- Home
- Tamil Nadu News
- மகளிருக்கு குஷி.! ஒன்றரை லட்சம் ரூபாயை அள்ளிக்கொடுக்கும் தமிழக அரசு.! உடனே விண்ணப்பிக்க அழைப்பு
மகளிருக்கு குஷி.! ஒன்றரை லட்சம் ரூபாயை அள்ளிக்கொடுக்கும் தமிழக அரசு.! உடனே விண்ணப்பிக்க அழைப்பு
தமிழக அரசு மகளிர் முன்னேற்றத்திற்காக சிறந்த சமூக சேவகர்கள் மற்றும் தொண்டு நிறுவனங்களுக்கு விருதுகள் வழங்குகிறது. விருதுக்கான ரொக்கப் பரிசு மற்றும் விண்ணப்பிக்கும் முறை குறித்த தகவல்கள் இங்கே.

மகளிர்களுக்கான தமிழக அரசின் திட்டங்கள்
மகளிர் முன்னேற்றத்திற்காக தமிழக அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில், மகளிர் உரிமை தொகை, விடியல் பயண திட்டம், மானிய உதவி, சொந்த தொழில் தொடங்க கடன் உதவி திட்டம் போன்றவை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் மகளிர் முன்னேற்றத்திற்காக பாடுபட்டவர்களுக்கு ரொக்கப்பரிசு மட்டுமல்லாமல் சுதந்திர தினவிழாவில் கவுரவிக்கப்படுகிறது.
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், சுதந்திர தின விழாவின் போது, பெண்களின் முன்னேற்றத்திற்கு சிறந்த சேவை புரிந்த சமுக சேவகர் (ம) தொண்டு நிறுவனத்திற்கான விருதுகள் தமிழ்நாடு அரசால் ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்பட்டு வருகிறது.
சிறந்த சமூக சேவகருக்கான விருதுகள்
சிறந்த சமூக சேவகருக்கு ரூ.50,000/- ரொக்கப்பரிசு (ம) சான்று வழங்கப்படும். சிறந்த தொண்டு நிறுவனத்திற்கு ரூ.1,00,000/- ரொக்கப்பரிசு (ம) சான்று வழங்கப்படும்.
இதனைத் தொடர்ந்து 2025 ஆம் ஆண்டு சுதந்திர தின விழாவின் போது, சிறந்த சமுக சேவகர் (ம) சிறந்த தொண்டு நிறுவனத்திற்கான விருதுகள் வழங்கப்படவுள்ளதால், இவ்விருதுக்கான விண்ணப்ப விவரங்கள் அனைத்தும் 12.05.2025 முதல் தமிழக அரசின் விருதுகள் இணையதளத்தில் (https://awards.tn.gov.in) பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
சிறந்த சமுக சேவகர் (ம) தொண்டு நிறுவனத்திற்கான விருதுகள் பெற தகுதிகள்:
தமிழ்நாட்டை பிறப்பிடமாக கொண்டவராகவும், 18 வயதிற்கு மேற்பட்டவராகவும் இருத்தல் வேண்டும்.
குறைந்த பட்சம் 5 ஆண்டுகள் சமூக நலன் சார்ந்த நடவடிக்கைகள், பெண் குலத்திற்கு பெருமை சேர்க்கும் வகையில் மொழி, இனம், பண்பாடு, கலை, அறிவியல், நிர்வாகம் போன்ற துறைகளில் மேன்மையாக பணிபுரிந்து, மகளிர் நலனுக்காக தொண்டாற்றும் வகையில் தொடர்ந்து பணியாற்றும் சமூக சேவகர் (ம) தொண்டு நிறுவனங்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
நிறுவனம் அரசு அங்கீகாரம் பெற்ற நிறுவனமாக இருத்தல் வேண்டும்.
விருது பெற தேவைப்படும் ஆவணங்கள்
இணையதளத்தில் விண்ணப்பித்தவர்கள் சம்மந்தப்பட்ட மாவட்ட சமூக நல அலுவலகத்தில் நேரில் சென்று ஒப்படைக்க வேண்டியவை :
விண்ணப்பதாரரின் கருத்துரு (Booklet 4) தமிழ்-2, ஆங்கிலம்-2 புத்தக வடிவத்தில் தயாரிக்கப்பட்டு, புகைப்படத்துடன் அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும். மாவட்ட சமூக நல
ஒரு பக்கம் தனியரை பற்றிய விவரம் (Soft copy & Hard copy) தமிழ் (மருதம் எழுத்துருவில்)
இணைப்பு - படிவம் | & II, தமிழ் (மருதம் எழுத்துருவில்) மற்றும் ஆங்கிலம் . (Soft copy & Hard copy)
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள்
எனவே, அனைத்து மாவட்டங்களிலும், பெண்களின் முன்னேற்றத்திற்கு சிறந்த சேவை புரிந்த சமூக சேவகர் (ம) சிறந்த தொண்டு நிறுவனங்கள். இணையதளத்தின் மூலம் வருகின்ற 12.06.2025-க்குள் கருத்துருக்களை சமர்ப்பிக்குமாறு தெரிவிக்கப்படுவதாக அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.