MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • TASMAC Shop: டாஸ்மாக் கடைகளில் புதிய மாற்றம்! இனி ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது! குஷியில் குடிமகன்கள்!

TASMAC Shop: டாஸ்மாக் கடைகளில் புதிய மாற்றம்! இனி ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது! குஷியில் குடிமகன்கள்!

 TASMAC Shops Digital Bills: தமிழகத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளிலும் மது பாட்டில்களுக்கு பில் வழங்கும் நடைமுறை விரைவில் அமலுக்கு வர உள்ளது.

2 Min read
vinoth kumar
Published : Oct 01 2024, 11:07 AM IST| Updated : Oct 01 2024, 11:17 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
TASMAC

TASMAC

தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை அரசே எடுத்து நடத்தி வருகிறது. தமிழகத்தில் மொத்தம் 4,829 டாஸ்மாக் கடைகள் மூலம் மதுபானம் விற்பனை செய்யப்படுகிறது. குறிப்பாக தமிழகத்தில் பல்வேறு துறைகள் இருந்தாலும் வருமானத்தை கொட்டி கொடுக்கும் துறையாக டாஸ்மாக் நிறுவனம் இருந்து வருகிறது. நாள் ஒன்றுக்கு சராசரியாக 121 கோடியும், மாதம் 3,698 கோடியும் மது விற்பனை நடைபெறுகிறது. இந்நிலையில் டாஸ்மாக் கடைகளில் விற்கப்படும் மதுபானங்கள் எம்ஆர்பி விலையை விட அதிக விலைக்கு விற்கப்படுவதாக தொடர்ந்து புகார்கள் வந்தன. 

25
TASMAC Shop

TASMAC Shop

இதனால் டாஸ்மாக் கடைகளில் விற்பனையாளர் மற்றும் குடிமகன்களுக்கு இடையே அவ்வப்போது பிரச்சனை ஏற்பட்டு வந்தது. இதனை தடுக்கும் வகையில் கூடுதல் விலைக்கு மது விற்பதை தடுக்கவும், தவறுகள் நடக்காமல் வெளிப்படையாக விற்பனை செய்யவும் அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தது. மேலும் கூடுதல் விலைக்கு மது விற்கும் ஊழியர்கள் கண்டறிந்து பணிநீக்கம் செய்யப்பட்டு வந்தனர். 

இதையும் படிங்க: School Student: பள்ளி மாணவர்களுக்கு ரூ.15,000! அக்டோபர் 30ம் தேதி வரை கடைசி நாள்!

35
Tasmac Digital Bills

Tasmac Digital Bills

இந்நிலையில் இதனை முற்றிலுமாக தடுக்கும் வகையில் ஒவ்வொரு பாட்டிலுக்கும் பில் வழங்கும் நடைமுறையை கொண்டு வர திட்டமிடப்பட்டு கணினி மற்றும் டிஜிட்டல் தொழில்நுட்ப வசதிகளை டாஸ்மாக் கடைகளில் கொண்டு வர முடிவு செய்யப்பட்டது. குறிப்பாக டாஸ்மாக் கடைகளில் விற்பனை செய்யப்படும் மது பாட்டில்களுக்கு ரசீது வழங்குதல், மதுபாட்டில்களில் பார்கோட் அச்சிட்டு அதன் மூலம் தொடர்ச்சியாக கண்காணிப்பது உள்ளிட்ட நடவடிக்கைகளை நிர்வாகம் மேற்கொண்டது. இதற்காக மென்பொருள் தயாரிக்க மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான ரயில்டெல் நிறுவனத்துக்கு ரூ.294 கோடி மதிப்பிலான பணி ஆணை வழங்கப்பட்டுள்ளது. 

இதையும் படிங்க:  KS Masthan: செஞ்சி மஸ்தானின் அமைச்சர் பதவி பறிப்புக்கு இதுதான் காரணமா? அதுவும் ஒரே மாவட்டத்தில் இப்படியா?

45
TASMAC Bill

TASMAC Bill

இந்நிலையில் டாஸ்மாக் கணினிமயமாக்கும் பணிகள் நிறைவு பெற்றுள்ளதை அடுத்து டாஸ்மாக் கடைகளில் மது பாட்டில்களுக்கு பில் வழங்கும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. சோதனை அடிப்படையில் முதற்கட்டமாக ராணிப்பேட்டையில் உள்ள 7 கடைகளில் இப்பணி நடைபெற்று வருகிறது. டாஸ்மாக் கடைகளில் உள்ள விற்பனையாளர்கள் கையடக்க ஸ்கேனர் மூலம் ஒவ்வொரு பாட்டிலிலும் உள்ள கலால் வரியுடன் கூடிய லேபிள்களை ஸ்கேன் செய்து பில் ரசீதுகளை வாடிக்கையாளரிடம் வழங்குகின்றனர். மதுபாட்டில்களை ஸ்கேன் செய்தால், அந்த பாட்டில் எங்கே வாங்கப்பட்டது, எந்த தேதியில் வாங்கப்பட்டது, இது எந்த பேட்ச்சை சேர்ந்தது, மதுபான ஆலையில் இருந்து எப்போது வெளியே கொண்டு வரப்பட்டது போன்ற பல்வேறு விவரங்களை தெரிந்து கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. 

இதையும் படிங்க:  October Month School Holidays: பள்ளி மாணவர்களுக்கு குட்நியூஸ்! அக்டோபர் மாதத்தில் 15 நாட்கள் விடுமுறை!

55
Tasmac liquor sale

Tasmac liquor sale

மது பாட்டில்களுக்கு பில் வழங்கும் நடைமுறை முதலில் நகரம் மற்றும் மாவட்டங்களில் உள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட கடைகளில் தொடங்கப்படும். இது குறைபாடுகளைக் கண்டறிய உதவும். அனைத்து சிக்கல்களும் தீர்க்கப்பட்டவுடன், விரைவில் அனைத்து கடைகளிலும் செயல்படுத்தப்படும். ஒருவேளை மதுபாட்டிலை ஸ்கேன் செய்யாமல் விற்பனையாளர் விற்று விட்டால், மதுபாட்டில்கள் இருப்பை ஆடிட்டிங் செய்யும் போது மாட்டிக் கொள்வர். அப்போது கணக்கு வழக்கில் சிக்கல் வரும். தற்போது பில் நடைமுறை இல்லாத சூழலில், புதிய திட்டத்தின் படி வரவு, செலவு கணக்குகள் சரியான முறையில் பராமரிக்க உதவி செய்யும். டாஸ்மாக் கடைகளில் வாங்கும் மதுவுக்கு பில் கிடைக்கும் என்ற அறிவிப்பு மது பிரியர்கள் மத்தியில் மகிழ்ச்சியில் ஏற்படுத்தியுள்ளது.

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
டாஸ்மாக்
தமிழ்நாடு அரசு

Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved