MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • இரவு 11 முதல் மாறி மாறி அதிகாலை 3.30 மணி வரை! கோவையில் கல்லூரி மாணவி விவகாரத்தில் அடுத்தடுத்து அதிர்ச்சி

இரவு 11 முதல் மாறி மாறி அதிகாலை 3.30 மணி வரை! கோவையில் கல்லூரி மாணவி விவகாரத்தில் அடுத்தடுத்து அதிர்ச்சி

கோவை கல்லூரி மாணவி மற்றும் அவரது நண்பரை தாக்கி, மாணவியை மூன்று பேர் கொண்ட கும்பல் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்தது. இது தொடர்பாக 7 தனிப்படைகள் அமைத்து விசாரித்த போலீசார், குற்றவாளிகள் 3 பேரையும் துப்பாக்கியால் சுட்டுப் பிடித்தனர்.

2 Min read
vinoth kumar
Published : Nov 05 2025, 08:45 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
கல்லூரி மாணவி கூட்டு பாலியல் பலாத்காரம்
Image Credit : Getty

கல்லூரி மாணவி கூட்டு பாலியல் பலாத்காரம்

கோவை விமான நிலையம் அருகே பிருந்தாவன் நகரில் கடந்த ஞாயிற்றுகிழமை இரவு காரில் ஆண் நண்பருடன் பேசிக்கொண்டிருந்த தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்த மாணவி பேசிக்கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக மதுபோதையில் வந்த மூன்று இளைஞர்கள் இருவரும் காரில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்ததை பார்த்தனர். பின்னர் முதலில் கார் கண்ணாடி உடைத்து அந்த ஆண்பரை காரில் இருந்து வெளியே இழுத்து போட்டு அரிவாளால் வெட்டி விட்டு அந்த கல்லூரி மாணவியை புதருக்கு தூக்கிச் சென்று மாறி மாறி கூட்டு பாலியல் பலாத்காரம் செய்துவிட்டு அங்கிருந்து தப்பித்தனர்.

26
 புதருக்குள் ஆடைகள் கலைந்த நிலையில் மாணவி
Image Credit : Asianet News

புதருக்குள் ஆடைகள் கலைந்த நிலையில் மாணவி

இந்த சம்பவத்தில் தொடர்பாக மயக்கத்தில் இருந்த ஆண் நண்பர் எழுந்து போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு நடந்த சம்பவத்தை கூறியுள்ளார். இதனையடுத்து உடனே சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் அப்பகுதியில் சில மணி நேரங்களாக தேடியுள்ளனர். பின்னர் புதருக்குள் ஆடைகள் கலைந்த நிலையில் இருந்த இளம்பெண் மற்றும் ஆண் நண்பரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Related Articles

Related image1
அண்ணா.. ப்ளீஸ்.. என்ன விட்டுடுங்க! கதறிய கோவை கல்லூரி மாணவி! விடாத கொடூரன்கள்! இரவோடு இரவாக சுட்டுப்பிடித்தது எப்படி?
Related image2
கல்லூரி மாணவியை கொடூரமா வேட்டையாடி இருக்காங்க! முதல்வர் 36 மணி நேரம் கழித்து கருத்து சொல்றாரு! சீறிய அன்புமணி!
36
திருட்டு மொபட்
Image Credit : Asianet News

திருட்டு மொபட்

இளைஞர் அளித்த புகாரின் பேரில், பீளமேடு போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்தனர். குற்றவாளிகளை பிடிக்க, மாநகர காவல் ஆணையர் உத்தரவின்பேரில் 7 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பிச் செல்லும் போது, தாங்கள் வந்த மொபட்டை அங்கேயே நிறுத்திச் சென்றனர். போலீஸாரின் விசாரணையில் அது திருட்டு மொபட் எனத் தெரிந்தது.

46
சுட்டு பிடித்த போலீஸ்
Image Credit : Getty

சுட்டு பிடித்த போலீஸ்

இந்நிலையில், கூட்டு பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்ட குற்றவாளிகள் 3 பேர் கோவை துடியலூர் அருகே உள்ள வெள்ளக்கிணறு பகுதியில் பதுங்கியிருப்பது தெரிந்தது. இதையடுத்து நள்ளிரவு வெள்ளக்கிணறு பகுதியில், குற்றவாளிகள் பதுங்கியிருந்த இடத்தை சுற்றி வளைத்தனர். இதனையடுத்து போலீசாரை தாக்கிவிட்டு தப்பிக்க முயற்சித்தனர். இதையடுத்து போலீசார் 3 பேரையும் காலிலும் சுட்டுப் பிடித்தனர். இவர்கள் சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த சதீஷ் என்ற கருப்புசாமி (30), கார்த்திக் என்ற காளீஸ்வரன் (21), குணா என்ற தவசி (20) என்பது தெரிந்தது. பின்னர் மூவரையும் கைது செய்த போலீசார் அவர்களை சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதில் கருப்புசாமி, காளீஸ்வரன் ஆகியோர் அண்ணன் - தம்பிகள் என்பது தெரியவந்தது.

56
பாதிக்கப்பட்ட மாணவி நலம்
Image Credit : Asianet News

பாதிக்கப்பட்ட மாணவி நலம்

மேலும் இவர்கள் மீது கிணத்துக்கடவு காவல் நிலையத்தில் கொலை வழக்கு உள்ளது. கைதானவர்களிடம் இருந்து மாணவியின் செல்போன், மோதிரம் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன. பாதிக்கப்பட்ட மாணவியும் சிகிச்சைக்கு பின்னர் உடல்நிலை தேறி வருவதாகவும் அவருக்கு கவுன்சலிங் அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. குற்றவாளிகள் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டதாக மாநகர காவல் ஆணையர் தெரிவித்தார்.

66
விடாமல் மாறி மாறி பலாத்காரம்
Image Credit : iSTOCK

விடாமல் மாறி மாறி பலாத்காரம்

இந்நிலையில் தற்போது மற்றொரு அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. அதாவது கோவையில் கல்லூரி மாணவியை இரவு 11 மணிக்கு தொடங்கி அதிகாலை சுமார் 3.30 மணி வரை மாறி மாறி பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்துள்ளது. காரில் இருந்த இளம்பெண்ணை 300 மீ. தொலைவில் உள்ள மோட்டார் அறைக்கு தூக்கிச் சென்று வன்கொடுமை செய்ததும் தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
குற்றம்
தமிழ்நாடு குற்றச் செய்திகள்
காவல்
கோயம்புத்தூர்
Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved