MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • மகளிர் சுய உதவி குழு எதிர்பார்த்த சூப்பர் செய்தி.! தேதி குறித்த தமிழக அரசு

மகளிர் சுய உதவி குழு எதிர்பார்த்த சூப்பர் செய்தி.! தேதி குறித்த தமிழக அரசு

தமிழக அரசு மகளிர் சுய உதவிக் குழுக்களின் முன்னேற்றத்திற்காக பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது.  செப்டம்பர் 16 அன்று மேலும் ரூ.3,000 கோடி கடன் வழங்கப்படவுள்ளது. 

2 Min read
Ajmal Khan
Published : Sep 15 2025, 03:16 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Image Credit : SCH

மகளிரின் பொருளாதார சுயசார்பிற்காகவும். அவர்களின் தன்னம்பிக்கையை மேம்படுத்திடும் வகையிலும், 1989ஆம் ஆண்டு தருமபுரி மாவட்டத்தில் முதன்முறையாக சுய உதவிக் குழு இயக்கம் தொடங்கப்பட்டது. சுய உதவிக் குழுக்களின் முன்னேற்றத்திற்காகவும், அவர்களின் பொருளாதார வளர்ச்சிக்காக சுழல் நிதி, 

சமுதாய முதலீட்டு நிதி. வங்கிக் கடன் இணைப்புகள், பூமாலை வணிக வளாகங்கள், மணிமேகலை விருதுகள் என எண்ணற்ற திட்டங்களை முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி செயல்படுத்தினார். இந்த நிலையில் தற்போது தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான அரசு மகளிர் சுய உதவிக் குழுக்களின் முன்னேற்றத்திற்கான பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்.

24
Image Credit : google

தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் வழிகாட்டுதலில் ஊரகப் பகுதிகளில் 3,38,985 சுய உதவிக் குழுக்களும், நகர்ப்புறங்களில் 1,47,671 சுய உதவிக் குழுக்களும் செயல்பட்டு வருகின்றன. இக்குழுக்களில் 55,45,043 உறுப்பினர்கள் உள்ளனர். 

2025-2026ஆம் ஆண்டிற்கான நிதி நிலையறிக்கையில், சுய உதவிக் குழு மகளிருக்கு 37 ஆயிரம் கோடி ரூபாய் வங்கிக் கடன் இணைப்பு வழங்க, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் அறிவித்ததைத் தொடர்ந்து, 03.09.2025 வரை 1,46,100 சுய உதவிக் குழுக்களுக்கு 13 ஆயிரத்து 62 கோடி ரூபாய் வங்கிக் கடன் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.

Related Articles

Related image1
பிஎட், எம்எட் படிப்பு... மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பை வெளியிட்ட தமிழக அரசு
Related image2
இலவசங்களுக்கு பணம் இருக்கிறது.. சம்பளம் கொடுக்க பணம் இல்லையா? தமிழக அரசை வெளுத்தெடுத்த உச்சநீதிமன்றம்
34
Image Credit : tndipr

தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் தலைமையிலான அரசு பொறுப்பேற்ற நாள் முதல் இதுவரை 19 இலட்சத்து 68 ஆயிரத்து 58 சுய உதவிக் குழுக்களைச் சேர்ந்த 2 கோடியே 55 இலட்சத்து 84 ஆயிரத்து 754 நபர்களுக்கு 1 இலட்சத்து 25 ஆயிரத்து 362 கோடி ரூபாய் வங்கிக் கடன் இணைப்பாக வழங்கப்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக,

தமிழ்நாடு துணை முதலமைச்சர்16.09.2025 அன்று சேலம், கருப்பூர். அரசு பொறியியல் கல்லூரி வளாகத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில், தமிழ்நாடு முழுவதும் செயல்படும் சுய உதவிக் குழுக்களுக்கு சுமார் 3,000 கோடி ரூபாய்க்கும் மேல் வங்கிக் கடன் இணைப்புகள் வழங்கும் நிகழ்ச்சியைத் துவக்கி வைத்து,

44
Image Credit : Google

சுய உதவிக் குழுக்களின் உறுப்பினர்களுக்கு வங்கிக் கடன் இணைப்புகளையும், சுய உதவிக் குழு மகளிருக்கு அடையாள அட்டைகளையும் வழங்கவுள்ளார். இந்நிகழ்ச்சியைத் தொடர்ந்து, அனைத்து மாவட்டங்களிலும் அமைச்சர் பெருமக்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆகியோரால் சுய உதவிக் குழுக்களின் உறுப்பினர்களுக்கு வங்கிக் கடன் இணைப்புகள் மற்றும் அடையாள அட்டைகள் வழங்கப்படவுள்ளன.

About the Author

AK
Ajmal Khan
அஜ்மல்கான், பிரபல தொலைக்காட்சிகளில் மூத்த மற்றும் சிறப்பு செய்தியாளராக பணிபுரிந்துள்ளார். 20வருடங்களாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர், கடந்த 3 ஆண்டுகளாக ஏசியா நெட் இணையதளத்தில் தமிழ்நாடு மற்றும் அரசியல் சார்ந்த செய்திகளையும் எழுதி வருகிறார்.
தமிழ்நாடு
பெண்கள்
மகளிர் உரிமைத் தொகை
தமிழ்நாடு அரசு

Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved