- Home
- Tamil Nadu News
- பொய் சொன்னாலும் பொருத்தமா சொல்லுங்க.. ஃபாக்ஸ்கான் விவகாரத்தில் திமுகவை போட்டு தாக்கும் எதிர்கட்சிகள்
பொய் சொன்னாலும் பொருத்தமா சொல்லுங்க.. ஃபாக்ஸ்கான் விவகாரத்தில் திமுகவை போட்டு தாக்கும் எதிர்கட்சிகள்
ஃபாக்ஸ்கான் நிறுவனம் தமிழகத்தில் முதலீடு செய்யவில்லை என்று வெளியாகியுள்ள செய்தியை சுட்டிக்காட்டியுள்ள அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பொய் சொன்னாலும் பொருந்த சொல்ல வேண்டும் என்று காட்டமாக தெரிவித்துள்ளார்.

முதலீட்டு செய்தியை மறுக்கும் ஃபாக்ஸ்கான்
தமிழக எதிர்க்கட்சி தலைவரும், அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஃபாக்ஸ்கான் நிறுவனம், முதல்வர் ஸ்டாலினுடன் சந்திப்பு நடத்தியதாகவும், ரூ.15,000 கோடி முதலீடு செய்யப்போவதாகவும் திமுக அரசு அறிவித்தது. பொம்மை முதல்வரோ, இது தான் "செயலில் ஸ்டாலின் மாடல்" என்று மார்தட்டிக் கொண்டார். இந்நிலையில், #Foxconn நிறுவனம், அத்தகைய முதலீடு குறித்த பேச்சுவார்த்தைகளை மறுத்துள்ளதாக செய்திகள் வருகின்றன.
பொய் சொன்னாலும் பொருத்தமா சொல்லுங்க
"பொய் சொன்னாலும் பொருத்தமாக சொல்லுங்க" என்ற திரு. ஸ்டாலினின் பொன்மொழியை, அவருக்கே நினைவுபடுத்த விழைகிறோம். ஏனெனில், பொருத்தமற்ற பொய்கள் இப்படி தான் சீக்கிரமே அம்பலப்பட்டுப் போகும்.
சுற்றுலா செல்லும் பொம்மை முதல்வர்
ஆண்டுதோறும் வெளிநாட்டு சுற்றுலா செல்லும் பொம்மை முதல்வர், அதனால் தமிழகத்திற்கு கிடைத்தது என்னவென்று கேட்டால், அதற்கு இவர்களின் பதில், "வெற்று பேப்பர்"! அது சரி, சட்டியில் இருந்தால் தானே அகப்பையில் வரும்? நேற்று அம்பலப்பட்டுள்ள இந்த பொய் என்பது, பொய்களே உருவான இந்த விடியா ஆட்சி விரைவில் அம்பலப்பட்டு வீழப் போவதற்கு சாட்சி!
2026ல் அதிமுக ஆட்சி
கூகுள் நிறுவனம் கூட, பல்லாயிரம் கோடி மதிப்பிலான முதலீட்டை ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் நேற்று அறிவித்துள்ளது. ஆட்சி என்றால் என்னவென்றே தெரியாத, திறமையற்ற பொம்மை முதல்வரிடம் சிக்கித் தவிக்கும் தமிழகத்தை மீட்டு, மீண்டும் வளர்ச்சிப் பாதையில் வளமான தமிழ்நாட்டைக் கட்டமைக்க ஒரே வழி, 2026-ல் அதிமுக ஆட்சி அமைவதே” என்று குறிப்பிட்டுள்ளார்.