MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • சென்னை
  • School Holiday: 13ம் தேதி வரை பள்ளிக்கு விடுமுறை! எதற்காக தெரியுமா?

School Holiday: 13ம் தேதி வரை பள்ளிக்கு விடுமுறை! எதற்காக தெரியுமா?

School Holiday: சென்னையில் மெட்ரோ பணியால் பள்ளி கட்டிடத்தில் விரிசல் ஏற்பட்டுள்ளதை அடுத்து விஜயதசமி வரை பள்ளிக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

2 Min read
vinoth kumar
Published : Oct 07 2024, 05:36 PM IST| Updated : Oct 07 2024, 06:04 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
School Reopen

School Reopen

தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு காலாண்டு தேர்வு செப்டம்பர் 20ம் தேதி தொடங்கி 27ம் தேதியுடன் முடிவடைந்தது. இதனையடுத்து செப்டம்பர் 28ம் தேதி அக்டோபர் 6ம் தேதி வரை காலாண்டு விடுமுறை அறிவிக்கப்பட்டு இன்று பள்ளிகள் திறக்கப்பட்டது. 

25
Dominic Savio Matriculation Hr. Sec. School

Dominic Savio Matriculation Hr. Sec. School

இந்நிலையில் சென்னை மயிலாப்பூர் சாந்தோம் நெடுஞ்சாலையில் டொமினிக் சேவியர் மெட்ரிக் பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் எல்.கே.ஜி முதல் 12ம் வகுப்பு வரை உள்ளது. ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்த பள்ளியை ஒட்டி மெட்ரோ ரயில் இரண்டாம் கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. 

35
Metro Work

Metro Work

இந்நிலையில், மெட்ரோ ரயில் பணிகள் காரணமாக பள்ளி வளாகத்தில் பல்வேறு கட்டிடங்களில் விரிசல் ஏற்பட்டது. இதனை கண்டு அதிர்ச்சியடைந்த மாணவ, மாணவிகள் இதுதொடர்பாக தங்களின் பெற்றோர்களிடம் கூறியுள்ளனர். இதனையடுத்து இன்று மாணவர்களின் பெற்றோர் ஒன்று சேர்ந்து பள்ளிக்கு வந்து மாணவர்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று கூறியது மட்டுமல்லாமல் பள்ளி முதல்வரிடம் இதுகுறித்து தெரிவித்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று குற்றம்சாட்டினர். 

இதையும் படிங்க: Petrol Diesel Price: பெட்ரோல் டீசல் விலை குறையாது? உயரப்போகுதாம்? என்ன காரணம் தெரியுமா? அதிர்ச்சி தகவல்!

45
Parents Protest

Parents Protest

இந்நிலையில், பள்ளி நிர்வாகத்தின் அலட்சிய செயல்பாட்டுக்கு கண்டனம் தெரிவித்து மாணவர்களின் பெற்றோர்கள் பள்ளி முன்பு இன்று காலை திரண்டு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் பெற்றோர்களிடம் சமாதானப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். பின்னர் பள்ளியில் உள்ள பிரச்சினைகளை சரிசெய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று  பள்ளி நிர்வாகம் தரப்பில் உறுதிய அளிக்கப்பட்டதை அடுத்து போராட்டம் கைவிடப்பட்டது. 

இதையும் படிங்க: Government School Student: அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு முக்கிய செய்தி!

55
School Holiday

School Holiday

டொமினிக் சேவியர் மெட்ரிக் பள்ளிக்கு  விஜயதசமி முடியும் வரை அதாவது வரும் 13ம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டது. அதுவரை 10, 11, 12 ஆகிய வகுப்புகளுக்கு மாற்று இடம் வழங்கப்படும். 8ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஆன்லைன் வாயிலாக வகுப்புகள் நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.

Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved