MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • ஆவணி மாதத்தில் பத்திர பதிவு செய்யப்போறீங்களா.? பொதுமக்களுக்கு தமிழக அரசின் குஷியான அறிவிப்பு

ஆவணி மாதத்தில் பத்திர பதிவு செய்யப்போறீங்களா.? பொதுமக்களுக்கு தமிழக அரசின் குஷியான அறிவிப்பு

ஆவணி மாத சுப முகூர்த்த தினங்களில் பத்திரப் பதிவு செய்ய விரும்புவோருக்கு கூடுதல் டோக்கன்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று, செப்டம்பர் 4, 2025 அன்று கூடுதல் முன்பதிவு வில்லைகள் வழங்கப்படும்.

2 Min read
Author : Ajmal Khan
Published : Sep 02 2025, 12:02 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
சொந்தமாக நிலம், வீடு வாங்க கனவு திட்டம்
Image Credit : Gemini Ai

சொந்தமாக நிலம், வீடு வாங்க கனவு திட்டம்

சொந்தமாக நிலம் வாங்க வேண்டும். வாடகை வீட்டில் இருந்து சொந்த வீடு வாங்க வேண்டும் என்பது பலரின் கனவு. எனவே நிலத்தையோ, வீடுகளையோ தேடித்தேடி பார்த்து மக்கள் வாங்கி வருகிறார்கள். அதிலும் கூடவே இருக்க போகிற சொத்தை நல்ல நாளில் பத்திர பதிவு செய்ய வேண்டும் என்பது பலரின் திட்டமாக இருக்கும். 

ஆனால் இதே போல பலரும் சுப முகூர்த்த நாளில் பத்திர பதிவு செய்ய திட்டமிடுவார்கள். ஆனால் பத்திர பதிவு அலுவலகத்தில் கூட்டம் நிரம்புவதால் அந்த நாளில் பத்திர பதிவு செய்யாமல் ஏமாற்றத்தோடு மக்கள் திரும்புவார்கள். இந்த நிலையில் கூடுதல் பத்திர பதிவு டோக்கன்கள் ஒதுக்க வேண்டும் என தொடர்ந்து கோரிக்கை வைகக்ப்பட்டு வருகிறது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred
24
நல்ல நாளில் பத்திர பதிவு
Image Credit : Social Media

நல்ல நாளில் பத்திர பதிவு

இதனையடுத்து சுப முகூர்த்தம் உள்ள நல்ல நாளில் கூடுதல் டோக்கன்கள் ஒதுக்கப்படுகிறது. அந்த வகையில் ஆவணி மாதத்தில் பத்திர பதிவு தொடர்பாக முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. இது தொடர்பாக பதிவுத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று ஆவணி மாதத்தில் வரும் சுபமுகூர்த்த தினத்தன்று பொதுமக்கள் பயன்பெறும் வகையில் அனைத்து சார்பதிவாளர் அலுவலகங்களிலும் கூடுதல் முன்பதிவு வில்லைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Related image1
மதுப்பிரியர்களுக்கு ஷாக் செய்தி.! டாஸ்மாக் கடைக்கு வெள்ளிக்கிழமை தமிழகம் முழுவதும் விடுமுறை அறிவிப்பு
Related image2
அடேங்கப்பா.. இலவசமாக 3 சென்ட் நிலம்.! யாருக்கெல்லாம் தகுதி.? விண்ணப்பிப்பது எப்படி.? வெளியான சூப்பர் தகவல்
34
ஆவணி மாத பத்திர பதிவு
Image Credit : google

ஆவணி மாத பத்திர பதிவு

சுபமுகூர்த்த தினங்கள் என கருதப்படும் நாட்களில் அதிகளவில் ஆவணப் பதிவுகள் நடைபெறும் என்பதால் அன்றைய தினங்களில் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று ஆவணப்பதிவுக்காக கூடுதல் முன்பதிவு வில்லைகள் ஒதுக்கீடு செய்யப்படுகிறது. தற்போது ஆவணி மாதத்தில் வரும் சுபமுகூர்த்த தினங்களான 04.09.2025 அன்று அதிகளவில் பத்திரப் பதிவுகள் நிகழும் என்பதால் கூடுதலாக முன்பதிவு வில்லைகள் ஒதுக்கீடு செய்யுமாறு பல்வேறு தரப்பு பொதுமக்களிடமிருந்து கோரிக்கைகள் பெறப்பட்டுள்ளன.

44
பத்திர பதிவு - கூடுதல் டோக்கன் ஒதுக்கீடு
Image Credit : our own

பத்திர பதிவு - கூடுதல் டோக்கன் ஒதுக்கீடு

எனவே, ஆவணி மாதத்தில் வரும் சுபமுகூர்த்த தினங்களான 04.09.2025 அன்று ஒரு சார்பதிவாளர் உள்ள அலுவலகங்களுக்கு 100-க்கு பதிலாக 150 முன்பதிவு வில்லைகளும் இரண்டு சார்பதிவாளர்கள் உள்ள அலுவலகங்களுக்கு 200-க்கு பதிலாக 300 முன்பதிவு வில்லைகளும்

 அதிகளவில் ஆவணப் பதிவுகள் நடைபெறும் 100 அலுவலகங்களுக்கு 100-க்கு பதிலாக 150 சாதாரண முன்பதிவு வில்லைகளோடு ஏற்கெனவே வழங்கப்படும் 12 தட்கல் முன்பதிவு வில்லைகளுடன் கூடுதலாக 4 தட்கல் முன்பதிவு வில்லைகளும் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக வழங்கிட உத்தரவிடப்பட்டுள்ளதாக பதிவுத்துறை தெரிவித்துள்ளது.

About the Author

AK
Ajmal Khan
அஜ்மல்கான், பிரபல தொலைக்காட்சிகளில் மூத்த மற்றும் சிறப்பு செய்தியாளராக பணிபுரிந்துள்ளார். 20வருடங்களாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர், கடந்த 3 ஆண்டுகளாக ஏசியா நெட் இணையதளத்தில் தமிழ்நாடு மற்றும் அரசியல் சார்ந்த செய்திகளையும் எழுதி வருகிறார்.
தமிழ்நாடு
தமிழ்நாடு அரசு
தமிழ் செய்திகள்

Latest Videos
Recommended Stories
Recommended image1
TN Rain Update: வெயிலுக்கு குட்பை! தமிழகத்தில் ருத்ரதாண்டவம் ஆடப்போகும் மழை! எந்தெந்த மாவட்டங்கள்?
Recommended image2
Tamilnadu Power Cut: செல்போனில் சார்ஜ் போட்டு வச்சுக்கோங்க! நாளை காலை 9 மணி முதல் மின்தடை! எந்தெந்த பகுதிகளில்?
Recommended image3
Now Playing
திமுகவுடன் ஆட்சி என்று யாரும் சொல்லவில்லை...MLA காமராஜ் சொல்லுவது எல்லாம் பொய்! TTV தினகரன் பேட்டி
Related Stories
Recommended image1
மதுப்பிரியர்களுக்கு ஷாக் செய்தி.! டாஸ்மாக் கடைக்கு வெள்ளிக்கிழமை தமிழகம் முழுவதும் விடுமுறை அறிவிப்பு
Recommended image2
அடேங்கப்பா.. இலவசமாக 3 சென்ட் நிலம்.! யாருக்கெல்லாம் தகுதி.? விண்ணப்பிப்பது எப்படி.? வெளியான சூப்பர் தகவல்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved