MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • சென்னை
  • சென்னை டூ வேலூர் இனி 2 மணி நேரத்தில் போகலாம்! 6 வழிச்சாலையில் பறக்கப் போகும் வாகனங்கள்! முழு விவரம்!

சென்னை டூ வேலூர் இனி 2 மணி நேரத்தில் போகலாம்! 6 வழிச்சாலையில் பறக்கப் போகும் வாகனங்கள்! முழு விவரம்!

சென்னையில் இருந்து வேலூருக்கு 6 வழிச்சாலை அமைக்க தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளது. இது தொடர்பான முழு விவரங்களை பார்ப்போம்.

2 Min read
Author : Rayar A
Published : Sep 01 2025, 03:41 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Chennai–Vellore 6 Lane Highway Travel In 2 Hours
Image Credit : X

Chennai–Vellore 6 Lane Highway Travel In 2 Hours

ஒரு நாட்டின் முன்னேற்றத்துக்கு சாலை கட்டமைப்பு வசதிகள் மிகவும் அத்தியாவசியம் ஆகும். ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு சரக்குகளை விரைவாக எடுத்துச் செல்லும் வகையில் சாலைகள் அமைக்கப்பட்டு இருந்தால் தான் நாட்டின் வளர்ச்சி கூடும். தமிழ்நாட்டை பொறுத்தவரை சென்னை வேலூர் வழித்தடம் மிகவும் முக்கியமான ஒன்றாக விளங்கி வருகிறது. தொழில் நகரமான சென்னையில் இருந்து ஐடி நகரமான பெங்களூருவை சாலை மார்க்கமாக இணைப்பதால் எப்போதும் பிசியான வழித்தடமாக இது அமைந்துள்ளது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
சென்னை டூ வேலூர் புதிய 6 வழிச்சாலை
Image Credit : Google

சென்னை டூ வேலூர் புதிய 6 வழிச்சாலை

இந்நிலையில், தமிழ்நாடு அரசு சென்னையில் இருந்து வேலூர் வரை 142 கிலோமீட்டர் தொலைவுக்கு ஆறு வழிச்சாலை அமைக்க திட்டமிட்டுள்ளது. மாநில நெடுஞ்சாலைத்துறை மூலமாக இந்த சாலை அமைக்கப்பட உள்ளது. பசுமைவெளிச் சாலையாக அமையவுள்ள இந்த 6 வழிச்சாலை ஒரகடத்தில் உள்ள தொழில்துறை மையம், செய்யாறு சிப்காட் தொழில் பூங்கா மற்றும் வேலூர் மாவட்டத்தில் அமையவிருக்கும் மற்றொரு சிப்காட் பூங்கா ஆகியவற்றை இணைக்கும் வகையில் போடப்பட உள்ளது.

சரக்கு போக்குவரத்து மேம்படும்

இந்த 6 வழிச்சாலை ஒரகடத்தின் மூன்று சிப்காட்கள் மற்றும் மற்ற தொழில் பிரிவுகளில் இருந்து காட்டுப்பள்ளி மற்றும் எண்ணூர் துறைமுகங்களுக்கு சரக்கு வாகனப் போக்குவரத்தை மேம்படுத்துவதை நோக்கமாக கொண்டு அமைக்கப்படுகிறது. மேலும் சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையிலும் கொண்டு வரப்பட உள்ளது. இந்தத் திட்டத்தின் மதிப்பு சுமார் 4,000 கோடி ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது

Related Articles

Related image1
கொடைக்கானல் போறீங்களா? ஒரே ஒரு டிக்கெட் போதும்! எல்லா இடத்தையும் ஜாலியா சுத்தி பார்க்கலாம்!
Related image2
சென்னை டூ டெல்லி இனி 26 மணி நேரம் தான்! 'ஜெட்' வேகத்தில் பாயப்போகும் வந்தே பாரத் ரயில்!
34
4 மாவட்டங்க‌ளை இணைக்கும் சாலை
Image Credit : Social Media

4 மாவட்டங்க‌ளை இணைக்கும் சாலை

இந்த ஆறு வழிச்சாலை ஒரகடத்திற்கு அருகிலுள்ள சென்னை புறநகர் வெளிவட்டச் சாலையில் (CPRR) தொடங்கி, செய்யாறு சிப்காட் வழியாக வேலூர் மாவட்டத்தில் NH38-இல் முடிவடையும். இதில் ஒரகடத்தில் உள்ள CPRR-இல் இருந்து செய்யாறு சிப்காட்டிற்கு அருகிலுள்ள மங்கல் கூட்டு சாலை வரை செல்லும் 68 கி.மீ. பகுதி அடங்கும் என்று நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்தத் திட்டம் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் வேலூர் மாவட்டங்களை இணைக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

சென்னை டூ வேலூர் 2 மணி நேரத்தில் போகலாம்

இந்த நெடுஞ்சாலை தற்போதைய பயண நேரத்தை சுமார் ஒரு மணி நேரம் குறைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, இதனால் சென்னையில் இருந்து வேலூருக்கு இரண்டு மணி நேரத்தில் சென்று விடலாம். இது தொடர்பாக நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் ஒருவர் கூறுகையில், ''இந்த 6 வழிச்சாலை திட்டத்திற்கு தேவையான நிதி மற்றும் நிலம் கையகப்படுத்துதல் விவரங்களை இறுதி செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இது சென்னை-வேலூர் பயணத்தை 2 மணி நேரமாக குறைக்கும்'' என்றார்.

44
பொருளாதார வளர்ச்சி மேம்படும்
Image Credit : Google

பொருளாதார வளர்ச்சி மேம்படும்

தற்போதைய சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையை (NH-44) இணைக்கும் வகையில் புதிய 6 வழிச்சாலை அமைக்கப்பட உள்ளது. இந்த ஆறு வழிச்சாலை, சென்னையையும் வேலூரையும் இணைப்பதோடு, இப்பகுதியில் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வேலூர் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள தொழிற்சாலைகள், கல்வி நிறுவனங்கள் மற்றும் மருத்துவமனைகளுக்கு இந்த நெடுஞ்சாலை மேம்பட்ட இணைப்பை வழங்கும். மேலும், இந்தத் திட்டம், சரக்கு போக்குவரத்தை எளிதாக்கி, வணிக நடவடிக்கைகளை விரிவுபடுத்த உதவும்.

கட்டுமானப் பணிகள் எப்போது தொடங்கும்?

இந்தத் திட்டத்திற்கான விரிவான திட்ட அறிக்கை (DPR) தயாரிக்கப்பட்டு வருகிறது. இந்த அறிக்கை முடிந்தவுடன், நிதி ஒதுக்கீடு மற்றும் ஒப்பந்ததாரர் தேர்வு உள்ளிட்ட பணிகள் தொடங்கப்படும். இவை எல்லாம் இறுதி செய்யப்பட்ட பிறகு கட்டுமானப் பணிகள் தொடங்கப்படும் என்று அதிகாரிகள் தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

About the Author

RA
Rayar A
டிசம்பர் 2024 முதல் ஏசியாநெட் தமிழ் வெப்சைட்டில் பணிபுரிந்து வருகிறேன். இளங்கலை பட்டப்படிப்பு முடித்துள்ளேன். விளையாட்டு, டெக்னாலஜி மற்றும் பயணம் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உண்டு. தினத்தந்தி, ஒன் இந்தியா தமிழ், ஆதன் என முன்னணி ஊடகங்களில் பணியாற்றிய அனுபவம் உள்ளது. என்னை rayar.a@asianetnews.in என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
நெடுஞ்சாலை
சென்னை
தமிழ்நாடு
Latest Videos
Recommended Stories
Recommended image1
Chennai Power Cut: இன்று காலை 9 முதல் மதியம் 2 மணி வரை பவர் கட்! சென்னையில் எந்தெந்த இடங்களில் தெரியுமா?
Recommended image2
Chennai Power Cut: எந்த வேலை இருந்தாலும் 9 மணிக்குள்ளே முடிச்சுடுங்க! சென்னையில் முக்கிய இடங்களில் இன்று 5 மணிநேரம் மின்தடை!
Recommended image3
Chennai Metro: மெட்ரோ பயணிகளே உஷார்! இனி உரக்கப் பேசினாலும்.. செல்போனில் பாட்டு கேட்டால் ரூ.2,500 அபராதம்..!
Related Stories
Recommended image1
கொடைக்கானல் போறீங்களா? ஒரே ஒரு டிக்கெட் போதும்! எல்லா இடத்தையும் ஜாலியா சுத்தி பார்க்கலாம்!
Recommended image2
சென்னை டூ டெல்லி இனி 26 மணி நேரம் தான்! 'ஜெட்' வேகத்தில் பாயப்போகும் வந்தே பாரத் ரயில்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved