறையிட முடியும்.

Related Articles

Related image1
ஆடி அமாவாசை! பொதுமக்களுக்கு அரசு போக்குவரத்து கழகம் வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு!
Related image2
தமிழகத்தில் இன்று எந்தெந்த மாவட்டங்களில் கனமழை அடிச்சு ஊத்தப்போகுது? வானிலை மையம் கரண்ட் அப்டேட்!
34
Image Credit : our own

டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் தங்களது பதிவு விவரங்கள், விண்ணப்ப எண் உள்ளிட்டவற்றை பதிவு செய்து, எந்த வினாக்களுக்கு விடையை பார்க்க வேண்டுமோ அதை கிளிக் செய்து விடையை தெரிந்து கொள்ளலாம். உத்தேச விடைகளுக்கான மறுப்புகள் மற்றும் கருத்துகள் ஆகியவற்றை 7 நாட்களுக்குள் டிஎன்பிஎஸ்சி அதிகாரப்பூர்வ இணைய வழியில் மட்டுமே தேர்வர்கள் தெரிவிக்க வேண்டும். அஞ்சல் மற்றும் மின்னஞ்சல் வழியாக பெறப்படும் கோரிக்கைகள் ஏற்கப்படாது. அதேபோல், ஜூலை 28ம் தேதி மாலை 5.45 மணிக்கு பிறகு இணைய வழியில் பெறப்படும் கோரிக்கைகளும் பரிசீலிக்கப்படமாட்டாது என்று டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது.

44
Image Credit : our own

இறுதி செய்யப்பட்ட விடைகள், தெரிவுப் பணிகள் அனைத்தும் முடிவுற்ற பிறகு தேர்வாணைய இணைய தளத்தில் வெளியிடப்படும். பகுதி அ –தமிழ் மொழி தகுதி மற்றும் மதிப்பீட்டுத் தேர்வு வினா எண் 90 முதல் 92 வரையுள்ள உத்தேச விடைகளுக்கான மறுப்புகள், கருத்துகள் வினா எண் 90-க்கு மேலே கொடுக்கப்பட்ட பத்தியில் இருந்து தெரிவிக்க வேண்டும். பகுதி அ – பொது ஆங்கிலத்தில் வினா எண் 90 முதல் 92 வரையுள்ள உத்தேச விடைகளுக்கான மறுப்புகள், கருத்துகள் வினா எண் 90-க்கு மேலே கொடுக்கப்பட்ட பத்தியிலிருந்து தெரிவிக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
டி.என்.பி.எஸ்.சி.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்
தமிழ்நாடு
கல்லூரி
Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved