MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • கோவை சரக டிஐஜி விஜயகுமார் FIR வெளியானது! தற்கொலைக்கு இதுதான் காரணம்! அதிர்ச்சி தகவல்!

கோவை சரக டிஐஜி விஜயகுமார் FIR வெளியானது! தற்கொலைக்கு இதுதான் காரணம்! அதிர்ச்சி தகவல்!

கோவை டிஐஜி விஜய்குமார் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக முதல் தகவல் அறிக்கை வெளியாகியுள்ளது. 

2 Min read
vinoth kumar
Published : Jul 08 2023, 09:01 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15

கடந்த ஜனவரி மாதம் கோவை சரக காவல்துறை துணைத் தலைவராக பொறுப்பேற்றுக் கொண்ட விஜயகுமார் மிகச் சிறப்பான முறையில் பணியாற்றி வந்தார். இந்நிலையில், நேற்று காலை கோவையில் உள்ள முகாம் அலுவலகத்தில் பாதுகாவலர் ரவி என்பவருடைய துப்பாக்கியை வாங்கி  டிஐஜி விஜயகுமார் தன்னைத்தானே சுட்டுக் கொண்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இவரது திடீர் தற்கொலை தமிழகம் முழுவதும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது.

25


இந்நிலையில் டிஐஜி விஜய்குமார் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக முதல் தகவல் அறிக்கை வெளியாகியுள்ளது. அதில்,  இரவில் சரியான தூக்கம் வரவில்லை என்பதால்  நீண்ட நாட்களாக தூக்க மாத்திரை எடுத்துக்கொண்டு வந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதுதொடர்பாக டிஐஜியின் பாதுகாவலர் ரவிச்சந்திரனின் வாக்குமூலமும் அந்த முதல் தகவல் அறிக்கையில் வெளியாகியுள்ளது. அதில், கோவை சரகத்திற்கு ஜனவரி மாதம் வந்ததிலிருந்து சரியான தூக்கம் வரவில்லை என்று மாத்திரை எடுத்துக்கொள்வார். நான் முகாம் அலுவலகத்தில் எனக்கு ஒதுக்கப்பட்ட அறையிலேயே தங்கியிருந்தேன். வழக்கம்போல் எப்போதும் டிஐஜி காலை 07.00 மணிக்கு DSR பார்ப்பதற்காக கீழே உள்ள DSR ROOMக்கு வருவார். நேற்று 06.30 மணிக்கெல்லாம் டிஐஜி கீழே வந்துவிட்டார்.

35

முகாம் அலுவலகத்தில் அலுவலில் இருந்த காவலர் ரவிவர்மாவிடம் குடிப்பதற்கு பால் கேட்டார். அவர் உடனே பால் காய்ச்சிக்கொடுத்தார். பின்பு காலை 06.40 மணியளவில் பாலை குடித்துவிட்டு நான் தங்கியிருக்கும் அறைக்கே டிஐஜி வந்து DSR கேட்டார். நான் DSR எடுத்துக்கொடுத்தேன். அப்போது நான் தங்கியிருந்த அறையில் நான் எப்போதும் போல் துப்பாக்கி வைத்திருக்கும் இடத்திற்கு சென்று என்னுடைய துப்பாக்கியை எடுத்தவர் இதை எவ்வாறு பயன்படுத்துவது என்று என்னிடம் பேசிக்கொண்டே அறையை விட்டு வெளியே சென்றார். 

45

நான் T-SHIRT போட்டுட்டு வெளியே வருவதற்குள் துப்பாக்கி வெடிக்கும் சத்தம் கேட்டு நானும் என்னுடன் அறையில் இருந்த CAMP OFFICE டிரைவர் அன்பழகனும் வெளியே ஓடி வந்து பார்த்தோம். அப்போது டிஐஜி மல்லாந்த நிலையில் தலையில் இரத்த காயத்துடன் கீழே விழுந்து கிடந்தார். துப்பாக்கி அங்கேயே கிடந்தது. 

55

இதனையடுத்து,  கோவை அரசு மருத்துவமனைக்கு சுமார் 7 மணியளவில் கொண்டு சென்ற போது அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்.  மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் போதே  உயர் அதிகாரிக்களுக்கு சம்பவம் குறித்து தகவல் தெரிவித்தேன். என்ன காரணத்திற்காக டிஐஜி சுட்டு கொண்டார் என்று தெரியவில்லை என தெரிவித்துள்ளார். 

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.

Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved