MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • சென்னை
  • சென்னையில் காதலன் ரூமுக்கு போன இளம்பெண்! ஃபுல் மப்பில்! பாத்ரூமில் நடந்த அதிர்ச்சி!

சென்னையில் காதலன் ரூமுக்கு போன இளம்பெண்! ஃபுல் மப்பில்! பாத்ரூமில் நடந்த அதிர்ச்சி!

சென்னையில், இன்ஸ்டாகிராம் மூலம் பழகிய காதலன் அறையில் மது அருந்திய இளம்பெண், குளியலறையில் வழுக்கி விழுந்து மர்மமான முறையில் உயிரிழந்தார். இதேபோல், விடுதியில் மது அருந்திய கல்லூரி மாணவி ஒருவரும் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

1 Min read
vinoth kumar
Published : Sep 20 2025, 12:18 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம்
Image Credit : Google

இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம்

சென்னை ராயப்பேட்டையை சேர்ந்த 26 வயது இளம்பெண். நந்தனத்தில் உள்ள தனியார் ஆடிட்டர் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு மதுரவாயல் அடுத்த ஆலபாக்கம் பகுதியில் வசித்து வரும் கணேஷ்ராம் என்பவருக்கும் இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியுள்ளது.

24
மது அருந்தி விட்டு சிக்கன் சாப்பிட்டனர்
Image Credit : Pixabay

மது அருந்தி விட்டு சிக்கன் சாப்பிட்டனர்

சேலத்தை சேர்ந்த கணேஷ்ராம் என்ஜினியரிங் படித்து முடித்துவிட்டு சினிமா டைரக்டராக முயற்சி செய்து வருகிறார். இந்நிலையில் நேற்று மாலை வேலை முடிந்ததும் கணேஷ்ராம் தங்கியிருந்த ரூமுக்கு காதலி வந்துள்ளார். பின்னர் இருவரும் சேர்ந்து மது குடித்துள்ளனர். பிறகு இருவரும் சேர்ந்து சிக்கன் சமைத்து சாப்பிட்டனர். சிறிது நேரத்திலேயே அப்பெண்ணுக்கு வாந்தி வந்துள்ளது.

Related Articles

Related image1
நடுவானில் பறந்த போது வந்த மெசேஜ்! அலறிய விமானி! பதறிய பயணிகள்! அவசரமாக சென்னை ஏர்போர்ட்டில் தரையிறக்கம்!
Related image2
தம்பியை எச்சரிக்க அண்ணனை போட்டுதள்ளிய கும்பல்! நடந்தது என்ன? பரபரப்பு தகவல்!
34
போலீஸ் விசாரணை
Image Credit : our own

போலீஸ் விசாரணை

இதனால் பாத்ரூமுக்கு சென்றபோது அங்கே தடுமாறி அலறிய படியே கீழே விழுந்துவிட்டார். இதில் நெற்றியில் பலத்த காயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் சரிந்து இளம்பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதனை சற்று எதிர்பாராத காதலன் கணேஷ்ராம் அதிர்ச்சி அடைந்தார். உடனே இதுதொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் பெண்ணின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

44
மது அருந்தி உயிரிழந்த இளம்பெண்
Image Credit : unsplash

மது அருந்தி உயிரிழந்த இளம்பெண்

அதேபோல் தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்த 19 வயது இளம்பெண் செங்கல்பட்டு மாவட்டம் படூரில் உள்ள தனியார் பல்கலைக்கழகத்தில் 2ம் ஆண்டு படித்து வந்தார். இதற்காக ஏகாட்டூரில் விடுதியில் தங்கியிருந்தார். வார விடுமுறையை கொண்டாட தோழிகளின் அறைக்கு சென்று மது அருந்தியுள்ளார். அப்போது வாந்தி எடுத்து மயக்கம் அடைந்து உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
சென்னை
காவல்
குற்றம்

Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved