MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • குடும்பத்திற்காகக் கூட்டணி வைத்த பழனிசாமியின் அரசியல் வீழ்ச்சிக்கான கவுண்ட் டவுன் தொடங்கிவிட்டது!

குடும்பத்திற்காகக் கூட்டணி வைத்த பழனிசாமியின் அரசியல் வீழ்ச்சிக்கான கவுண்ட் டவுன் தொடங்கிவிட்டது!

DMK R S Bharathi questions ADMK Edappadi Palaniswami : குடும்பத்திற்காகக் கூட்டணி வைத்த பழனிசாமியின் அரசியல் வீழ்ச்சிக்கான கவுண்ட் டவுன் தொடங்கிவிட்டது என்று திமுக கழக அமைப்புச் செயலாளர் ஆர் எஸ் பாரதி அறிக்கை வெளியிட்டுள்ளார்.

3 Min read
Rsiva kumar
Published : Apr 28 2025, 05:05 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
112

DMK R S Bharathi questions ADMK Edappadi Palaniswami : தமிழக அரசியல் களம் சூடுபிடிக்க தொடங்கியிருக்கிறது. அதிமுக பாஜக கூட்டணி அறிவிக்கப்பட்ட நிலையில் மற்ற கட்சிகளின் கூட்டணி குறித்து பேச்சுவார்த்தையும் நடைபெற்று வருகிறது. இது ஒருபுறம் இருக்க திமுகவில் அமைச்சரவையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. செந்தில் பாலாஜி மற்றும் பொன்முடி ராஜினாமா செய்துள்ள நிலையில் புதிய அமைச்சராக மனோ தங்கராஜ் இன்று மாலை அமைச்சராக பொறுப்பேற்க இருக்கிறார்.

212

இந்த நிலையில் தான் திமுக கழக அமைப்புச் செயலாளர் ஆர் எஸ் பாரதி அறிக்கை வெளியிட்டுள்ளார். தோல்வியில் சாதனை படைத்துவரும் ’தோல்விசாமி அ.தி.மு.க.வைப் பாதாள வீழ்ச்சிக்குக் கொண்டு சென்று கொண்டிருக்கிறார். பழனிசாமி ஆட்சியில் அமைச்சரவை மாற்றமே நடக்கவில்லையா?

312

செந்தில் பாலாஜி, பொன்முடியின் பதவி விலகல் குறித்து கருத்து தெரிவித்திருக்கும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, ‘’திமுக ஆட்சியின் பாதாள வீழ்ச்சி ஆரம்பித்து விட்டது. ஆட்சி மாற்றத்திற்கான விதைகள் துளிர்விடத் துவங்கி விட்டன எனச் சொல்லியிருக்கிறார். தேர்தலில் தோற்றால் கூட பரவாயில்லை. அடுத்த தேர்தலில் வெல்ல முடியும். ஆனால், கட்சி வீழ்ந்தால் தேர்தலில் வெற்றி சாத்தியமே இல்லை’என்ற அடிப்படக் கோட்பாடு எல்லாக் கட்சித் தலைவர்களிடம் உண்டு. 2026-ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் கட்சி தோற்றாலும் பரவாயில்லை.

412

தன் மீதும் தன் மகன் மீதும் சம்பந்தி மீதும் அமலாக்கத் துறை, வருமானவரித் துறை, சிபிஐ நடவடிக்கைகள் பாய்ந்துவிடக் கூடாது எனக் கட்சியை பாஜகவிடம் அடகு வைத்த… கூட்டணிக்குச் சம்மதித்த பழனிசாமியின் அரசியல் பாதாள வீழ்ச்சியின் கவுண்ட் டவுன் தொடங்கிவிட்டது.

512

எடப்பாடி பழனிசாமி தலைமை ஏற்ற பிறகு எந்தத் தேர்தலிலாவது வெற்றி பெற்றிருக்கிறாரா? 2017 ஆர்.கே.நகர் இடைத் தேர்தல், 2019 நாடாளுமன்றத் தேர்தல், 2019-ல் நடந்த 22 சட்டசபைத் தொகுதிகளின் இடைத் தேர்தல், 2019-இல் நடைபெற்ற ஊரக உள்ளாட்சித் தேர்தல், 2021 சட்டமன்றத் தேர்தல், 2021-இல் நடந்த 9 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தல், 2022-இல் நடந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல், 2023 ஈரோடு கிழக்கு இடைத் தேர்தல், 2024 நாடாளுமன்றத் தேர்தல், விளவங்கோடு இடைத்தேர்தல் எனத்  தொடர்ந்து 10 தேர்தல்களில் தோற்ற கைராசிக்காரர்தான், ‘ஆட்சி மாற்றத்திற்கான விதைகள் துளிர்விடத் துவங்கி விட்டன என ஜோசியம் சொல்கிறார்!

612

தொடர் தோல்விகளைச் சந்திப்பதில் புரட்சி செய்த, தோல்விப் புரட்சியாளர்தான் பழனிசாமி. 2025 ஈரோடு கிழக்கு இடைத் தேர்தலிலும் தோற்று, ’11-ஆவது தோல்வி பழனிசாமி என்ற அவப்பெயரைத் துடைக்கத் தேர்தலில் போட்டியிடாமல் கோழை போலக் களத்தைவிட்டே ஓடியவர்தான் பழனிசாமி. தன் கைக்குக் கிடைத்த கட்சியைச் சீரழித்துச் சின்னாபின்னமாக்கி, தோல்வியில் சாதனை சரித்திரம் படைத்துவரும் ’தோல்வி சாமி அ.தி.மு.க.வைப் பாதாள வீழ்ச்சிக்கு கொண்டு சென்று கொண்டிருக்கிறார்.

712

செந்தில் பாலாஜி, பொன்முடியின் பதவி விலகல் பற்றியெல்லாம் பேசப் பழனிசாமிக்கு அருகதையே இல்லை. தன்னுடைய ஆட்சியில் அமைச்சரவை மாற்றம் செய்யாமல் ஆட்சி செய்தாரா? தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மணிகண்டனின் பதவியை எதற்காகப் பறித்தீர்கள்? பொதுச் சொத்துக்குச் சேதம் ஏற்படுத்திய வழக்கில் தண்டனை பெற்றதற்காக பாலகிருஷ்ண ரெட்டி அமைச்சர் பதவியை இழக்கவில்லையா? இதையெல்லாம் பழனிசாமி மறந்துவிட்டாரா?

812

வளம் கொழிக்கும் அரசு கேபிள் டி.வி நிறுவனத்தைக் கைப்பற்றுவதிலும் தக்கவைப்பதிலும் நடந்த மோதலில், உடுமலை ராதாகிருஷ்ணுக்காக மணிகண்டனை அமைச்சர் பதவியிலிருந்து பழனிசாமி நீக்கினார்.  திருப்பூரில் நடந்த எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில், முதல்வர் பழனிசாமிக்குப் பக்கத்தில் யார் அமர்வது? என்ற 'நாற்காலிச் சண்டை'யில் ஒரு நாற்காலியை இருவரும் பிடித்துக் கொண்டு உடுமலை ராதாகிருஷ்ணனும் பொள்ளாச்சி ஜெயராமனும் சண்டை போட்டது தமிழ்நாடெங்கும் நாறியது. அந்த உடுமலை ராதாகிருஷ்ணனைத் தன் பக்கத்தில் அமர வைத்ததோடு அரசு கேபிள் டிவி தலைவர் பதவியையும் பழனிசாமி வழங்கினார்.

912

''தன்னுடைய துறையில் உடுமலை ராதாகிருஷ்ணன் நியமிக்கப்பட்ட விஷயம்கூட எனக்குத் தெரிவிக்கப்படவில்லை'' என மணிகண்டன் சொன்ன அன்றுதான், அவரின் அமைச்சர் பதவியைப் பறித்தார் பழனிசாமி. ''மேடையில் நாற்காலிக்குச் சண்டைபோட்ட, கட்சியின் தலைமை அலுவலகத்தை முற்றுகையிட்ட, உடுமலை ராதாகிருஷ்ணனுக்குக் கேபிள் டிவி சேர்மன் பதவி. அதை எதிர்த்து வெறும் கருத்து மட்டும் சொன்ன மணிகண்டனுக்குப் பதவிப் பறிப்பா?'' என அ.தி.மு.க.வில் நடந்த குடுமிப்பிடிச் சண்டையை எல்லாம் வசதியாக மறந்துவிட்டீர்களா பழனிசாமி.

1012

தெர்மாகோல் தொடங்கி சோப்பு நுரை வரை எடப்பாடி பழனிசாமி அமைச்சரவையில் உள்ள மந்திரிகள் உதிர்த்த உளறல் முத்துக்களை எல்லாம் தொகுத்தால், அது ஒரு வரலாற்று ஆவணம்; முதல்வர் முன்பே மேடையில் அடித்துக்கொண்ட காட்சிகள் எல்லாம் காவியம். இப்படி மங்குனி மந்திரிசபையை நடத்திவிட்டு, தார்மீகப் பொறுப்புடன் நடக்கும் தி.மு.க. அமைச்சரவையை விமர்சிக்க வெட்கமில்லையா?

1112

பழனிசாமி ஆட்சி ஊழல் நிறைந்தது'' என்று சொல்லிப் போராட்டத்துக்குத் தேதி குறித்த... 11 எம்.எல்.ஏ-க்களை வைத்து இரட்டை இலையை முடக்கிய பன்னீர்செல்வத்துக்கு, துணை முதல்வர் அளித்த பழனிசாமி எல்லாம் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களின் அமைச்சரவையைப் பற்றிப் பேச அருகதை இல்லாதவர்.

1212

எம்.ஜி. ஆரோ ஜெயலலிதாவோ, கட்சிக்காரர் தவறு செய்தால் அவரின் கட்சிப் பதவியை, அமைச்சர் பதவியைப் பறிப்பார்கள்; இல்லை கட்சியை விட்டே நீக்குவார்கள். ஆனால் எம்.எல்.ஏ பதவியைப் பறித்ததில்லை. அந்த மாபாதகத்தைச் செய்தவர் பழனிசாமி. தன் ஆட்சியைக் காப்பாற்ற அதிமுக எம்.எல்.ஏ-க்கள் 18 பேரைத் தகுதிநீக்கம் செய்தார். அந்தப் பழனிசாமி தி.மு.க அமைச்சரவையைப் பற்றிப் பேசாமல் இருப்பதுதான் அவருக்கு நல்லது!

About the Author

RK
Rsiva kumar
நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.
திமுக
எடப்பாடி பழனிசாமி
செந்தில் பாலாஜி

Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved