MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • சென்னை
  • ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு! உயர்நீதிமன்றம் போட்ட அதிரடி சரவெடி உத்தரவு!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு! உயர்நீதிமன்றம் போட்ட அதிரடி சரவெடி உத்தரவு!

Armstrong Murder Case: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள வழக்கறிஞர் ஹரிஹரனை அவரது தாய் சந்திக்க சிறை நிர்வாகம் அனுமதிக்காததால் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு

2 Min read
vinoth kumar
Published : Apr 20 2025, 12:26 PM IST| Updated : Apr 20 2025, 12:29 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Armstrong Murder Case

Armstrong Murder Case

Armstrong Murder Case: பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த 2024ம் ஆண்டு ஜூலை மாதம் 5ம் தேதி 6 பேர் கொண்ட கும்பலால் கொடூரமாக வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை சம்பவம் தொடர்பாக முதல் குற்றவாளியாக பிரபல ரவுடி தாதா நாகேந்திரன், இரண்டாவது குற்றவாளியாக ரவுடி ஆற்காடு சுரேஷின் தம்பி பொன்னை பாலுவும், மூன்றாவதாக நாகேந்திரன் மகன் அஸ்வத்தாமன், வழக்கறிஞர்கள் உள்ளிட்ட 25க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த வழக்கு விசாரணையும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. 

24
Lawyer Hariharan

Lawyer Hariharan

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு

இந்நிலையில் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டவர்களில் வழக்கறிஞர் ஹரிஹரனும் ஒருவர். இவர் புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள தனது மகனை சந்திக்க சிறை நிர்வாகம் அனுமதிக்கவில்லை என்றும் தொலைபேசி மூலம் பேச வாய்ப்பு வழங்கப்படவில்லை எனவும் கூறி ஹரிஹரனின் தாய் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார். 
 

34
chennai high court

chennai high court

ஹரிஹரனின் தாய் ஐகோர்ட்டில் வழக்கு

இந்த மனு நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் எஸ்.காசிராஜன், மனுதாரர் ஒவ்வொரு முறையும் தனது மகனை காண சிறைக்கு செல்லும் போதும் அவருக்கு வாய்ப்பு மறுக்கப்படுகிறது. மற்ற கைதிகளை போல அவரையும் சமமாக நடத்துமாறு உத்தரவிட வேண்டும் என்று வாதிட்டார். 

இதையும் படிங்க: ஆம்ஸ்ட்ராங் மனைவி பொற்கொடி பகுஜன் சமாஜ் கட்சியில் இருந்து அதிரடி நீக்கம்! என்ன காரணம்? வெளியான தகவல்!

44
Chennai high Court Order

Chennai high Court Order

அனைத்து வசதிகளையும் புழல் சிறை நிர்வாகம் வழங்க வேண்டும்

பின்னர் சிறை நிர்வாகம் சார்பில் ஆஜரான அரசு வழக்கறிஞர் ஏ.கோபிநாத், ஹரிஹரனின் பாதுகாப்பு கருதியே அதிக பாதுகாப்பு கொண்ட சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். மனுதாரர் உள்ளிட்ட உறவினர்கள் ஹரிஹரனை சந்திக்க அனுமதிக்கப்படுகிறது. வீடியோ கால், தொலைபேசி வாயிலாகவும் பேச அனுமதிக்கப்படுகிறது என தெரிவித்தார். இதனையடுத்து இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி மற்ற கைதிகளை போல சட்டத்திற்கு உட்பட்டு அனைத்து வசதிகளையும் ஹரிஹரனுக்கு புழல் சிறை நிர்வாகம் வழங்க வேண்டும். இதை சிறைத்துறை டிஜிபி உறுதி செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
சென்னை உயர் நீதிமன்றம்
தமிழ்நாடு
நீதிமன்றம்
குற்றம்
கொலை

Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved