MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • ஹேப்பி நியூஸ்.. தேர்தல் அதுவுமா அரசு ஊழியர்களுக்கு இரண்டு மடங்கு சம்பளம் உயர்வு.!

ஹேப்பி நியூஸ்.. தேர்தல் அதுவுமா அரசு ஊழியர்களுக்கு இரண்டு மடங்கு சம்பளம் உயர்வு.!

Election Commission: அனைத்து சட்டமன்றத் தொகுதிகளிலும் ஈடுபடுத்தப்பட்டுள்ள கண்காணிப்பு குழுக்கள் 24 மணி நேரமும் தீவிரமாகக் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளன. 

2 Min read
Author : vinoth kumar
Published : Apr 01 2026, 11:40 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
Image Credit : our own

தமிழகத்தில் 234 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக ஏப்ரல் 23ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் தேர்தல் அறிவிக்கப்பட்ட அன்று முதலே தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துவிட்டன. இந்நிலையில் தேர்தல் பணியாளர்களுக்கான சம்பள உயர்வு குறித்த முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.

26
Image Credit : Google

அதாவது தமிழ்நாடு சட்டப்பேரவை பொதுத்தேர்தல் நடத்தப்படுவதன் ஒரு பகுதியாக, மாநிலம் முழுவதும் பல்வேறு தரப்பினருக்கான பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. அனைத்து 234 சட்டமன்றத் தொகுதிகளிலும் வாக்குச்சாவடி தலைமை அலுவலர்கள் மற்றும் வாக்குப்பதிவு அலுவலர்களுக்கான முதற்கட்டப் பயிற்சி கடந்த மார்ச் 28 மற்றும் 29-ம் தேதிகளில் நடைபெற்றது.

Related Articles

Related image1
இபிஎஸ்-ஐ காலி செய்ய காத்திருக்கும் மார்ட்டின் மனைவி? எப்படி தெரியுமா? பகீர் கிளப்பும் முக்கிய பிரமுகர்
Related image2
ஏப்ரல் மாதத்தில் காத்திருக்கும் சர்ப்ரைஸ்.. கொட்டி கிடக்கும் விடுமுறைகள்... குஷியில் துள்ளிக்குதிக்கும் அரசு ஊழியர்கள்!
36
Image Credit : x

இப்பயிற்சித் திட்டத்தில், 3,32,231 அலுவலர்களுக்கு வாக்குச்சாவடி தலைமை அலுவலர் மற்றும் வாக்குப்பதிவு அலுவலர்களின் கடமைகள், பங்களிப்புகள் பொறுப்புகள் தொடர்பாக பயிற்சி அளிக்கப்பட்டது. தேர்தல் தொடர்பான பணிகளைத் திறம்பட நிர்வகிப்பதற்கான அவர்களின் திறனை வலுப்படுத்தவும், நடைமுறைகளைச் சரியாக செயல்படுத்துவதை உறுதி செய்வதற்கும் சட்டத்திற்கு உட்பட்டு 2026 தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத்தேர்தலை சுதந்திரமாகவும், நேர்மையாகவும் மற்றும் வெளிப்படையாகவும் நடத்துவதற்கு தங்களை தயார்படுத்திக் கொள்வதை உறுதி செய்வதே இந்தப் பயிற்சித் திட்டத்தின் நோக்கமாகும்.

46
Image Credit : Asianet News

தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் பணிகளுக்காக நியமிக்கப்பட்டு உள்ள வாக்குச்சாவடி தலைமை அலுவலர்கள், வாக்குப்பதிவு அலுவலர்கள், வாக்கு எண்ணும் மேற்பார்வையாளர், வாக்கு எண்ணும் உதவியாளர் மற்றும் நுண்பார்வையாளர்களுக்கு (Micro obervers) வழங்கப்பட வேண்டிய ஊதிய விகிதங்களை இந்திய தேர்தல் ஆணையம் அதிரடியாக உயர்த்தி உள்ளது.

56
Image Credit : our own

அதன்படி வாக்குச்சாவடி தலைமை அலுவலருக்கு ரூ.1700லிருந்து ரூ.3000 ஆகவும், வாக்குப்பதிவு அலுவலருக்கு ரூ.1300லிருந்து ரூ.2600 ஆகவும், வாக்கு எண்ணும் மேற்பார்வையாளருக்கு ரூ.850லிருந்து ரூ.1500 ஆகவும், வாக்கு எண்ணும் உதவியாளருக்கு ரூ.650லிருந்து ரூ.1400 ஆகவும், நுண்பார்வையாளருக்கு ரூ.1000லிருந்து ரூ.2000ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.

66
Image Credit : Asianet News

அனைத்து சட்டமன்றத் தொகுதிகளிலும் ஈடுபடுத்தப்பட்டுள்ள கண்காணிப்பு குழுக்கள் 24 மணி நேரமும் தீவிரமாகக் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளன. ஏப்ரல் 30 நிலவரப்படி இக்குழுக்களால் கைப்பற்றப்பட்ட பொருட்களின் விவரங்கள் இங்கே காணலாம். ரூ.61.98 கோடி, ரூ.1.17 கோடி மதிப்பிலான மதுபாட்டில்கள், ரூ.8.39 கோடி மதிப்பிலான போதைப்பொருட்கள், ரூ.197.35 கோடி மதிப்பிலான தங்கம், வெள்ளி உள்ளிட்டவை ரூ.27.51 கோடி மதிப்பிலான இலவசமாக வழங்க வைத்திருந்தவை உள்ளிட்ட இதர பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல் 2026
சம்பளம்
சம்பள உயர்வு
அரசு ஊழியர்கள்
தேர்தல்

Latest Videos
Recommended Stories
Recommended image1
இபிஎஸ்-ஐ காலி செய்ய காத்திருக்கும் மார்ட்டின் மனைவி? எப்படி தெரியுமா? பகீர் கிளப்பும் முக்கிய பிரமுகர்
Recommended image2
ஏப்ரல் மாதத்தில் காத்திருக்கும் சர்ப்ரைஸ்.. கொட்டி கிடக்கும் விடுமுறைகள்... குஷியில் துள்ளிக்குதிக்கும் அரசு ஊழியர்கள்!
Recommended image3
சிலிண்டர் விலை ரூ.203 உயர்வு..! முதல் நாளிலேயே ஷாக் கொடுக்கும் சிலிண்டர் விலை.. வணிகர்கள் அதிர்ச்சி
Related Stories
Recommended image1
இபிஎஸ்-ஐ காலி செய்ய காத்திருக்கும் மார்ட்டின் மனைவி? எப்படி தெரியுமா? பகீர் கிளப்பும் முக்கிய பிரமுகர்
Recommended image2
ஏப்ரல் மாதத்தில் காத்திருக்கும் சர்ப்ரைஸ்.. கொட்டி கிடக்கும் விடுமுறைகள்... குஷியில் துள்ளிக்குதிக்கும் அரசு ஊழியர்கள்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved