MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • சார் எங்களை காப்பாத்துங்க! போலீஸ் ஸ்டேசனில் கதறிய க.ஜோடி! பதறிய போலீஸ்! இறுதியில் நடந்த அதிர்ச்சி!

சார் எங்களை காப்பாத்துங்க! போலீஸ் ஸ்டேசனில் கதறிய க.ஜோடி! பதறிய போலீஸ்! இறுதியில் நடந்த அதிர்ச்சி!

தூத்துக்குடியைச் சேர்ந்த கள்ளக்காதல் ஜோடியான தங்கவேல்சாமி மற்றும் பார்வதி, குடும்பத்தினர் பிரித்துவிடுவார்கள் என்ற அச்சத்தில் விஷம் அருந்தினர். பின்னர் தங்களைக் காப்பாற்றுமாறு குலசேகரன்பட்டினம் காவல் நிலையத்திற்கு சென்றனர்.

1 Min read
vinoth kumar
Published : Sep 22 2025, 07:57 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
கார் ஓட்டுநர் தங்கவேல்சாமி
Image Credit : Google

கார் ஓட்டுநர் தங்கவேல்சாமி

தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு சாலைப்புதூரைச் சேர்ந்தவர் கார்த்திகேயன். இவருடைய மகன் தங்கவேல்சாமி (28). கார் ஓட்டுநர். இவருக்கு மனைவி மற்றும் இரண்டு மகள்கள் உள்ளனர். தங்கவேல்சாமி கடந்த சில மாதங்களாக நெல்லை வண்ணார்பேட்டையில் உள்ள உறவினரின் வீட்டில் தங்கியிருந்து வேலைக்கு சென்று வந்தார். அப்போது எதிர்வீட்டில் வசித்த வசித்த ஆட்டோ ஓட்டுநர் சுப்பையா மனைவி பார்வதியுடன் (33) தங்கவேல்சாமிக்கு பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் இருவருக்கும் கள்ளக்காதலாக மாறியுள்ளது.

24
விஷம் குடித்த ஜோடி
Image Credit : Asianet News

விஷம் குடித்த ஜோடி

இந்த விவகாரம் நாளடைவில் இரு குடும்பத்தாருக்கும் தெரியவந்ததை அடித்து கண்டித்துள்ளனர். இந்நிலையில் பார்வதி வீட்டை விட்டு வெளியேறி தங்கவேல்சாமியுடன் சென்றார். இதனால் இரண்டு குடும்பத்தாரும் தேடிவந்தனர். மேலும் காவல் நிலையத்தில் புகார் அளிக்கவும் திட்டமிட்டனர். இதனிடையே தங்கவேல்சாமி குலசேகரன்பட்டினத்துக்கு காரில் பார்வதியை அழைத்து சென்றுக்கொண்டிருந்தார். அப்போது நாம் வீட்டுக்கு சென்றால் குடும்பத்தினர் நம்மை வாழ விடமாட்டார்கள் பிரித்து விடுவார்கள் என்பதால் இருவரும் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தனர். அதன்படி தங்கவேல்சாமி, பார்வதி ஆகியோர் விஷத்தை குடித்தனர்.

Related Articles

Related image1
எவ்வளவு சொல்லியும் கேட்காத காதல் மனைவி! கடுப்பான கணவர்! நடந்தது என்ன? பரபரப்பு தகவல்!
Related image2
சென்னையில் காதலன் ரூமுக்கு போன இளம்பெண்! ஃபுல் மப்பில்! பாத்ரூமில் நடந்த அதிர்ச்சி!
34
குலசேகரன்பட்டினம் காவல் நிலையம்
Image Credit : Asianet News

குலசேகரன்பட்டினம் காவல் நிலையம்

இதனால் வாயில் நுரை தள்ளியவாறு உயிருக்கு போராடிய அவர்கள் குலசேகரன்பட்டினம் காவல் நிலையத்துக்கு காரில் சென்றனர். காவல் நிலையத்துக்கு வெளியில் காரை நிறுத்திய அவர்கள் 2 பேரும் நாங்கள் விஷம் குடித்து விட்டோம், எங்களைக் காப்பாற்றுங்கள் என்று கதறியபடி கூறினர். இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த போலீசார் 2 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக குலசேகரன்பட்டினம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அழைத்து சென்றனர்.

44
போலீஸ் விசாரணை
Image Credit : Getty

போலீஸ் விசாரணை

அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக திருச்செந்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் பாதி வழியிலேயே தங்கவேல்சாமி, பார்வதி ஆகிய இருவரும் அடுத்தடுத்து பரிதாபமாக உயிரிழந்தனர். இதுகுறித்து குலசேகரன்பட்டினம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கள்ளக்காதல் ஜோடி காவல் நிலையத்தில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
குற்றம்
காவல் நிலையம்
தமிழ்நாடு

Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved