MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • மெட்ரோ ரயிலில் இந்த ஒரு பொருளை கொண்டு போனால் அபராதமா.!! பயணிகளுக்கு சென்னை மெட்ரோ எச்சரிக்கை

மெட்ரோ ரயிலில் இந்த ஒரு பொருளை கொண்டு போனால் அபராதமா.!! பயணிகளுக்கு சென்னை மெட்ரோ எச்சரிக்கை

சென்னை மெட்ரோ ரயில்கள் மற்றும் நிலையங்களில் மெல்லக்கூடிய புகையிலை பொருட்களைப் பயன்படுத்தினால் அபராதம் விதிக்கப்படும். சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் தூய்மையையும் சுகாதாரத்தையும் பராமரிக்க பல்வேறு அமலாக்க நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்துகிறது.

2 Min read
Ajmal Khan
Published : Jul 30 2025, 12:39 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
சென்னையில் மெட்ரோ ரயில் சேவை
Image Credit : our own

சென்னையில் மெட்ரோ ரயில் சேவை

சென்னையில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசலால் குறிப்பிட்ட இடத்திற்கு சென்று சேர பல மணி நேரம் தேவைப்படுகிறது. இதனால் பணிக்கு செல்பவர்கள் பெரிதும் பாதிக்கப்படும் நிலையில், சென்னையில் அறிமுகம் செய்யப்பட்ட மெட்ரோ ரயில் சேவை பொதுமக்களுக்கு பெரிய அளவில் பயனுள்ளதாக உள்ளது. இந்த நிலையில் மெட்ரோ ரயிலில் தூய்மையை கடைபிடிக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், 

அதனையும் மீறி புகையிலை பொருட்கள் பயன்படுத்தப்படுகிறது இதனையடுத்து மெட்ரோ இரயில்கள் மற்றும் நிலையங்களில் மெல்லக்கூடிய புகையிலை பொருட்களைப் பயன்படுத்தினால் அபராதம் விதிக்கப்படும் என சென்னை மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்,

24
மெட்ரோ ரயிலில் புகையிலை பொருட்கள்
Image Credit : our own

மெட்ரோ ரயிலில் புகையிலை பொருட்கள்

புகையிலையை உட்கொள்வது உடல்நலத்திற்கு மிகவும் தீங்கு விளைவிப்பதுடன், பொது இடங்களில் சுகாதாரமற்ற நிலைமைகள் பரவுவதற்கும் காரணமாகிறது. மெட்ரோ இரயில்கள் மற்றும் நிலையங்களில் மெல்லும் புகையிலைப் பொருட்களைப் பயன்படுத்துவதாலும், அதன் விளைவாக எச்சில் துப்புவதாலும், குப்பைகள் போடுவதாலும் அதிகரித்து வரும் பொதுமக்கள் மற்றும் மெட்ரோ பயணிகளின் புகார்களைக் கருத்தில் கொண்டு, 

சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் தூய்மையையும் சுகாதாரத்தையும் பராமரிக்க பல்வேறு அமலாக்க நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்துகிறது. மெல்லக்கூடிய புகையிலைப் பொருட்களை மெட்டல் டிடெக்டர்கள் (metal detectors) மூலம் கண்டறிய முடியாததால், இதுபோன்ற செயல்களைக் கட்டுப்படுத்த,

Related Articles

Related image1
சுய உதவி குழுவிற்கு கொண்டாட்டம்.! தலா 40ஆயிரம் ரூபாய் கடனுதவி.! தமிழக அரசு அசத்தல் திட்டம் அறிவிப்பு
Related image2
விவசாயிகளுக்கு குட்நியூஸ்...வங்கி கணக்கில் 1.20 லட்சம் ரூபாய்.! கம்மியான வட்டி- அள்ளிக்கொடுக்கும் அரசு
34
மெட்ரோ ரயிலில் தீவிர கண்காணிப்பு
Image Credit : our own

மெட்ரோ ரயிலில் தீவிர கண்காணிப்பு

சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் நெரிசல் இல்லாத நேரங்களில் ரோந்துப் பணிகளைத் தீவிரப்படுத்துவதோடு, அனைத்து மெட்ரோ நிலையங்களிலும் சீரற்ற உடல் சோதனைகளை (physical checks) மேற்கொள்ளும். நடைமேடை பாதுகாப்புப் பணியாளர்கள் பயணிகளின் நடவடிக்கைகளை உன்னிப்பாகக் கண்காணிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர், 

அதே நேரத்தில் கோயம்பேட்டில் அமைந்துள்ள சென்ட்ரல் பாதுகாப்பு கண்காணிப்பு அறை (Central Security Surveillance Room), விதிமீறல்களை தீவிரமாகக் கண்டறிந்து மெட்ரோ இரயில் பாதுகாப்புப் பணியாளர்களுக்கு உடனடியாக தெரிவிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. இரயில் நிலையங்களிலும் மெட்ரோ இரயில்களுக்குள்ளும் தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்படும்,

44
புகையிலை பயன்படுத்தினால் அபராதம்
Image Credit : Getty

புகையிலை பயன்படுத்தினால் அபராதம்

சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் தூய்மை மற்றும் நடத்தை விதிகளை மீறும் Metro Railways (Operation and Maintenance) Act, 2002, and Metro Railways Carriage and Ticket Rules, 2014 ஆகியவற்றின் படி அபராதம் விதிக்கப்படும். சுத்தமான, பாதுகாப்பான மற்றும் இனிமையான பயண அனுபவத்தை உறுதி செய்வதில் அனைத்து பயணிகளும் ஒத்துழைக்குமாறு சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் கேட்டுக்கொள்கிறது. 

நமது மெட்ரோ அமைப்பை புகையிலை இல்லாததாகவும், அனைவருக்கும் உகந்ததாகவும் வைத்திருக்க நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்படுவோம் என சென்னை மெட்ரோ நிர்வாகம் அந்த அறிக்கையில் கூறியுள்ளது.

About the Author

AK
Ajmal Khan
அஜ்மல்கான், பிரபல தொலைக்காட்சிகளில் மூத்த மற்றும் சிறப்பு செய்தியாளராக பணிபுரிந்துள்ளார். 20வருடங்களாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர், கடந்த 3 ஆண்டுகளாக ஏசியா நெட் இணையதளத்தில் தமிழ்நாடு மற்றும் அரசியல் சார்ந்த செய்திகளையும் எழுதி வருகிறார்.
தமிழ்நாடு
சென்னை மெட்ரோ
பயணம்
குற்றம்
காவல்
Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved