MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • யாரு வீட்டு பொண்ண யாரு லவ் பண்ணி கல்யாணம் பண்றது! மருமகனை ஆணவக் கொலை செய்த மாமனார்!

யாரு வீட்டு பொண்ண யாரு லவ் பண்ணி கல்யாணம் பண்றது! மருமகனை ஆணவக் கொலை செய்த மாமனார்!

திண்டுக்கல் மாவட்டத்தில் சாதி மாறி காதல் திருமணம் செய்ததால் ஏற்பட்ட தகராறில், மருமகன் ராமச்சந்திரனை மாமனார் சந்திரன் அரிவாளால் வெட்டி படுகொலை செய்தார். பால் கறக்க சென்றுவிட்டு வீடு திரும்பிக்கொண்டிருந்த போது இந்த கொடூர சம்பவம் நிகழ்ந்துள்ளது. 

1 Min read
vinoth kumar
Published : Oct 13 2025, 01:46 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
பால் கறக்கும் தொழிலாளி ராமச்சந்திரன்
Image Credit : Asianet News

பால் கறக்கும் தொழிலாளி ராமச்சந்திரன்

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அடுத்துள்ள கூட்டத்து அய்யம்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் ராமச்சந்திரன் (24). பால் கறக்கும் தொழிலாளி. வழக்கம் போல கணபதிபட்டி கிராமத்தில் பால் கறவைக்கு சென்ற இடத்தில் சந்திரன் என்பவரின் மகள் ஆர்த்தி (21) என்பவர் உடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இவர் கரூரில் தனியார் கல்லூரியில் 2ம் ஆண்டு வந்துள்ளார்.

24
காதல் திருமணம்
Image Credit : stockPhoto

காதல் திருமணம்

இந்த பழக்கம் நாளடைவில் இருவருக்கும் இடையே காதலாக மாறியுள்ளது. இவர்கள் காதல் விவகாரம் பெண்ணின் வீட்டாருக்கு தெரியவந்ததை அடுத்து கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளனர். குறிப்பாக இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் ஏற்கவில்லை. இந்நிலையில் எதிர்ப்புகளை மீறி கடந்த ஜூன் மாதம் இருவரும் காதல் திருமணம் செய்து கொண்டனர்.

Related Articles

Related image1
சென்னை தனி நீதிபதி விசாரணை குறித்து அதிருப்தி..! தவெக வழக்கில் உச்சநீதிமன்றம் அதிரடி!
Related image2
ஓவர் ஆக்டிங்கால் மாட்டிக்கொண்ட தமிழக அரசு! உண்மை வெளிவரப்போகுது! ஒருத்தனையும் விடக்கூடாது! அன்புமணி
34
 தகராறில் ஈடுபட்ட மாமனார்
Image Credit : google

தகராறில் ஈடுபட்ட மாமனார்

இதனால் ராமச்சந்திரன் மீது சந்திரன் குடும்பத்தினர் கடும் ஆத்திரத்தில் இருந்துள்ளனர். இதனால் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு இருந்துள்ளது. இந்நிலையில் வழக்கம் போல் குளிப்பட்டி கிராமத்திற்கு பால் கறந்து விட்டு ராமச்சந்திரன் இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பிக்கொண்டிருந்தார். அப்போது ஊரின் பாசன கால்வாய் அருகே வந்த ராமச்சந்திரனை சந்திரன் வழிமறித்து மீண்டும் தகராறில் ஈடுபட்டார்.

44
மருமகன் ஆணவக்கொலை
Image Credit : ANI

மருமகன் ஆணவக்கொலை

அப்போது சந்திரன் தான் மறைத்து வைத்திருந் அரிவாளால் கண்ணிமைக்கும் நேரத்தில் ராமச்சந்திரனை சரமாரியாக வெட்டியுள்ளார். படுகாயங்களுடன் ரத்த வெள்ளத்தில் சரிந்த ராமசந்திரன் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் ராமச்சந்திரனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனை தொடர்ந்து மருமகனை படுகொலை செய்த மாமனார் சந்திரனை போலீசார் கைது செய்தனர். மருமகனை மாமினாரே வெட்டி படுகொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
குற்றம்
திருமணம்
கொலை
தமிழ்நாடு

Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved