MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • லொகேஷன் வரத்துக்கு இவ்வளவு நேரமா? உணவு டெலிவரி ஊழியரை திட்டிய வாடிக்கையாளர்! உயிரை மாய்த்து விபரீத முடிவு

லொகேஷன் வரத்துக்கு இவ்வளவு நேரமா? உணவு டெலிவரி ஊழியரை திட்டிய வாடிக்கையாளர்! உயிரை மாய்த்து விபரீத முடிவு

சென்னையில் உணவு டெலிவரி செய்த இளைஞர் ஒருவர், வாடிக்கையாளர் ஒருவரின் திட்டைத் தொடர்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தவறான முகவரியைக் கொடுத்ததால் ஏற்பட்ட வாக்குவாதத்தில், இளைஞரை அவதூறாகப் பேசி, நிறுவனத்தில் புகார் அளித்ததால் வேலையை இழந்த அவர், மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டார்.

2 Min read
Ajmal Khan
Published : Sep 19 2024, 05:03 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15

ஒரே கிளிக்கில் வீடு தேடி வரும் உணவு

நவீன யூகத்திற்கு ஏற்ப தொழில் நுட்ப வளர்ச்சியும் வேகமாக வளர்ந்து வருகிறது. அந்த வகையில் உட்கார்ந்த இடத்தில் இருந்து தேவையான பொருட்களை ஆர்டர் செய்தால் கைக்கு அடுத்த ஒரு சில நாட்களில் வந்து விடும். இதுவே அடுத்த கட்ட வளர்ச்சியாக உணவுகளும், காய்கறி மற்றும் மளிகை பொருட்களும்  ஸ்விகி, ஜோமட்டோ மூலமாக வீட்டிற்கே வந்தே சுடச்சுட கொடுக்கப்படுகிறது. ஆர்டர் செய்த அடுத்த 15 நிமிடங்களில் வீட்டிற்கே வந்து கொடுக்கவில்லையென்றால் பணம் கொடுக்க வேண்டிய தேவையில்லை என பரபரப்பாக கொடுக்கப்படும் தள்ளுபடி விளம்பரத்தாலும் அதிரடி அறிவிப்புகளாலும் நாள் தோறும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே வருகிறது.

25
kids

kids

பார்ட் டைம் வேலை- இளைஞர்கள் ஆர்வம்

இதனால் வீட்டின் அருகே உணவு விடுதிகள் இருந்தாலும் நடந்து போக சிரமப்படுவதால் ஒரே கிளிக்கில் உணவுகள் வீடு தேடி வரும் நிலை உருவாகிவிட்டது. அந்த வகையில்  கல்லூரி மாணவர்களுக்கு பார்ட் டைம்மாக உணவு டெலிவரி வேலையில் ஆர்வமாக இணைந்து வருகிறார்கள். இதனால் கிடைக்கும் வருவாய் குடும்ப செலவிற்கும் சொந்த செலவிற்கும் பயனுள்ளதாக உள்ளது. இப்படி உணவு டெலிவரி வேலை பார்த்த மாணவரின் வேலையை வாடிக்கையாளர் புகார் காரணமாக பறிக்கப்பட்டுள்ளது. இதனால் மனமுடைந்த மாணவர்கள் தற்கொலை செய்த சம்பவம் சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் அம்பேத்கர் கலைக்கல்லூரயில் பிகாம் படித்து வருபவர் பவித்திரன் (21) இவர் உணவு டெலிவரி நிறுவனமான ஸ்விக்கியில் பணி புரிந்து வந்துள்ளார்.

35

வாடிக்கையாளரோடு வாக்குவாதம்

கடந்த 11ஆம் தேதி கொரட்டூர் பகுதியியை சேர்ந்த பெண் ஒருவர் உணவு ஆர்டர் செய்துள்ளார். இதனையடுத்து ஓட்டலில் இருந்து உணவை வாங்கிய பவித்ரன் அந்த பெண் குறிப்பிட்ட இடத்திற்கு வந்துள்ளார். ஆனால் அந்த பெண் குறிப்பிட்ட லோகேஷனில் அந்த பெண் வீடு இல்லை.  இதன் காரணமாக அந்த பெண்ணிற்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அப்போது வீட்டிற்கு பின் தெருவில்  இருப்பதாகவும் முன்பக்கத்தில் வந்து தர வேண்டும் என கூறியுள்ளார். இதனால் அதிருப்தி அடைந்த பவித்திரன் அந்த பெண்ணிடம்  வாக்குவாதம் செய்துள்ளார். இதனையடுத்து உணவு ஆர்டர் செய்த பெண் பவித்திரனை அவதூறாக விமர்சனம் செய்து உணவு டெலிவரி நிறுவனத்தில் புகார் செய்துள்ளார். இதனால் பவித்திரனை வேலையைவிட்டு உணவு டெலிவரி நிறுவனம் தூக்கியுள்ளது.  

45
online food delivery

online food delivery

மாணவர் தற்கொலை

வேலை போன விரக்தியில் அதிர்ச்சி அடைந்த பவித்திரன் ஆத்திரத்தில் அந்த பெண்ணின் வீடு மீது கற்களை கொண்டு தாக்கியுள்ளார். இதனால்  உணவு டெலிவரி செய்த பவித்திரன் மீது காவல்துறையிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.  கொரட்டூர் போலீசார் சம்பவம் தொடர்பாக  விசாரணை நடத்தி பவித்திரனுக்கு அறிவுரை வழங்கி அனுப்பிவைத்துள்ளனர். இதனால் மன வேதனை அடைந்த பவித்திரன் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். 

55
death

death

'இது போன்ற பெண்கள் இருக்கும் வகை மரணங்கள் நிகழும்'

சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் விசாரணை பவித்திரன் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். அங்கு பவித்திரன் எழுதி வைத்த கடிதத்தில் என் மரணத்திற்கு உணவு டெலிவரி செய்ய சென்ற இடத்தில் இருந்து பெண் கடும் வார்த்தைகளால் திட்டியது தான் காரணம் என தெரிவித்துள்ளார். மேலும் இதுபோன்ற பெண்கள் இந்த உலகில் இருக்கும் வரை பல மரணங்கள் நிகழும் என வேதனையோடு எழுதியுள்ளார். இதனையடுத்து சம்பவ தினத்தில் நடைபெற்ற நிகழ்வுகள் தொடர்பாக அந்த பெண்ணிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். உணவு டெலிவரியின் போது பெண் ஒருவர் திட்டியதால் மாணவர்கள் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

About the Author

AK
Ajmal Khan
அஜ்மல்கான், பிரபல தொலைக்காட்சிகளில் மூத்த மற்றும் சிறப்பு செய்தியாளராக பணிபுரிந்துள்ளார். 20வருடங்களாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர், கடந்த 3 ஆண்டுகளாக ஏசியா நெட் இணையதளத்தில் தமிழ்நாடு மற்றும் அரசியல் சார்ந்த செய்திகளையும் எழுதி வருகிறார்.
சென்னை
தமிழ் செய்திகள்
தமிழ்நாடு
குற்றம்

Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved