MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • திருநெல்வேலி
  • 3வது முறை நிரம்பி வழியும் அடவிநயினார் அணை! மகிழ்ச்சியில் விவசாயிகள்!

3வது முறை நிரம்பி வழியும் அடவிநயினார் அணை! மகிழ்ச்சியில் விவசாயிகள்!

தென்காசியில் உள்ள அடவிநயினார் அணை, இந்த ஆண்டு மூன்றாவது முறையாக நிரம்பியுள்ளது. மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பெய்து வரும் மழையால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து, உபரிநீர் அனுமன் நதியில் வெளியேற்றப்படுகிறது.

1 Min read
SG Balan
Published : Aug 17 2025, 07:00 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
13
3வது முறை நிரம்பிய அடவிநயினார் அணை
Image Credit : X/@MVenukopal

3வது முறை நிரம்பிய அடவிநயினார் அணை

நெல்லை மற்றும் தென்காசி மாவட்டங்களில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பெய்து வரும் பரவலான மழையின் காரணமாக, அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதன் விளைவாக, தென்காசி மாவட்டத்தில் உள்ள அடவிநயினார் அணை, இந்த ஆண்டு மூன்றாவது முறையாக முழு கொள்ளளவை எட்டியுள்ளது.

23
அனுமன் நதிக்கு வரும் உபரி நீர்
Image Credit : X/@MegamalaiS

அனுமன் நதிக்கு வரும் உபரி நீர்

132 அடி உயரம் கொண்ட அடவிநயினார் அணைப் பகுதியில் பெய்த கனமழையால், அணைக்கு நீர்வரத்து அதிகரித்து நேற்று நிரம்பி வழிந்தது. ஏற்கனவே இரண்டு முறை நிரம்பியிருந்த இந்த அணை, தென்மேற்கு பருவமழையின் காரணமாக மீண்டும் நிரம்பியுள்ளது.

அணைக்கு வினாடிக்கு 70 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருப்பதால், அந்த உபரிநீர் முழுவதும் அனுமன் நதியில் வெளியேற்றப்படுகிறது. இதனால், பொதுமக்கள் ஆற்றின் கரையோரங்களுக்குச் செல்ல வேண்டாம் என்றும், ஆற்றில் இறங்கி குளிப்பதைத் தவிர்க்குமாறும் பொதுப்பணித்துறை சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Related Articles

Related image1
கோகுலாஷ்டமியில் தொடங்கும் அதிர்ஷ்டம்.! கசக்கி போடும் பேப்பரெல்லாம் காசாகும்.! 3 ராசிகள் வீட்டில் பண மழை.!
Related image2
கோவை, நீலகிரி மாவட்டங்களில் மழை புரட்டி எடுக்கப்போகுதாம்! வானிலை மையத்தின் அப்டேட்!
33
விவசாயிகள் மகிழ்ச்சி
Image Credit : X/@thinak_

விவசாயிகள் மகிழ்ச்சி

ஒரே ஆண்டில் அணை மூன்று முறை நிரம்பியுள்ளதால், இப்பகுதி விவசாயிகள் பெரும் மகிழ்ச்சியில் உள்ளனர். இது விவசாயத்திற்கு தேவையான நீரை உறுதி செய்வதால், நல்ல விளைச்சல் கிடைக்கும் என அவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

About the Author

SB
SG Balan
முதுகலை பட்டதாரி. டிஜிட்டலுக்கு செய்தி எழுதுவதில் 6 ஆண்டுகள் அனுபவம் கொண்டவர். கடந்த 2 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் உதவி ஆசிரியராகப் பணிபுரிந்து வருகிறார். வணிகம், தொழில்நுட்பம், கல்வி, அரசியல் செய்திகளில் ஆர்வமுள்ளவர். இதற்கு முன்பு டைம்ஸ் இன்டர்நெட்டில் பணிபுரிந்தார்.
தமிழ்நாடு
மழை செய்திகள்

Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved