MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனுடன் துரை வைகோ திடீர் சந்திப்பு.. திருச்சியில் பல்கலைக்கழக நகரம்..?

நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனுடன் துரை வைகோ திடீர் சந்திப்பு.. திருச்சியில் பல்கலைக்கழக நகரம்..?

திருச்சியில் பல்கலைக்கழக நகரம் அமைக்கக் கோரி திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் துரை வைகோ மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை நேரில் சந்தித்து கோரிக்கை விடுத்தார். மேலும் சில முக்கிய திட்டங்கள் தொடர்பாகவும் கோரிக்கை விடுத்ததாக தெரிவித்துள்ளார்.

2 Min read
Author : Velmurugan s
Published : Feb 05 2026, 02:46 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
13
பல்கலைக்கழக நகரம்
Image Credit : X/@duraivaikooffl

பல்கலைக்கழக நகரம்

திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் துரை வைகோ வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில், “மாண்புமிகு அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்களை புது தில்லியிலுள்ள அவரது அலுவலகத்தில் சந்தித்தேன்.

இந்தச் சந்திப்பின்போது, 2026 ஒன்றிய பட்ஜெட்டில் நாட்டில் ஐந்து இடங்களில் பல்கலைக்கழக நகரங்கள் (University Township) அமைக்கபடும் என்கிற திட்டத்தில் நாட்டின் மிகச் சிறந்த பல கல்வி நிலையங்களை தன்னகத்தே கொண்டுள்ள, தமிழகத்தின் கல்வி மையமாக (Educational Hub) விளங்கும் மற்றும் மாண்புமிகு நிதி அமைச்சர் உட்பட பல தேச மற்றும் சர்வதேச ஆளுமைகளை உருவாக்கிய திருச்சி மாநகரத்தில் இந்த பல்கலைக்கழக நகரம் அமைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தேன்.

23
திருச்சி சிப்காட்டில் முதலீடு
Image Credit : Asianet News

திருச்சி சிப்காட்டில் முதலீடு

மேலும், எனது திருச்சி நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட மணப்பாறை SIPCOT பகுதியை எலக்ட்ரானிக்ஸ் மற்றும் செமிகண்டக்டர் தொழில் மையமாக உருவாக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தேன். 2026 ஒன்றிய பட்ஜெட்டில் India Semiconductor Mission Phase 2.0 திட்டத்தின் கீழ் ₹40,000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பதையும் சுட்டிக்காட்டி, இந்த திட்டத்தில் எனது திருச்சி நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட மணப்பாறை சிப்காட்டில் முதலீடுகளை கொண்டுவர முக்கியத்துவம் கொடுக்கக் கோரிக்கை விடுத்தேன். இது குறித்து மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பதுறையை கூடுதலாக கவனித்து வரும் மாண்புமிகு அமைச்சர் திரு. அஸ்வினி வைஷ்ணவ் அவர்களை சந்தித்து கோரிக்கை வைத்ததையும் தெரிவித்து கொண்டேன்.

இந்த கோரிக்கைகளுக்கு மாண்புமிகு நிதியமைச்சர் அவர்கள் தங்களது மதிப்புமிக்க கருத்துகள், ஆலோசனைகள் மற்றும் வழிகாட்டுதல்களையும் வழங்கி, மிகுந்த அக்கறையுடன் அணுகியதை குறிப்பிட விரும்புகிறேன்.

Related Articles

Related image1
மதிமுக இப்போ மகன் திமுகவாக மாறிவிட்டது.! துரை வைகோ கொடுத்ததே புறங்கையை தான்- வெளுத்து வாங்கும் மல்லை சத்யா
Related image2
Now Playing
அண்ணா மற்றும் திராவிடத்தை விமர்சனம் செய்பவர்களுக்கு நான் பதிலளிக்க விரும்பவில்லை ! வைகோ பேட்டி
33
நன்றி தெரிவித்த துரைவைகோ
Image Credit : our own

நன்றி தெரிவித்த துரைவைகோ

மேலும், சென்ற கூட்டத் தொடரின்போது எனது தொகுதி உட்பட நாட்டில் உள்ள பொதுத்துறை நிறுவனங்களுக்கு தேவைபடும் அரிய மண் தாதுக்கள் இறக்குமதி செய்து கொடுப்பதில் இருந்த தடைகள் குறித்து எனது கவனத்திற்கு வந்ததையடுத்து, நிதி மற்றும் வர்த்தக அமைச்சகங்களின் உயர் செயலதிகரிகளின் கவனத்திற்கு எடுத்து சென்றேன். உடனடி கொள்கை மாற்றங்கள் செய்து கொடுத்த அதிகாரிகளுக்கும் அமைச்சரிடம் நன்றி தெரிவித்து கொண்டேன்.

திருச்சி மாவட்டத்தின் கல்வி வளர்ச்சி, தொழில் முன்னேற்றம் மற்றும் இளைஞர்களின் வேலைவாய்ப்பு உருவாக்கத்தை கருத்தில் கொண்டு முன்வைக்கப்பட்ட இந்த கோரிக்கைகளை கவனமாக கேட்டுக் கொண்ட மாண்புமிகு நிதியமைச்சர் அவர்களுக்கு என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

எனது திருச்சி மக்களின் நலனுக்காக தொடர்ந்து பாடுபடுவேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.

About the Author

VS
Velmurugan s
இவர் இதழியல் துறையில் முதுகலை பட்டம் பெற்றவர். செய்தி எழுதுவதில் 8 ஆண்டுகளுக்கும் மேலாக அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 2 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். தமிழ்நாடு, அரசியல், ஆட்டோமொபைல் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
வைகோ மதிமுக

Latest Videos
Recommended Stories
Recommended image1
தப்பி தவறி கூட அந்த பக்கம் போயிடாதீங்க.. 65 கி.மீ. வேகத்தில் வீசப்போகுதாம்.. எச்சரிக்கும் வானிலை மையம்
Recommended image2
Now Playing
எடப்பாடி பழனிச்சாமி தனது தோல்வியை ஒப்புக்கொண்டு விட்டார் - அமைச்சர் ரகுபதி பேட்டி.
Recommended image3
சென்னையில் உயிரிழந்து கிடந்த காகங்கள்! பரிசோதனையில் காத்திருந்த அதிர்ச்சி! பொதுமக்களுக்கு அலர்ட்!
Related Stories
Recommended image1
மதிமுக இப்போ மகன் திமுகவாக மாறிவிட்டது.! துரை வைகோ கொடுத்ததே புறங்கையை தான்- வெளுத்து வாங்கும் மல்லை சத்யா
Recommended image2
Now Playing
அண்ணா மற்றும் திராவிடத்தை விமர்சனம் செய்பவர்களுக்கு நான் பதிலளிக்க விரும்பவில்லை ! வைகோ பேட்டி
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved