- Home
- Tamil Nadu News
- கன்னியாகுமாரி
- குஷியில் துள்ளிக்குதிக்கும் அரசு ஊழியர்கள்.. கிறிஸ்மஸ்க்கு இரண்டு நாள் விடுமுறை அறிவிப்பு
குஷியில் துள்ளிக்குதிக்கும் அரசு ஊழியர்கள்.. கிறிஸ்மஸ்க்கு இரண்டு நாள் விடுமுறை அறிவிப்பு
Christmas Holidays: கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டத்திற்கு டிசம்பர் 24 அன்று உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறையை ஈடுசெய்ய டிசம்பர் 27 வேலை நாளாக இருக்கும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

கிறிஸ்துமஸ் பண்டிகை
கிறிஸ்துமஸ் பண்டிகை தமிழகம் மட்டுமின்றி உலக முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் வெகு விமர்சியாக கொண்டாடப்படுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான கிறிஸ்துமஸ் பண்டிகை வரும் 25ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதற்காக வீடுகளில் வண்ண வண்ண விளக்குகளை பொருத்தியும், கிறிஸ்தவ தேவாலயங்களில் வண்ண மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு ஜொலிக்கும்.
கிறிஸ்துமஸ் முந்தைய நாள் விடுமுறை
இந்நிலையில் தமிழகத்தில் கன்னியாகுமரி மாவட்டத்தில் கிறிஸ்தவர்கள் ஏராளமானோர் உள்ளதால் கிறிஸ்துமஸ் பண்டிகையை சிறப்பாக கொண்டாடும் வகையில் முந்தைய நாள் அதாவது நாளை உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அழகுமீனா வெளியிட்டுள்ள அறிவிப்பில்: கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டத்தில் வரும் 24ம் தேதி அதாவது நாளை உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுகிறது. இது அனைத்து மாநில அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்களுக்கு பொருந்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
உள்ளூர் விடுமுறை
இந்த உள்ளூர் விடுமுறையை ஈடுசெய்யும் விதமாக டிசம்பர் 27ம் தேதி சனிக்கிழமை அன்று வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திற்கு கிறிஸ்துமஸ் உள்ளூர் விடுமுறை செலவாணி முறிச் சட்டம் 1881-இன் படி விடுமுறை அறிவிக்கப்படவில்லை என்பதால் நாளை கன்னியாகுமரி மாவட்டத்தில் தலைமைக் கருவூலம் மற்றும் கிளைக் கருவூலங்கள் அரசு ஈடுபாடு சம்பந்தப்பட்ட அவசரப் பணிகளைக் கவனிக்கும் பொருட்டு தேவையான ஊழியர்களை கொண்டு இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
குமரி மாவட்டத்திற்கு இரண்டு நாட்கள் விடுமுறை
கன்னியாகுமரி மாவட்டத்திற்கு மட்டும் இரண்டு நாட்கள் விடுமுறை கிடைப்பதால் அரசு ஊழியர்கள் மற்றும் கல்லூரி மாணவர்கள் கொண்டாட்டத்தில் உள்ளனர். இடையில் டிசம்பர் 26ம் தேதி வெள்ளிக்கிழமை ஒரு நாள் விடுமுறை எடுத்துக்கொண்டால் அரசு ஊழியர்களுக்கு மொத்தம் 5 நாட்கள் விடுமுறை கிடைக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

