MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • தமிழகத்தில் 23-ம் தேதி முதல்! வானிலை மையம் கொடுத்த டேஞ்சர் அலர்ட்! அலறும் பொதுமக்கள்!

தமிழகத்தில் 23-ம் தேதி முதல்! வானிலை மையம் கொடுத்த டேஞ்சர் அலர்ட்! அலறும் பொதுமக்கள்!

தமிழகத்தில் பகல் நேரங்களில் வெப்பம் அதிகரித்து வருவதால் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர். வரும் 21ம் தேதி முதல் வெப்பநிலை மேலும் உயரும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

1 Min read
vinoth kumar
Published : Feb 20 2025, 11:53 AM IST| Updated : Feb 20 2025, 11:55 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
தமிழகத்தில் 23 ம் தேதி முதல்! வானிலை மையம் கொடுத்த டேஞ்சர் அலர்ட்! அலறும் பொதுமக்கள்!

தமிழகத்தில் 23-ம் தேதி முதல்! வானிலை மையம் கொடுத்த டேஞ்சர் அலர்ட்! அலறும் பொதுமக்கள்!

தமிழகத்தில் இரவு நேரத்தில் பனிபொழிவும், பகல் நேரங்களில் கடுமையான வெயிலும் வாட்டி வதைத்து வருகிறது. கோடை காலத்தை போன்று தமிழகத்​தில் வெப்​பநிலை நாளுக்கு நாள் உயர்ந்த வண்ணம் உள்ளது. இதனால், பொதுமக்கள் பகல் நேரத்தில் வெளியே செல்வதை தவிர்த்து வருகின்றனர். பிப்ரவரி மாதத்திலேயே வெயில் இப்படி சுட்​டெரித்தால் கோடை காலத்தில் இதை விட அதிகமாகவே இருக்கும் என்பதால் பொதுமக்கள் அலறுகின்றனர். இந்நிலை​யில், வரும் 21ம் தேதி முதல் வெப்ப நிலை உயரும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்​துள்ளது.

24
சென்னை வானிலை ஆய்வு மையம்

சென்னை வானிலை ஆய்வு மையம்

இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளி​யிட்ட செய்திக்​குறிப்பில்: இன்று தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் பொதுவாக வறண்ட வானிலை நிலவக்கூடும். ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும். காலை வேளையில் பொதுவாக லேசான பனிமூட்டம் காணப்படும்.

34
வெப்பநிலை

வெப்பநிலை


21 முதல் 23ம் தேதி வரை தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் பொதுவாக வறண்ட வானிலை நிலவக்கூடும். ஒரு சில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 4 செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும். அதேபோல் 24 மற்றும் 25 ஆகிய தேதிகளில் தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் பொதுவாக வறண்ட வானிலை நிலவக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. 

44
சென்னை வானிலை நிலவரம்

சென்னை வானிலை நிலவரம்

சென்னை மற்றும் புறநகர் பகுதி​களில் இன்று வானம் ஓரளவு மேகமூட்​டத்​துடன் காணப்​படும். காலை வேளை​யில் பொதுவாக லேசான பனிமூட்டம் காணப்​படும். அதிகபட்ச வெப்​பநிலை 32 முதல் 33 டிகிரி செல்​சி​யஸ், குறைந்​த​பட்ச வெப்​பநிலை 22 முதல் 23 டிகிரி செல்​சியஸை ஒட்டி இருக்​கக்​கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. 

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
வெப்ப அலை

Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved