MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Sports
  • ஐபிஎல் ஏலத்தில் தவறிழைத்த ஆர்சிபி; 3 போட்டியில் 9 ரன் கூட தாண்டாத அதிரடி வீரர்; 11 கோடி போச்சா!

ஐபிஎல் ஏலத்தில் தவறிழைத்த ஆர்சிபி; 3 போட்டியில் 9 ரன் கூட தாண்டாத அதிரடி வீரர்; 11 கோடி போச்சா!

ஆர்சிபி ஏலத்தில் எடுத்த இங்கிலாந்து அதிரடி வீரர் இந்திய டி20 தொடரில் ரன் அடிக்கத் தடுமாறி வருகிறார். 3 போட்டிகளில் மொத்தம் 9 ரன்களை கூட அவரால் தாண்ட முடியவில்லை. 

2 Min read
Author : Rayar A
Published : Jan 30 2025, 06:24 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
ஐபிஎல் ஏலத்தில் தவறிழைத்த ஆர்சிபி; 3 போட்டியில் 9 ரன் கூட தாண்டாத அதிரடி வீரர்; 11 கோடி போச்சா!

ஐபிஎல் ஏலத்தில் தவறிழைத்த ஆர்சிபி; 3 போட்டியில் 9 ரன் கூட தாண்டாத அதிரடி வீரர்; 11 கோடி போச்சா!

இந்தியன் பிரிமீயர் லீக் எனப்படும் ஐபிஎல் கிரிக்கெட் தொடர் மார்ச் 21ம் தேதி முதல் தொடங்க இருக்கிறது.  உலகம் முழுவதும் பல கோடிக்கணக்கான ரசிகர்கள் ஐபிஎல் தொடரை ஆவலுடன் எதிர்நோக்கி காத்திருக்கின்றனர். 2025 ஐபிஎல் தொடரில் ஏராளமான அணிகள் இப்போதே தயாராகி வருகின்றன. ஒப்பனிங் யார் விளையாட வேண்டும்? மிடில் வரிசையில் யார் விளையாட வேண்டும்? என்பது குறித்த பட்டியலை தயார் செய்து வருகின்றன. 

2025 ஐபிஎல் தொடர்களில் அதிகம் எதிர்பார்க்கப்படும் அணிகளில் மிக முக்கியமனாது ஆர்சிபி எனப்படும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி. ஆரம்பத்தில் இருந்தே ஐபிஎல் தொடர்களில் விளையாடி வரும் ஆர்சிபி அணி இதுவரை ஒருமுறை கூட கோப்பையை வெல்லவில்லை. நீண்ட காலமாக விராட் கோலி கேப்டனாக‌ இருந்தும் ஆர்சிபியால் கோப்பையை தட்டித்தூக்க முடியவில்லை. கடந்த சீசனில் டூ பிளிசிஸ் தலைமையிலும் ஆர்சிபி படுதோல்வியை தழுவியது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
பில் சால்ட்

பில் சால்ட்

2025 ஐபிஎல் தொடரை பொறுத்தவரை ஆர்சிபி இன்னும் கேப்டனை அறிவிக்கவில்லை. இந்நிலையில், ஆர்சிபி அணியால் வாங்கப்பட்ட இங்கிலாந்து அதிரடி வீரர் பில் சால்ட் தொடர்ந்து சொதப்பி வருவது அந்த அணி நிர்வாகத்தை கவலையில் ஆழ்த்தியுள்ளது. இந்தியா இங்கிலாந்து இடையிலான டி20 தொடர் நடந்து வரும் நிலையில், இங்கிலாந்து அணியின் அதிரடி வீரர் பில் சால்ட் 3 போட்டிகளில் விளையாடி 9 ரன்களை கூட தாண்டவில்லை.

அதாவது முதல் போட்டியில் டக் அவுட் ஆன அவர், 2வது போட்டியில் 4 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார். 3வது போட்டியிலும் 5 ரன்களில் வெளியேறினார். அதுவும் 3 போட்டிகளிலும் இவர் பாஸ்ட் பவுலிங்கில் ஆட்டமிழந்து தான் இதில் வேதனையான விஷயம். மூன்று போட்டிகளிலும் பில் சால்ட் மூன்று ஓவர்கள் கூட களத்தில் நிற்கவில்லை. அதிரடிக்கு பெயர்போன பில் சால்ட்டை ஐபிஎல் மெகா ஏலத்தில் ஆர்சிபி அணி ரூ.11.50 கோடிக்கு வாங்கியது.

சிங்கம் களம் இறங்கிடுச்சே! மீண்டும் ரஞ்சி போட்டியில் களம் இறங்கிய கிங் கோலி - அதிர்ந்த ஸ்டேடியம்

34
ஆர்சிபி அணி

ஆர்சிபி அணி

ஆர்சிபி அணியில் தொடக்கத்தில் அதிரடி வீரர் இல்லாத நிலையிலும், ஒரு விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனை மனதில் வைத்தும் பில் சால்ட்டை ஆர்சிபி அணியில் எடுத்தது. இது மட்டுமின்றி கடந்த சீசனில் கொல்கத்த நைட் ரைடர்ஸ் அணியில் ஆடிய பில் சால்ட் 12 போட்டிகளில் 435 ரன்கள் குவித்து கொல்கத்தா கோப்பையை கையில் ஏந்த முக்கிய பங்கு வகித்தார். இதை மனதில் வைத்தும் பல கோடிகளை கொட்டி ஆர்சிபி அவரை அணியில் எடுத்தது.

44
ஏலத்தில்தவறு செய்த ஆர்சிபி

ஏலத்தில்தவறு செய்த ஆர்சிபி

ஆனால் இப்போது இந்திய தொடரில் அவர் கொஞ்சம் கூட ரன் அடிக்க முடியாமல் திணறி வருவது ஆர்சிபி அணி நிர்வாகத்தை கவலையில் ஆழ்த்தியுள்ளது. ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென்னாப்பிரிக்க வீரர்களை பொறுத்தவரை இந்திய மண்ணில் ஸ்பின் பந்தில் தடுமாறினாலும், பாஸ்ட் பவுலிங்கில் சூப்பராக விளையாடுவார்கள்.

ஆனால் பில் சால்ட் இந்திய தொடரில் பாஸ்ட் பவுலிங்கில் அடுத்தடுத்து ஆட்டமிழந்து வருவது ஆர்சிபி அணி நிர்வாகத்தை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. பில் சால்ட்டை ஏலத்தில் எடுத்து ஆர்சிபி தவறு செய்து விட்டதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

IND vs ENG 4th T20: இந்திய அணியில் 2 வீரர்கள் அதிரடி நீக்கம்? பிளேயிங் லெவன் இதுதான்!

கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.

About the Author

RA
Rayar A
டிசம்பர் 2024 முதல் ஏசியாநெட் தமிழ் வெப்சைட்டில் பணிபுரிந்து வருகிறேன். இளங்கலை பட்டப்படிப்பு முடித்துள்ளேன். விளையாட்டு, டெக்னாலஜி மற்றும் பயணம் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உண்டு. தினத்தந்தி, ஒன் இந்தியா தமிழ், ஆதன் என முன்னணி ஊடகங்களில் பணியாற்றிய அனுபவம் உள்ளது. என்னை rayar.a@asianetnews.in என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
ஐபிஎல்
ஐபிஎல் 2025

Latest Videos
Recommended Stories
Recommended image1
Now Playing
TNPL 2026 Qualifier 2: திருச்சி அணியை வீழ்த்தி கோவை கிங்ஸ் அபார வெற்றி – ஃபைனலுக்கு தகுதி!
Recommended image2
IND vs SL: ஜெயிக்க வேண்டிய மேட்ச் டிரா ஆனது எப்படி? இந்திய அணி கோட்டை விட்டது எங்கே? சுப்மன் கில் விளக்கம்!
Recommended image3
Sonal Dinusha: தோல்வியின் விளிம்பிலிருந்து இலங்கையை மீட்ட சோனல் தினுஷா... கொழும்புவில் நடந்தது என்ன?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved