MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • Love Couple: லாட்ஜில் காதலனுடன்.. கதறிய காதலி.. பதறிய 19 வயது இளைஞர்.. நடந்தது என்ன? விசாரணையில் அதிர்ச்சி!

Love Couple: லாட்ஜில் காதலனுடன்.. கதறிய காதலி.. பதறிய 19 வயது இளைஞர்.. நடந்தது என்ன? விசாரணையில் அதிர்ச்சி!

Trichy News: வேலைக்கு எங்கும் செல்லாமல் தன்னுடைய காதலன் சதாம் உசேனுடன் பல்வேறு பகுதிகளுக்கு சென்று வந்துள்ளனர். இந்நிலையில், இருவரும் திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள ஒரு லாட்ஜில் ரூம் எடுத்து தங்கி இருந்துள்ளனர்.

2 Min read
Author : vinoth kumar
Published : Jun 10 2026, 09:07 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
காதல் ஜோடி
Image Credit : Google

காதல் ஜோடி

திருச்சி அரியமங்கலம் மில் தெருவை சேர்ந்தவர் ஜாகீர் உசேன். இவரது மகன் சதாம் உசேன் (19). இவர் அரியமங்கலம் மலையடிவாரம் தீப் பெட்டி கம்பெனி தெருவை சேர்ந்த அப்துல் ஆசாத் மகள் யாஸ்மின் (18) என்ற பெண்ணை காதலித்து வந்துள்ளார். யாஸ்மின் திருமணம் உள்ளிட்ட விசேஷ நிகழ்ச்சிகளுக்கு கேட்டரிங் வேலைக்காக அவ்வப்போது சென்று வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 1ம் தேதி யாஸ்மின் வேலைக்குச் செல்வதாகக் கூறிவிட்டு சென்றுள்ளார். தொடர்ச்சியாக வேலை இருப்பதால் வீட்டிற்கு வருவதற்கு ஒரு வாரம் ஆகும் என பெற்றோர்களிடம் கூறியுள்ளார்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
திருச்சியில் லாட்ஜில் ரூம்
Image Credit : Asianet News

திருச்சியில் லாட்ஜில் ரூம்

ஆனால், அவர் வேலைக்கு எங்கும் செல்லாமல் தன்னுடைய காதலன் சதாம் உசேனுடன் பல்வேறு பகுதிகளுக்கு சென்று வந்துள்ளனர். இந்நிலையில், இருவரும் திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள ஒரு லாட்ஜில் ரூம் எடுத்து தங்கி இருந்துள்ளனர். நேற்று மாலை 5 மணி அளவில் யாஸ்மினுக்கு திடீரென உடல்நிலை பாதிக்கப்பட்டது. இதனால் என்ன செய்வது என்று தெரியாமல் காதலன் சதாம் உசேன், தன்னுடைய நண்பர் ஷேக் அப்துல்லாவை உதவிக்கு அழைத்துள்ளார். பின்னர் இருவரும் சேர்ந்து அந்த பெண்ணை தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர்.

Related Articles

Related image1
Chennai Power Cut : சென்னையில் நாளை முக்கிய இடங்களில் மின்தடை! லிஸ்டில் உங்க ஏரியா இருக்கா பாருங்க!
Related image2
Coimbatore Rain: கோவை மட்டுமல்ல இந்த 4 மாவட்டங்களில் கோரத்தாண்டவம் ஆடப்போகும் கனமழை.. வானிலை மையம் வார்னிங்
35
உயிரிழந்த இளம்பெண்
Image Credit : Asianet News

உயிரிழந்த இளம்பெண்

அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவரை உடல்நிலை மோசமாக இருப்பதால் அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லுமாறு அறிவுறுத்தியுள்ளனர். அதனைத் தொடர்ந்து, இருவரும் அந்த பெண்ணை திருச்சி அரசு மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக கண்டோன்மெண்ட் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் யாஸ்மினின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

45
போதை ஊசி
Image Credit : google

போதை ஊசி

இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் காதலன் சதாம் உசேன் மற்றும் சேக் அப்துல்லா இருவரையும் காவல் நிலையத்தில் அழைத்து சென்று விசாரணை நடத்தியது போது பல்வேறு அதிர்ச்சி தகவல் தெரியவந்தது. யாஸ்மினுக்கு சதாம் உசேனும், அவரது நண்பர் ஷேக் அப்துல்லா வும் சேர்ந்து போதை மாத்திரையை கரைத்து ஊசி மூலம் செலுத்தியதும், இதில் அளவுக்கு அதிகமான போதை மருந்து காரணமாக அவர் இறந்ததும் தெரியவந்தது. லாட்ஜில் யாஸ்மினுக்கு பயன்படுத்தப்பட்ட போதை மாத்திரை அட்டை மற்றும் ஊசி ஆகியவற்றையும் கைப்பற்றி உள்ளனர்.

55
மாத்திரைகள் எப்படி கிடைத்தது? விசாரணையில் அதிர்ச்சி
Image Credit : our own

மாத்திரைகள் எப்படி கிடைத்தது? விசாரணையில் அதிர்ச்சி

நீண்ட நேரம் உல்லாசமாக இருக்கலாம் என கூறி, சதாம் உசேன் தனது காதலிக்கு போதை மாத்திரையை கரைத்து ஊசி மூலம் செலுத்தி உல்லாசமாக இருந்துள்ளார். அளவுக்கு அதிகமான போதை மருந்து காரணமாக உடல்நிலை பாதிக்கப்பட்டு யாஸ்மின் திடீரென உயிரிழந்தது தெரியவந்துள்ளது. இதனையடுத்து கடத்தல் மற்றும் சந்தேக மரணம் ஆகிய பிரிவுகளின் கீழ் சதாம் உசேன் மற்றும் அவருக்கு உதவிய அரவது நண்பர் ஷேக் அப்துல்லா ஆகிய 2 பேர் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். கைதான சதாம் உசேனுக்கு போதை ஊசி மற்றும் மாத்திரைகள் எப்படி கிடைத்தது? என்று போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது யாஸ்மினின் தாயார் ஷகிலா பேகம் போதை பொருட்களை விற்பனை செய்து வந்த திடுக்கிடும் தகவல் தெரிய வந்தது. இந்த விவகாரத்தில் போதை பொருட்கள் சப்ளை செய்யும் யாஸ்மினின் தாயார் ஷகிலா பேகத்திடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
திருச்சி
குற்றம்
காவல் நிலையம்
Latest Videos
Recommended Stories
Recommended image1
BharathiRaja: மண்ணின் மணத்தை உலகம் அறியச் செய்த மனிதர்... காற்றில் கரைந்த இயக்குநர் இமயம் பாரதிராஜா
Recommended image2
Chennai Power Cut : சென்னையில் நாளை முக்கிய இடங்களில் மின்தடை! லிஸ்டில் உங்க ஏரியா இருக்கா பாருங்க!
Recommended image3
Now Playing
"சிங்கப்பெண் அதிரடிப்படை என் மனதில் இருந்து வந்தது!" - CM விஜய் அதிரடி பேச்சு!
Related Stories
Recommended image1
Chennai Power Cut : சென்னையில் நாளை முக்கிய இடங்களில் மின்தடை! லிஸ்டில் உங்க ஏரியா இருக்கா பாருங்க!
Recommended image2
Coimbatore Rain: கோவை மட்டுமல்ல இந்த 4 மாவட்டங்களில் கோரத்தாண்டவம் ஆடப்போகும் கனமழை.. வானிலை மையம் வார்னிங்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved