MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • திருத்தணி கோயிலுக்கு கையில் வேலுடன் கிளம்பிய கங்கை அமரன்! தடுத்து நிறுத்திய அதிகாரிகள்! என்ன நடந்தது?

திருத்தணி கோயிலுக்கு கையில் வேலுடன் கிளம்பிய கங்கை அமரன்! தடுத்து நிறுத்திய அதிகாரிகள்! என்ன நடந்தது?

திருத்தணி முருகன் கோயிலுக்கு சென்ற கங்கை அமரனை அதிகாரிகள் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. அவர் ஏன் தடுத்து நிறுத்தப்பட்டார்? என்பது குறித்த முழு விவரங்களை பார்க்கலாம்.

1 Min read
Rayar r
Published : Oct 07 2025, 04:50 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
திருத்தணி கோயிலுக்கு சென்ற கங்கை அமரன்
Image Credit : Asianet News

திருத்தணி கோயிலுக்கு சென்ற கங்கை அமரன்

இசைஞானி இளையராஜாவின் சகோதரர் கங்கை அமரன். இசையமைப்பாளர், இயக்குநர், பாடலாசிரியர் என பன்முகத் தன்மை கொண்ட இவர் சகோதரர் இளையராஜா போலவே ஆன்மீகத்திலும் அதிக ஈடுபாடு கொண்டவர். பாஜக ஆதரவாளரான கங்கை அமரன் நேற்று இரவு விஸ்வ இந்து பரிஷத் அமைப்பை சேர்ந்த சில நிர்வாகிகளுடன் சேர்ந்து திருத்தணி முருகன் கோயிலுக்கு சாமி தரிசனம் செய்ய சென்றார்.

24
கங்கை அமரனுக்கு அனுமதி மறுப்பு
Image Credit : instagram

கங்கை அமரனுக்கு அனுமதி மறுப்பு

கையில் வேல் வைத்திருந்த அவர் திருத்தணி கோயிலில் வேல் பூஜை செய்யப் போவதாக கூறினார். இதற்கு முறையான அனுமதி பெறாததால் கங்கை அமரனையும், அவருடன் வந்தவர்களையும் அதிகாரிகள் தடுத்து நிறுத்தினார்கள். இதனால் கங்கை அமரனுக்கும், அதிகாரிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது கங்கை அமரன், ''நீங்கள் உள்ளே விடவில்லை என்றால் என்ன? என் உள்ளத்திலேயே முருகன் இருக்கிறான்'' என்றார்.

Related Articles

Related image1
"நல்ல கவிஞன் ஆனால் நல்ல மனிதன் கிடையாது" வைரமுத்துவை திட்டி தீர்த்த கங்கை அமரன்
Related image2
மயங்கி விழுந்த கங்கை அமரன்! திடீர் உடல்நல குறைவால் மருத்துவமனையில் அனுமதி!
34
திரும்பி சென்ற கங்கை அமரன்
Image Credit : our own

திரும்பி சென்ற கங்கை அமரன்

தொடர்ந்து 'விஜபி கேட் வழியே உள்ளே அனுமதிக்க முடியாது. வேல் பூஜை செய்ய அனுமதி இல்லை' என்று கோயில் நிர்வாகிகள் திட்டவட்டமாக கூறியதால் கங்கை அமரனும், விஸ்வ இந்து பரிஷத் அமைப்பை சேர்ந்தவர்களும் அங்கு இருந்து சென்றனர். இந்த சம்பவத்தால் திருத்தணி கோயில் வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

44
இந்து முன்னணி அமைப்பினர் எதிர்ப்பு
Image Credit : our own

இந்து முன்னணி அமைப்பினர் எதிர்ப்பு

தமிழகத்தின் முக்கியமான கோயில்களில் விஐபிகள் உள்ளிட்ட யாராக இருந்தாலும் முன் அனுமதி பெறாமல் பூஜை செய்யக் கூடாது என்று இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

அதே வேளையில் கங்கை அமரனை திருப்பி அனுப்பிய திருத்தணி கோயில் நிர்வாகிகளுக்கு இந்து முன்னணி அமைப்பினர் கண்டனம் தெரிவித்துள்ளனர். 'கோயில்களில் சாமி தரிசனம் செய்ய அனைவருக்கும் உரிமை உண்டு. பக்தர்களை தடுக்கும் உரிமையை கோயில் அதிகாரிகளுக்கு யார் கொடுத்தது?' என்று அவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

About the Author

RR
Rayar r
டிசம்பர் 2024 முதல் ஏசியாநெட் தமிழ் வெப்சைட்டில் பணிபுரிந்து வருகிறேன். இளங்கலை பட்டப்படிப்பு முடித்துள்ளேன். விளையாட்டு, டெக்னாலஜி மற்றும் பயணம் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உண்டு. தினத்தந்தி, ஒன் இந்தியா தமிழ், ஆதன் என முன்னணி ஊடகங்களில் பணியாற்றிய அனுபவம் உள்ளது. என்னை rayar.a@asianetnews.in என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
கோவில் நிகழ்வுகள்
தமிழ்நாடு

Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved