- Home
- Tamil Nadu News
- என்டா! உனக்கு என் பொண்டாட்டி கேட்குதா? நிவேதாவால் பட்டப்பகலில் கம்பெனிக்குள் அலறிய டில்லிபாபு!
என்டா! உனக்கு என் பொண்டாட்டி கேட்குதா? நிவேதாவால் பட்டப்பகலில் கம்பெனிக்குள் அலறிய டில்லிபாபு!
சென்னை திருவேற்காட்டில், தனியார் நிறுவன சூப்பர்வைசர் டில்லிபாபு பட்டப்பகலில் வெட்டிக் கொல்லப்பட்டார். விசாரணையில், அவரது சக ஊழியரின் மனைவியுடன் ஏற்பட்ட கள்ளக்காதல் காரணமாக, ஆத்திரமடைந்த கணவரே நண்பருடன் சேர்ந்து இந்தக் கொலையைச் செய்தது தெரியவந்தது.

கம்பெனிக்குள் புகுந்து கொலை
சென்னை திருவேற்காடு, பெரியார் நகர் பகுதியைச் சேர்ந்தவர் டில்லிபாபு(25). இவர் திருவேற்காடு அடுத்த மேல் அயனம்பாக்கம் பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் சூப்பர் வைசராக வேலை செய்து வந்தார். அப்போது நேற்று மதியம் இவரது பணி புரியும் கம்பெனிக்கு வந்த இரண்டு பேர் டில்லிபாபு உடன் பேசிக் கொண்டிருந்தனர். அப்போது இரண்டு பேருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில் ஆத்திரமடைந்த அந்த நபர் மறைத்து வைத்திருந்த கத்தியால் பட்டப்பகலில் சரமாரியாக வெட்டி விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர். இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த டில்லிபாபு சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார்.
இரண்டு பேர் கைது
இந்த சம்பவம் குறித்து திருவேற்காடு காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் டில்லிபாபு உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இந்த சம்பவம் தொடர்பாக வினோத்(24), மற்றும் அவரது நண்பர் மோகன் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தியதில் பல்வேறு அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
போலீஸ் விசாரணையில் அதிர்ச்சி
அதில், வினோத்தின் மனைவி நிவேதாவுடன் டில்லிபாபுவிற்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் இருவருக்கும் இடையே கள்ளக்காதலாக மாறி உள்ளது. இந்த விவகாரம் நாளடைவில் கணவருக்கு தெரியவந்ததை அடுத்து மனைவியை கண்டித்துள்ளார். ஆனாலும் இதனை பெரிதாக எடுத்துக்கொள்ளாமல் கள்ளக்காதலை தொடர்ந்துள்ளார்.
கள்ளக்காதல் விவகாரம்
நேற்று முன்தினம் இரவும் வீட்டின் அருகே இது தொடர்பாக பிரச்சனை ஏற்பட்ட நிலையில் ஆத்திரமடைந்த வினோத் தனது நண்பரை அழைத்து வந்து டில்லி பாபு பணி புரியும் கம்பெனிக்கு நேரடியாக சென்று அவரை வெட்டி படுகொலை செய்தது தெரியவந்தது. மனைவியுடன் கள்ளக்காதலில் ஈடுபட்ட கள்ளக்காதலனை பட்டப்பகலில் கணவனே வெட்டி கொன்றது அதிரிச்சியை ஏற்படுத்தி உள்ளது.