MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • மிஸ் பண்ணாதீங்க.! புனித யாத்திரை செல்ல 5ஆயிரம் ரூபாய் மானியம்.! தமிழக அரசு சூப்பர் அறிவிப்பு

மிஸ் பண்ணாதீங்க.! புனித யாத்திரை செல்ல 5ஆயிரம் ரூபாய் மானியம்.! தமிழக அரசு சூப்பர் அறிவிப்பு

தமிழக அரசு, பௌத்தர்கள் நாக்பூரில் நடைபெறும் தம்ம சக்கர பரிவர்தன திருவிழாவிற்குச் சென்று திரும்ப 150 பேருக்கு ரூ.5,000 மானியம் வழங்குகிறது. விண்ணப்பிக்க கடைசி தேதி நவம்பர் 30, 2025.

1 Min read
Ajmal Khan
Published : Jul 28 2025, 01:06 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
புனித பயணத்திற்கு மானியம்
Image Credit : our own

புனித பயணத்திற்கு மானியம்

தமிழ்நாடு அரசு வழங்கும் புனித பயணத்திற்கு பல்வேறு நிதி உதவி திட்டம் திட்டத்தினை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் புத்த, சமண மற்றும் சீக்கிய மதத்தைச் சேர்ந்தவர்கள் தங்கள் மதங்களுக்குரிய புனித தலங்களுக்கு பயணம் மேற்கொள்ள உதவுவதற்காக இந்த திட்டமானது செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் 120 பேருக்கு நிதி உதவி வழங்கி வருகிறது. 

ஒரு நபருக்கு ரூ.10,000/- மானியமாக வழங்கப்படுகிறது. அந்த வகையில் 50 புத்த மதத்தினர், 50 சமண மதத்தினர், மற்றும் 20 சீக்கிய மதத்தினர் ஆகிய 120 பேருக்கு ஆண்டுக்கு ரூ.12 இலட்சம் நிதி உதவி வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தில் பயன்பெற விண்ணப்பிக்குமாறு தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டிருந்தது.

24
பௌத்தர்கள் புனித யாத்திரை
Image Credit : tndipr

பௌத்தர்கள் புனித யாத்திரை

இந்த நிலையில் தற்போது பௌத்தர்கள் புனித யாத்திரைக்கு மானியம் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தமிழக அரசின் பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், பௌத்தர்கள் புனித யாத்திரைக்கு மானியம் பெற விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 2025-26 ஆம் ஆண்டில் நாக்பூரில் நடைபெறும் தம்ம சக்கர பரிவர்தன திருவிழாவிற்குச் சென்று திரும்பும் 150 பௌத்தர்களுக்கு, தமிழக அரசு தலா ரூ. 5,000 வரை மானியம் வழங்கப்பட இருப்பதாக கூறப்பட்டுள்ளது.

Related Articles

Related image1
அடி தூள்.! குடும்பத்தலைவிகள் அனைவருக்கும் மாதம் 1000 ரூபாய்.! குட் நியூஸ் சொன்ன முதலமைச்சர்
Related image2
இனி மாணவர்களுக்கு ஜாலி தான்.! அசத்தலான திட்டத்தை அறிமுகம் செய்யப்போகுது தமிழக அரசு
34
யார் விண்ணப்பிக்கலாம்?
Image Credit : Getty

யார் விண்ணப்பிக்கலாம்?

யார் விண்ணப்பிக்கலாம்?

பௌத்த மக்கள் இந்த மானியத்திற்கு விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பப் படிவம் எங்கே கிடைக்கும்?

மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் கட்டணமின்றிப் பெற்றுக்கொள்ளலாம். (அ) www.bcmbcmw.tn.gov.in என்ற இணையதளத்திலும் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

விண்ணப்பிக்க கடைசி தேதி: நவம்பர் 30, 2025

44
விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய முகவரி
Image Credit : Getty

விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய முகவரி

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை தேவையான ஆவணங்களுடன் கீழ்வரும் முகவரிக்கு அனுப்பவும்:

ஆணையர்,சிறுபான்மையினர் நலத்துறை, கலசமஹால் பாரம்பரியக் கட்டிடம், முதல் தளம், சேப்பாக்கம், சென்னை 600 005. எனவே இந்த அரிய வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ளுங்கள் என அந்த அறிவிப்பில் தமிழக அரசு கேட்டுக்கொண்டுள்ளது.

About the Author

AK
Ajmal Khan
அஜ்மல்கான், பிரபல தொலைக்காட்சிகளில் மூத்த மற்றும் சிறப்பு செய்தியாளராக பணிபுரிந்துள்ளார். 20வருடங்களாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர், கடந்த 3 ஆண்டுகளாக ஏசியா நெட் இணையதளத்தில் தமிழ்நாடு மற்றும் அரசியல் சார்ந்த செய்திகளையும் எழுதி வருகிறார்.
தமிழ்நாடு அரசு
கோவில் நிகழ்வுகள்
பௌத்தம்
சுற்றுலா

Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved