ஆண் காவலர்களுக்கு 1 சல்யூட்.. பெண் காவலர்களுக்கு 2 சல்யூட் - முதல்வர் பேச்சு !
பெண் காவலர்களுக்கு 9 முக்கிய வரலாற்று சிறப்புமிக்க அறிவிப்புகளை வெளியிட்டார் முதல்வர் மு.க ஸ்டாலின்.
சென்னையில் நேரு உள் விளையாட்டு அரங்கில் தமிழ்நாடு காவல்துறையில் மகளிர் காவலர்கள் பொன்விழா ஆண்டு நிகழ்ச்சி நடைபெற்றது. இவ்விழாவில் கலந்துகொண்டு உரையாற்றிய முதலமைச்சர், ரூ. 8.5 கோடி செலவில் பெண்கள், குழந்தைகள் விழிப்புணர்வுக்கான “அவள்” திட்டத்தை தொடங்கி வைத்தார்.
பின்பு பெண் காவலர்களுக்கு முதல்வர் மு.க ஸ்டாலின் வெளியிட்ட நவரத்தின அறிவிப்புகளை வெளியிட்டார். அவை பின்வருமாறு,
* பெண் காவலர்களுக்கு கலைஞர் பெயரில் கலைஞர் காவல் கோப்பை விருது வழங்கப்படும்.
* காவல் குழந்தைகள் காப்பகம் மேம்படுத்தப்படும்.
* காவல்துறையில் பெண்கள் என்னும் தேசிய மாநாடு தமிழ்நாட்டில் நடத்தப்படும்.
* ரோல்கால் எனும் காவல் அணி வகுப்பு இனி காலை 7 மணிக்கு பதிலாக 8 மணி என மாற்றப்படும்.
* சென்னை, மதுரையில் பெண் காவலர்கள் தாங்கும் விடுதி விரைவில் அமைக்கப்படும்.
* பெண்களுக்கு துப்பாக்கிசூடும் போட்டி தனித்தனியாக நடத்தப்பட்டு, விருது, பரிசுகள் வழங்கப்படும்.
* அனைத்து காவல் நிலையங்களிலும் பெண் காவலர்களுக்கு தனி ஓய்வறை அமைத்து தரப்படும்.
* டிஜிபி அலுவலகத்தில் பணி வழிகாட்டும் ஆலோசனை குழு உருவாக்கப்படும்.
* பெண் காவலர்களின் குடும்ப சூழலுக்கு ஏற்ப விடுப்பு, பணியிட மாறுதல் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என முதலமைச்சர் அறிவித்துள்ளார்.
இதையும் படிங்க..கர்ப்பிணி பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த கணவன்.. வீடியோ எடுத்த மனைவி.. என்ன நடந்தது.?