MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • சென்னையில் மீண்டும் ED ரெய்டு.! முக்கிய புள்ளிகள் வீட்டிற்குள் அதிகாலையில் நுழைந்த அதிகாரிகள்

சென்னையில் மீண்டும் ED ரெய்டு.! முக்கிய புள்ளிகள் வீட்டிற்குள் அதிகாலையில் நுழைந்த அதிகாரிகள்

தமிழகத்தில் ஆளுங்கட்சி அமைச்சர்கள் மற்றும் அரசு அலுவலகங்களில் அமலாக்கத்துறை தொடர் சோதனை நடத்திய நிலையில், தற்போது சென்னையில் 5க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது. மருத்துவ துறை சார்ந்த நிறுவனங்கள் உட்பட பல இடங்களில் சோதனை நடைபெறுகிறது.

1 Min read
Ajmal Khan
Published : May 06 2025, 08:31 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
13
தமிழகத்தில் களம் இறங்கிய அமலாக்கத்துறை

தமிழகத்தில் களம் இறங்கிய அமலாக்கத்துறை

சட்ட விரோ பணப்பரிவர்த்தனை காரணமாக நாடு முழுவதும் அமலாக்கதுறை அவ்வப்போது சோதனை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், தமிழகத்தில் ஆளுங்கட்சியாக உள்ள திமுக அமைச்சர்களின் வீடுகளில் தொடர் சோதனை மேற்கொண்டது.

அமைச்சராக இருந்த பொன்முடி, செந்தில் பாலாஜி, துரைமுருகன், கே.என். நேரு ஆகியோரை சுற்றி வளைத்தது. இதில் அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை கைது செய்து அதிரடி நடவடிக்கை எடுத்தது. மூத்த அமைச்சராக இருந்த பொன்முடியை அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தியது.

23
அமைச்சர்களுக்கு செக் வைத்த அமலாக்கத்துறை

அமைச்சர்களுக்கு செக் வைத்த அமலாக்கத்துறை

மேலும் கனிமவள மோசடி தொடர்பாகவும், டாஸ்மாக் முறைகேடு தொடர்பாகவும் அரசு அலுவகங்களில் தீவிர சோதனையில் அமலாக்கத்துறை ஈடுபட்டடது. இதில் கிடைத்த பல்வேறு ஆவணங்களின் அடிப்படையில் அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்துள்ளது. அடுத்தக்கட்ட நடவடிக்கைகளில் தீவிரம் காட்டி வருகிறது. இந்த நிலையில் அமலாக்கத்துறை மீண்டும் தமிழகத்தில் சோதனையில் இறங்கியுள்ளது. சென்னையில் இன்று காலை 5க்கும் மேற்பட்ட முக்கிய பிரமுகர்களை குறிவைத்து சோதனை நடைபெறுவதாக தகவல் கூறப்படுகிறது. 

Related Articles

Related image1
அமைச்சர் கே.என்.நேரு குடும்பத்தினருக்கு சிக்கல்! அமலாக்கத்துறை முக்கிய அறிவிப்பு!
Related image2
செந்தில் பாலாஜி ஜாமீனை ரத்து செய்ய உச்சநீதிமன்றம் மறுப்பு! வழக்கு முடித்து வைப்பு!
33
சென்னையில் அமலாக்கத்துறை சோதனை

சென்னையில் அமலாக்கத்துறை சோதனை

சென்னை விருகம்பாக்கம், சாலிகிராமம், தி.நகர், அசோக் நகர் உள்ளிட்ட 5 இடங்களில் சோதனை அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டுள்ளனர். சைதாப்பேட்டை ஸ்ரீ நகர் காலனியில் உள்ள தொழிலதிபர் வீட்டில் சோதனை நடைபெற்று வருகிறது. அதன் படி, மருத்துவ துறை சார்ந்த நிறுவனங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகிறது.

பில்ரோத் மருத்துவமனை உரிமையாளர்கள் வீட்டில் அமலாகத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வரும் நிலையில், சென்னை சாலிகிராமத்தில் பாண்டியன் என்பவர் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் மத்திய பாதுகாப்பு படையினரின் பாதுகாப்போடு சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள். 

About the Author

AK
Ajmal Khan
அஜ்மல்கான், பிரபல தொலைக்காட்சிகளில் மூத்த மற்றும் சிறப்பு செய்தியாளராக பணிபுரிந்துள்ளார். 20வருடங்களாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர், கடந்த 3 ஆண்டுகளாக ஏசியா நெட் இணையதளத்தில் தமிழ்நாடு மற்றும் அரசியல் சார்ந்த செய்திகளையும் எழுதி வருகிறார்.
தமிழ்நாடு
அமலாக்க இயக்குனரகம்
மருத்துவக் கல்லூரிகள்
சென்னை
Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved