MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Astrology
  • கோகுலாஷ்டமியில் தொடங்கும் அதிர்ஷ்டம்.! கசக்கி போடும் பேப்பரெல்லாம் காசாகும்.! 3 ராசிகள் வீட்டில் பண மழை.!

கோகுலாஷ்டமியில் தொடங்கும் அதிர்ஷ்டம்.! கசக்கி போடும் பேப்பரெல்லாம் காசாகும்.! 3 ராசிகள் வீட்டில் பண மழை.!

ரிஷபம், சிம்மம், மீன ராசிக்காரர்களுக்கு கோகுலாஷ்டமி முதல் வாழ்க்கையில் திருப்புமுனை ஏற்படும். தொழில், வியாபாரத்தில் லாபம், பதவி உயர்வு, கடன் பிரச்சினை தீரும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடைபெறும்.

2 Min read
Vedarethinam Ramalingam
Published : Aug 16 2025, 09:26 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
பணமழை பொழியும் காலம்
Image Credit : Getty

பணமழை பொழியும் காலம்

கோகுலாஷ்டமி என்பது பகவான் கிருஷ்ணரின் அவதார நாளாக சிறப்பாகக் கொண்டாடப்படும் புனித பண்டிகை. இந்த நாள் ஆனந்தம், உற்சாகம், பக்தி, ஆசீர்வாதம் அனைத்தையும் ஒருசேர தந்து வாழ்வை வளமாக்கும் சக்தி கொண்டது. இந்த வருட கோகுலாஷ்டமி முதல் மூன்று ராசிகளின் அதிர்ஷ்டக் கதவு விரிய இருக்கிறது. இதுவரை கடின உழைப்பும் கசக்கியும் வந்தவர்கள் இனி கசக்கிப் போடும் பேப்பரெல்லாம் காசாக மாறும் காலத்தை சந்திக்க உள்ளனர். கிருஷ்ணரின் கருணையால் வீடு, வியாபாரம், வேலை, குடும்பம் அனைத்திலும் நற்சூழ்நிலை உருவாகி, பணமழை பொழியும் காலம் துவங்குகிறது.

25
ரிஷப ராசி
Image Credit : Social Media

ரிஷப ராசி

ரிஷப ராசிக்காரர்களுக்கு இந்த கோகுலாஷ்டமி சிறப்பான அதிர்ஷ்டத்தை தரப்போகிறது. இதுவரை நீண்ட நாட்களாக நெருக்கடி, வேலைப்பளு, பணத்தட்டுப்பாடு ஆகியவற்றால் சோர்வடைந்திருந்தீர்கள். ஆனால் இனி நிலைமைகள் மாறும். உழைப்பின் பலன் உங்களுக்கே வந்து சேரும். குறிப்பாக, தொழில் மற்றும் வியாபாரத்தில் சிறிய முயற்சியும் பெரிய லாபத்தைத் தரும். முதலீடுகள் உங்களுக்குப் பல மடங்கு வருமானம் தரும். வீட்டில் புதுப் பொருள் வாங்கும் சூழல் உருவாகும். குடும்பத்தில் இருந்த சின்ன சின்ன பிரச்சினைகள் தீரும். பிள்ளைகளின் முன்னேற்றம் உங்களை மகிழ்ச்சிப்படுத்தும். வெளிநாடு செல்லும் வாய்ப்பு உருவாகும். கடன் சுமையிலிருந்து விடுபட்டு பணவளம் பெருகும். ரிஷப ராசிக்காரர்கள் சொத்துக் கொள்முதல், நிலம் தொடர்பான லாபம் பெறுவார்கள்.

பரிகாரம்: கிருஷ்ணருக்கு வெண்ணெய் நிவேதனம் செய்யவும். 

 அதிர்ஷ்ட நிறம்: பச்சை அதிர்ஷ்ட எண்: 6

Related Articles

Related image1
உத்தரட்டாதியில் மீண்டும் சனி பகவான்.! 3 ராசிகளுக்கு சோதனை மேல் சோதனை.! 3 ராசிகளுக்கு சாதனை மேல் சாதனை.!
Related image2
Zodiac Sign: பெண்களே நீங்கள் இந்த ராசியா.!? ஆண்கள் உங்கள் உத்தரவுக்கு கட்டுப்படுவார்கள்.! தெரியாத ஜோதிட ரகசியங்கள்.!
35
சிம்ம ராசி
Image Credit : Getty

சிம்ம ராசி

சிம்ம ராசிக்காரர்களுக்கு சூரிய பகவானின் கிருபை கிடைக்கப்போகிறது. வேலைப்பளு அதிகரித்தாலும் அதே சமயம் வருமானமும் பெருகும். வேலைவாய்ப்பு, பதவி உயர்வு போன்ற செய்திகள் உங்களை மகிழ்விக்கும். சமூகத்தில் மதிப்பு உயரும். உங்கள் பேச்சு மற்றும் தலைமைத்திறன் மூலம் பிறரை ஈர்க்க முடியும். வீடு, வாகனம் வாங்கும் எண்ணம் நிறைவேறும். சுபநிகழ்ச்சி நடைபெறும். கடன் கேட்டவர்களுக்கு நல்ல தீர்வு கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும். நண்பர்கள், உறவினர்களின் ஆதரவு அதிகரிக்கும். வியாபாரத்தில் புது வாய்ப்புகள் குவியும். திடீரென வருமானம் கிடைத்து பணமழை பொழியும்.

பரிகாரம்: கிருஷ்ணருக்கு துளசி மாலை அணிவித்து வழிபடவும். 

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு  அதிர்ஷ்ட எண்: 1

45
மீன ராசி
Image Credit : Getty

மீன ராசி

மீன ராசிக்காரர்களுக்கு கிருஷ்ண பக்தியே வாழ்வின் மிகப் பெரிய அதிர்ஷ்டமாக மாறும். உங்கள் பேச்சே பணம் வர வைக்கும். தொழில், கல்வி, கலை துறைகளில் இருப்பவர்கள் மிகுந்த வெற்றியைப் பெறுவார்கள். இதுவரை நின்றிருந்த வேலைகள் இனி விரைவாக நிறைவேறும். குடும்பத்தில் திருமணம், சுபநிகழ்ச்சி நடைபெறும். திடீரென வியாபாரத்தில் லாபம் கிடைக்கும். வெளிநாட்டில் இருந்தவர்களுக்கு புது வாய்ப்பு கிடைக்கும். உங்கள் கலை, திறமை, உழைப்பு அனைத்தும் மதிப்புக் கிடைக்கும். வங்கி சேமிப்பு உயரும். வீடு வாங்கும் ஆசை நிறைவேறும். பிள்ளைகளின் முன்னேற்றம் உங்களை மகிழ்விக்கும். வீட்டுக்கே பணமழை பொழியும்.

பரிகாரம்: கிருஷ்ணருக்கு பால், வெண்ணெய் நிவேதனம் செய்யவும். 

அதிர்ஷ்ட நிறம்: நீலம்  அதிர்ஷ்ட எண்: 7

55
 உழைப்பும் முயற்சியும் பெரும் பலன் தரும்
Image Credit : Getty

உழைப்பும் முயற்சியும் பெரும் பலன் தரும்

கோகுலாஷ்டமி நாள் முதல் ரிஷபம், சிம்மம், மீனம் ஆகிய மூன்று ராசிகளுக்கும் வாழ்க்கையில் திருப்புமுனை ஏற்பட இருக்கிறது. இதுவரை நெருக்கடி சந்தித்தவர்கள் இனி வளமும் பணமழையும் அனுபவிக்கப்போகிறார்கள். பகவான் கிருஷ்ணரிடம் பக்தியுடன் வேண்டினால் அதிர்ஷ்டம் இன்னும் பலப்படும். "கசக்கிப் போடும் பேப்பரெல்லாம் காசாகும்" என்ற பழமொழி போல, உங்களின் உழைப்பும் முயற்சியும் பெரும் பலன் தரும்.

About the Author

VR
Vedarethinam Ramalingam
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 17 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். சன் தொலைக்காட்சி, தந்தி டிவி பணியாற்றியுள்ள இவர், ஏசியாநெட் நியூஸ் தமிழில் இணைந்துள்ளார். வணிகம், முதலீடுகள் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர். எதிர்கால தேவைகளுக்குக்கு முதலீடு அவசியம் என்பதை அடித்தட்டு மக்களும் புரிந்துகொள்ளும் வகையில் எழுதி வருகிறார். இயற்கை விவசாயம் குறித்த படைப்புகளை படைப்பதிலும் கைதேர்ந்தவர்.
ஜோதிடம்
ஜோதிடம்
ஆன்மீகம்
இராசி அறிகுறிகள்

Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved