MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • ஒரே போன் கால்! அலறியடித்துக்கொண்டு எடப்பாடி பழனிசாமி வீட்டுக்குள் நுழைந்த போலீஸ்! நடந்தது என்ன?

ஒரே போன் கால்! அலறியடித்துக்கொண்டு எடப்பாடி பழனிசாமி வீட்டுக்குள் நுழைந்த போலீஸ்! நடந்தது என்ன?

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பாஜக தலைவர்களுடன் எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டார். சேலம் வந்தடைந்த அவரது வீட்டில் வெடிகுண்டு மிரட்டல் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. 

1 Min read
vinoth kumar
Published : May 26 2025, 08:00 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி
Image Credit : Google

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி

அதி​முக பொதுச்செய​லா​ள​ரும், எதிர்க்​கட்சித் தலை​வரு​மான எடப்பாடி பழனி​சாமி. இவர் சேலத்தில் இருந்து கோவை வந்த அவருக்கு முன்னாள் அமைச்சர்கள் கட்சி நிர்வாகிகள் வரவேற்பு அளித்தனர். பின்னர் கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் முன்னாள் அமைச்சரும் உடுமலை தொகுதியின் எம்எல்ஏவுமான உடுமலை ராதாகிருஷ்ணனின் இல்ல காதணி விழா விமர்சியாக நடைபெற்றது. இதில் அதிமுக பொதுச்செயலாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு வாழ்த்தினார்.

24
எடப்பாடி பழனிசாமி - நயினார் நாகேந்திரன்
Image Credit : Google

எடப்பாடி பழனிசாமி - நயினார் நாகேந்திரன்

அதே சமயம் இந்த விழாவில் கலந்துகொள்ள பாஜக தலைவர்கள் பலரும் அழைக்கப்பட்டிருந்தனர். இதனையடுத்து, இந்த விழாவில், தமிழக பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், மத்திய அமைச்சர் எல்.முருகன், கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் ஆகியோர் கலந்துகொண்டனர். ஒரே மேடையில் எடப்பாடி பழனிசாமியும் நயினார் நாகேந்திரனும் அருகருகே நின்று குழந்தைக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

Related Articles

Related image1
உதயநிதி ரொம்ப ஆடக்கூடாது, அடக்கி பேச வேண்டும் விலை கொடுக்க வேண்டி இருக்கும்-எச்சரிக்கும் எச்.ராஜா
Related image2
35 ஆண்டுகளுக்கும் மேலாக தொடரும் பேரழி! ஆண்மைக் குறைவு உள்ளிட்ட நோயால் அதிக பாதிப்பு! அன்புமணி பகீர்!
34
வெடிகுண்டு மிரட்டல்
Image Credit : Google

வெடிகுண்டு மிரட்டல்

பின்னர் கோவை​யில் இருந்து நேற்று மாலை 7 மணி அளவில் சேலம் சூரமங்​கலம் நெடுஞ்​சாலை நகரில் உள்ள அவரது இல்​லத்​துக்கு வந்​தார். இந்​நிலை​யில் அவரது வீட்​டில் வெடிகுண்டு இருப்​ப​தாக சென்​னை​யில் உள்ள காவல்​துறை கட்​டுப்​பாட்டு அலு​வல​கத்​துக்கு தகவல் வந்​தது. உடனே இதுதொடர்பாக சேலம் மாநகர காவல் துறை அலு​வல​கத்​துக்கு தகவல் தெரிவிக்​கப்​பட்​டது.

44
மோப்ப நாய் உதவியுடன் சோதனை
Image Credit : our own

மோப்ப நாய் உதவியுடன் சோதனை

இதனையடுத்து எடப்பாடி பழனிசாமி வீடு மற்றும் கார் ஷெட் உள்ளிட்ட இடங்களில் மோப்ப நாய் உதவியுடன் வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் போலீசார் சோதனை நடத்தினர். இந்த சோதனையில் வெடிபொருட்கள் எதுவும் சிக்காததால், காவல்துறைக்கு கிடைத்த தகவல் பொய்யானது என்றும் புரளி என தெரியவந்தது. வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த மாதம் இதேபோன்று சென்னையில் உள்ள எடப்பாடி பழனிசாமி இல்லத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த சம்பவம் குறிப்பிடத்தக்கது.

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
அரசியல்
அதிமுக பாஜக கூட்டணி
எடப்பாடி பழனிசாமி

Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved