MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • ஒரே இடத்தில் படிக்கவும் செய்யலாம்.! வேலையும் பார்க்கலாம்.! சூப்பர் திட்டத்தை தொடங்கிய தமிழக அரசு

ஒரே இடத்தில் படிக்கவும் செய்யலாம்.! வேலையும் பார்க்கலாம்.! சூப்பர் திட்டத்தை தொடங்கிய தமிழக அரசு

தமிழக அரசு, போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் இளைஞர்களுக்காகவும், தொழில் தொடங்க இடமில்லாதவர்களுக்காகவும்  'முதல்வர் படைப்பகம்' ஒன்றைத் திறந்துள்ளது. இங்கு படிப்பு மற்றும் பணிக்குத் தேவையான அனைத்து வசதிகளும், இணைய வசதியுடன் கூடிய நூலகமும் உள்ளன.

2 Min read
Ajmal Khan
Published : Nov 04 2024, 03:20 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14

தமிழக அரசின் கல்விக்கான திட்டங்கள்

தமிழக அரசு சார்பாக பல்வேறு மக்கள் நல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் கல்விக்கும், வேலை வாய்ப்புக்கும் முக்கியத்துவம் வழங்கி வருகிறது.  அரசு பணி தேர்வுக்கு தயாராகும் வகையில் சிறப்பு பயிற்சி வழங்கி வருகிறது. மேலும்  UPSC, TNPSC போன்ற பல்வேறு வகையான போட்டித் தேர்வுகளில் கலந்து கொள்ள  முடியாமல் தவிக்கும் இளைஞர்களுக்காக புதிய திட்டத்தை தமிழக அரசு தொடங்கியுள்ளது.

 சென்னை, கொளத்தூர், அகரம், ஜெகநாதன் தெருவில் வடசென்னை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் பெருநகர சென்னை மாநகராட்சி மற்றும் சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமம் இணைந்து 2.85 கோடி ரூபாய் செலவில்

24

முதல்வர் படைப்பகம்

பகிர்ந்த பணியிட மையம் எனப்படும் "Co-working Space" மற்றும் மாணவர்களுக்கான "கல்வி மையம்" என அனைத்து உள்கட்டமைப்பு வசதிகளுடன் கூடிய முதல்வர் படைப்பகத்தை  தமிழ்நாடு முதலமைச்சர் திறந்து வைத்தார். முதல்வர் படைப்பகத்தில் UPSC, TNPSC போன்ற பல்வேறு வகையான போட்டித் தேர்வுகளில் கலந்து கொள்ளும் மாணவர்கள், இங்கு வந்து படித்து பயன்பெறும் வகையில் அவர்களுக்கு தேவையான அனைத்து போட்டித் தேர்வுக்கான புத்தகங்களும் இடம் பெற்றுள்ளன.

34

இடையூறுயின்றி படிக்க ஏற்பாடு

மேலும், மாணவர்கள் எந்த இடையூறுமின்றி படிக்கும் வகையில் அமைதியான சூழலும், நீண்ட நேரம் படிப்பதற்கு உகந்த இருக்கைகள், கணினி மற்றும் இணையதள வசதியும் செய்து தரப்பட்டுள்ளன. இங்கு ஒரே நேரத்தில் 51 நபர்கள் அமர்ந்து படிக்கும் வகையில் இவ்விடம் அமையப் பெற்றுள்ளது. 

அத்துடன், போதிய இடவசதி இல்லாத காரணத்தினால் தொழில் தொடங்கிட இயலாத பெண்களுக்கும். ஆண்களுக்கும் தொழில் தொடங்குவதற்கு ஏதுவாக கோ ஒர்க்கிங் ஸ்பேஸ் எனப்படும் பணி செய்வதற்காக ஒரு தளம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த தளத்தில் 38 நபர்கள் முறையாக அமர்ந்து பணி செய்வதற்கான நல்ல சூழல் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
 

44

பணி செய்வதற்காகவே ஒரு தளம்

அதுமட்டுமன்றி 3 கலந்தாய்வு கூடங்களும், அதில் இரண்டு கூடத்தில் தலா 4 நபர்களும், ஒரு கூடத்தில் 6 நபர்களும் அமர்ந்து கலந்தாலோசனை மேற்கொள்ளும் வகையிலும். உணவு அருந்தி இளைப்பாறுவதற்காக ஒரு தளமும், என மொத்தம் மூன்று தளங்கள் அமைக்கப்பட்டுள்ளன. சென்னையிலேயே முதல் முறையாக கொளத்தூரில் தமிழ்நாடு அரசின் சார்பில் இத்தகைய சிறப்பு வாய்ந்த "முதல்வர் படைப்பகம்" உருவாக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

About the Author

AK
Ajmal Khan
அஜ்மல்கான், பிரபல தொலைக்காட்சிகளில் மூத்த மற்றும் சிறப்பு செய்தியாளராக பணிபுரிந்துள்ளார். 20வருடங்களாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர், கடந்த 3 ஆண்டுகளாக ஏசியா நெட் இணையதளத்தில் தமிழ்நாடு மற்றும் அரசியல் சார்ந்த செய்திகளையும் எழுதி வருகிறார்.
மு. க. ஸ்டாலின்
தமிழ்நாடு அரசு

Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved