MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • போய் வாருங்கள் அப்பா! உங்கள் ஆசையை நிறைவேற்றுவோம்! தமிழிசை கண்ணீர் மல்க இரங்கல்!

போய் வாருங்கள் அப்பா! உங்கள் ஆசையை நிறைவேற்றுவோம்! தமிழிசை கண்ணீர் மல்க இரங்கல்!

காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி அனந்தன் வயது மூப்பு காரணமாக காலமானார். அவரது மறைவுக்கு தமிழிசை சௌந்தரராஜன் இரங்கல் தெரிவித்துள்ளார்.

2 Min read
vinoth kumar
Published : Apr 09 2025, 07:39 AM IST| Updated : Apr 09 2025, 07:54 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Kumari Ananthan passes away

Kumari Ananthan passes away

குமரி அனந்தன் மறைவு

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், தமிழக பாஜகவின் மூத்த தலைவர்களின் ஒருவரான தமிழிசையின் தந்தையுமான குமரி அனந்தன் (93) வயது மூப்பு காரணமாக சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று நள்ளிரவு காலனாமார். அவரது உடல் பொதுமக்களின் அஞ்சலிக்காக சென்னை சாலை கிராமத்தில் உள்ள தமிழிசை இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது.

24
tamilisai soundararajan

tamilisai soundararajan

தமிழிசை சவுந்தரராஜன் இரங்கல்

இந்நிலையில் தந்தை குமரி அனந்தன் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ள அவரது மகளும் பாஜக மூத்த தலைவருமான தமிழிசை சவுந்தரராஜன்: தமிழ் கற்றதனால் நான் தமிழ் பேசவில்லை. தமிழ் என்னைப் பெற்றதனால் நான் தமிழ் பேசுகிறேன் என்று பெருமையாக பேச வைத்த என் தந்தை குமரி அனந்தன் அவர்கள் இன்று என் அம்மாவோடு  இரண்டர கலந்து விட்டார்  குமரியில் ஒரு கிராமத்தில் பிறந்து தன் முழு முயற்சியினால் அப்பழுக்கற்ற அரசியல்வாதியாக தமிழ் மீது தீராத பற்று கொண்டு தமிழிசை என்ற பெயர் வைத்து இசை இசை என்று கூப்பிடும் என் அப்பாவின் கணீர் குரல் இன்று காற்றில் இசையோடு கலந்து விட்டது வாழ்க்கை இப்படித்தான் வாழ வேண்டும் என்று சீரான வாழ்க்கை வாழ்ந்தவர் இன்று தான் வளர்த்தவர்கள் எல்லாம் சீராக வாழ்வதைக் கண்டு பெருமைப்பட்டு வாழ்த்திவிட்டு எங்களை விட்டு மறைந்திருக்கிறார் என்றும் அவர் பெயர் நிலைத்திருக்கும். 

34
tamilisai soundararajan Vs Kumari Ananthan

tamilisai soundararajan Vs Kumari Ananthan

போய் வாருங்கள் அப்பா

தமிழக  அரசியலில் பாராளுமன்றத்தில் முதன் முதலில் தமிழில் பேசியவர்  இன்று தமிழோடு காற்றில்  கலந்துவிட்டார் என்று சொல்ல வேண்டும் மகிழ்ச்சியோடு போய் வாருங்கள் அப்பா நீங்கள் மக்களுக்கு என்ன எல்லாம் செய்ய வேண்டும் என்று  நினைத்தீர்களோ அதை மனதில் கொண்டு உங்கள் பெயரில் நாங்கள் செய்வோம் என்று உறுதியோடு உங்களை வழி அனுப்புகிறோம். 

இதையும் படிங்க: குமரி அனந்தன் காலமானார்: யார் இவர்.? அரசியலில் சாதித்தது என்ன.?

44
bjp tamilisai

bjp tamilisai

உங்கள் ஆசையை நிறைவேற்றுவோம்

உங்கள் வழி உங்கள் வழியில் நீங்கள் எப்பொழுதும் சொல்வதைப் போல நாமும் மகிழ்ச்சியாக இருந்து மற்றவர்களின் மகிழ்விக்க வேண்டும் என்று உங்கள் ஆசை ஆசையை எப்போதும் நிறைவேற்றுவோம் போய் வாருங்கள் அப்பா தமிழ் கற்றதனால் நான் தமிழ் பேசவில்லை தமிழ் என்னைப் பெற்றதனால் நான் தமிழ் பேசுகிறேன் நன்றி அப்பா மகிழ்ச்சியோடு  போய் வாருங்கள் என பதிவிட்டுள்ளார். 

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
பிஜேபி
இந்திய தேசிய காங்கிரஸ்
அரசியல்
குமரி அனந்தன்
தமிழிசை சௌந்தரராஜன்
Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved