MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • இளைஞர்களுக்கு ஜாக்பாட்.! ரூ.6 லட்சத்தை வங்கி கணக்கில் தூக்கி போடும் அரசு- விண்ணப்பிப்பது எப்படி.?

இளைஞர்களுக்கு ஜாக்பாட்.! ரூ.6 லட்சத்தை வங்கி கணக்கில் தூக்கி போடும் அரசு- விண்ணப்பிப்பது எப்படி.?

தமிழக அரசின் புதிய முயற்சியான “முதலமைச்சரின் உழவர் நல சேவை மையங்கள்” மூலம் பட்டதாரி இளைஞர்கள் சுயதொழில் தொடங்கி விவசாயிகளுக்கு உதவலாம். ரூ. 6 லட்சம் வரை மானியத்துடன் கூடிய இந்த திட்டம், கிராமப்புற பொருளாதார வளர்ச்சிக்கு வழிவகுக்கும்.

2 Min read
Author : Ajmal Khan
Published : Aug 28 2025, 08:07 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
இளைஞர்களுக்காக தமிழக அரசின் திட்டங்கள்
Image Credit : our own

இளைஞர்களுக்காக தமிழக அரசின் திட்டங்கள்

தமிழக அரசு விவசாயிகளின் வாழ்க்கையை மேம்படுத்தும் நோக்கில் பல்வேறு திட்டங்களை முன்னெடுத்து வருகிறது. அதில் குறிப்பிடத்தக்க புதிய முயற்சியாக “முதலமைச்சரின் உழவர் நல சேவை மையங்கள்” தற்போது செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இன்று வேலை தேடி அலையும் பல இளைஞர்கள், இந்த சேவை மையங்கள் மூலம் சுயமாக தொழில் தொடங்கிக் கொண்டு, தங்களுக்கும், சமூகத்திற்கும் பயன்பட வாய்ப்பு பெறுகின்றனர். 

விவசாயிகளின் நலனையும், இளைஞர்களின் முன்னேற்றத்தையும் ஒருங்கிணைக்கும் இந்தத் திட்டம், தமிழ்நாட்டின் கிராமப்புறங்களில் பொருளாதார வளர்ச்சிக்கு புதிய பாதையைத் திறக்கிறது.

24
முதலமைச்சரின் உழவர் நல சேவை மையங்கள்
Image Credit : Getty

முதலமைச்சரின் உழவர் நல சேவை மையங்கள்

இந்த மையங்கள் மூலம் பட்டதாரிகளுக்கான வேலை வாய்ப்பு, தொழில் தொடங்குவதற்கான நிதி உதவி மற்றும் பயிற்சிகள் வழங்கப்படுகின்றன.இந்த திட்டம் 20 முதல் 45 வயதுக்குட்பட்ட பட்டதாரி ஆண்கள், பெண்கள், மாற்றுத் திறனாளிகள் உள்ளிட்ட அனைவருக்கும் ஒரு முக்கிய வாய்ப்பாக அமைந்துள்ளது. விவசாயிகளுக்கு தேவையான விதைகள், உரங்கள், பூச்சிக்கொல்லிகள், நவீன தொழில்நுட்பங்கள், மத்திய/மாநில அரசு அறிவுரைகள் போன்றவற்றை வழங்கும் சேவை மையங்களை நடத்துவதற்கான நிதி உதவி கிடைக்கிறது.

Related Articles

Related image1
மூன்று நாட்களுக்கு கொட்டோ கொட்டுன்னு கொட்ட போகுதாம் மழை! எந்தெந்த மாவட்டங்களில் தெரியுமா?
Related image2
செப்டம்பரில் மட்டும் 11 நாள் விடுமுறையா.!! பள்ளி மாணவர்களுக்கு குஷியான அறிவிப்பு
34
முதலமைச்சரின் உழவர் நல சேவை மையங்கள்- நிதி உதவி
Image Credit : tndipr

முதலமைச்சரின் உழவர் நல சேவை மையங்கள்- நிதி உதவி

ரூ. 10 இலட்சம் முதல் ரூ. 20 இலட்சம் வரையிலான திட்டங்களுக்கு மத்தியிலும் மாநில அரசும் சேர்த்து 30% மானிய உதவி வழங்குகிறது.

அதிகபட்ச மானியம் ரூ. 6 இலட்சம் வரை வழங்கப்படும்.

பயிற்சி:

மையத்தை நிறுவ விரும்பும் விண்ணப்பதாரர்களுக்கு தேவையான அனைத்து பயிற்சிகளும் வழங்கப்படும். வணிகம் நடத்தும் திறன்களை வளர்க்கவும், விவசாயிகளுடன் தொடர்பு கொள்ளும் முறைகளை கற்றுத்தரவும் அரசு முன்னெடுப்பு எடுத்துள்ளது.

44
விண்ணப்பிக்கும் முறை
Image Credit : Getty

விண்ணப்பிக்கும் முறை

இந்த திட்டத்தில் இணைய விரும்புவோர் முதலில் விரிவான திட்ட அறிக்கையை (Detailed Project Report) தயாரித்து இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும். பதிவு செய்ய வேண்டிய இணைய முகவரி: https://www.tnagrisnet.tn.gov.in/KaviaDP/register மேலும், QR Code வழியாகவும் விண்ணப்பிக்க வசதி செய்யப்பட்டுள்ளது.

திட்டத்தின் சிறப்பு:

இது ஒரு சாதாரண வேலை வாய்ப்பு திட்டமல்ல. பட்டதாரிகளின் தொழில் முனைவு திறன்களை வளர்க்கும், விவசாயத் துறைக்கு புதுமையான சேவைகளை கொண்டு வரும் முயற்சி என்பதே இதன் சிறப்பு அம்சமாகும். இந்த திட்டத்தின் மூலம் அரசு வேலை வாய்ப்பினை மட்டும் அல்லாது, கிராமப்புறங்களில் தொழில் சூழலை உருவாக்கவும் உதவுகிறது “முதலமைச்சரின் உழவர் நல சேவை மையங்கள்” என்பது பட்டதாரிகளுக்கு ஒரு பொன்னான வாய்ப்பாகவும், விவசாயிகளுக்கு நம்பிக்கையின் விளக்காகவும் திகழ்கிறது.

About the Author

AK
Ajmal Khan
அஜ்மல்கான், பிரபல தொலைக்காட்சிகளில் மூத்த மற்றும் சிறப்பு செய்தியாளராக பணிபுரிந்துள்ளார். 20வருடங்களாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர், கடந்த 3 ஆண்டுகளாக ஏசியா நெட் இணையதளத்தில் தமிழ்நாடு மற்றும் அரசியல் சார்ந்த செய்திகளையும் எழுதி வருகிறார்.
தமிழ்நாடு
வேலைவாய்ப்பு
தமிழ்நாடு அரசு
பெண்கள்
விவசாயம்

Latest Videos
Recommended Stories
Recommended image1
வெயிலின் ஆட்டம் ஆரம்பிச்சுடுச்சு! இனிமே குடை இல்லாமல் வெளியே போவாதீங்க! மழை குறித்து எதிர்பாராத ட்விஸ்ட்
Recommended image2
குஷியில் துள்ளிக்குதிக்கும் பள்ளி மாணவர்கள்.! விடுமுறை தொடர்பான சூப்பர் அறிவிப்பு வெளியானது!
Recommended image3
1000, 2000 இல்ல ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ.10000..! பழனிசாமி ஜாக்பாட் அறிவிப்பு..
Related Stories
Recommended image1
மூன்று நாட்களுக்கு கொட்டோ கொட்டுன்னு கொட்ட போகுதாம் மழை! எந்தெந்த மாவட்டங்களில் தெரியுமா?
Recommended image2
செப்டம்பரில் மட்டும் 11 நாள் விடுமுறையா.!! பள்ளி மாணவர்களுக்கு குஷியான அறிவிப்பு
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved