MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் திடீர் திருப்பம்! பிரபல ரவுடியின் 2-வது மகனும் கைது!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் திடீர் திருப்பம்! பிரபல ரவுடியின் 2-வது மகனும் கைது!

பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங்கின் கொலை வழக்கில் புதிய திருப்பமாக நாகேந்திரனின் 2வது மகன் கைது செய்யப்பட்டுள்ளார். 

1 Min read
vinoth kumar
Published : May 07 2025, 09:17 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு

பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த 2024ம் ஆண்டு ஜூலை மாதம் 5ம் தேதி 6 பேர் கொண்ட கும்பலால் கொடூரமாக வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இதுதொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் அப்போது தமிழகம் மட்டுமின்றி தேசிய அளவில் பரபரப்பாக பேசப்பட்டது. முதலில் ஆற்காடு சுரேஷின் கொலைக்கு பழிக்கு பழியாக கொலை நடைபெற்றதாக கூறப்பட்டு வந்த நிலையில் சென்னை காவல் ஆணையர் மாற்றப்பட்டு அருண் பொறுப்பேற்ற பிறகு சினிமாவை மிஞ்சும் வகையில் அடுத்தடுத்து அதிர்ச்சி தகவல் வெளியானது. 

24
பிரபல ரவுடி தாதா நாகேந்திரன் உள்ளிட்ட 27 பேர் கைது

பிரபல ரவுடி தாதா நாகேந்திரன் உள்ளிட்ட 27 பேர் கைது

இந்த கொலை சம்பவம் தொடர்பாக முதல் குற்றவாளியாக ஆயுள் தண்டனை பெற்று வேலூர் சிறையில் உள்ள பிரபல ரவுடி தாதா நாகேந்திரன்,  இரண்டாவது குற்றவாளியாக ரவுடி ஆற்காடு சுரேஷின் தம்பி பொன்னை பாலு, மூன்றாவதாக நாகேந்திரன் மகன் அஸ்வத்தாமன், வழக்கறிஞர்கள் உள்ளிட்ட 25க்கும் மேற்பட்டவர்கள் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இதில் முக்கிய குற்றவாளியான திருவேங்கிடம் போலீசார் என்கவுண்டரில் சுட்டுக்கொல்லப்பட்டார். இதுதொடர்பான வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் நடைபெற்று  வருகிறது. 

Related Articles

Related image1
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு! உயர்நீதிமன்றம் போட்ட அதிரடி சரவெடி உத்தரவு!
Related image2
ஆம்ஸ்ட்ராங் மனைவி பொற்கொடி பகுஜன் சமாஜ் கட்சியில் இருந்து அதிரடி நீக்கம்! என்ன காரணம்? வெளியான தகவல்!
34
ஆயுதங்கள் பதுக்கல்

ஆயுதங்கள் பதுக்கல்

இதனிடையே ரவுடி நாகேந்திரனின் தம்பி ரமேஷ் மற்றும் உறவினர்களின் வீடுகளில் கடந்த ஜனவரி மாதம் 7ம் தேதி போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது, 51 பட்டாக் கத்திகள், 1 வாக்கி டாக்கி பறிமுதல் செய்யப்பட்டது. இதையடுத்து, நாகேந்திரனின் தம்பி ரமேஷ் (44) மற்றும் வியாசர்பாடி சத்தியமூர்த்தி நகரை சேர்ந்த முருகன் (45), தம்பிதுரை என்கின்ற தமிழரசன் (40), தமிழழகன் (39), கிஷோர் (30), சுகுமார் (29), தனுஷ் (28) உள்ளிட்ட 7 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

44
ஆம்ஸ்ட்ராங்கின் 2வது மகன் கைது

ஆம்ஸ்ட்ராங்கின் 2வது மகன் கைது

இந்நிலையில் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் நாகேந்திரனின் 2-வது மகன் அஜித் ராஜுக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, அவர் தலைமறைவானதை அடுத்து அவரை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு போலீசார் தேடி வந்த நிலையில் நேற்று கைது செய்யப்பட்டார். அவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. 
 

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
சென்னை
குற்றம்
கொலை
காவல்

Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved