MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Sports
  • Sports Cricket
  • IPL 2025: ஐபிஎல் 2024ல் தோல்வி –கேப்டன் பதவியை இழக்க கூடிய 3 இளம் வீரர்கள் யார் யார்? இளவரசனும் இழக்க வாய்ப்பு

IPL 2025: ஐபிஎல் 2024ல் தோல்வி –கேப்டன் பதவியை இழக்க கூடிய 3 இளம் வீரர்கள் யார் யார்? இளவரசனும் இழக்க வாய்ப்பு

ஐபிஎல் 2025 மெகா ஏலத்திற்கு முன்னதாக அணிகளில் பல மாற்றங்கள் நிகழ உள்ளன. குறிப்பாக சில அணிகளின் கேப்டன்கள் மாற்றப்பட அதிக வாய்ப்பு உள்ளது. தங்கள் அணியின் கேப்டன்களை மாற்றவும் வாய்ப்புகள் இருக்கிறது.

2 Min read
Author : Rsiva kumar
Published : Sep 08 2024, 09:22 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
Gujarat Titans, IPL 2025

Gujarat Titans, IPL 2025

2024 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்ட சுப்மன் கில் தலைமையிலான அணியானது 14 போட்டிகளில் 5 வெற்றிகளுடன் 8ஆவது இடம் பிடித்து பிளே ஆஃப் வாய்ப்பு இழந்து வெளியேறியது. இந்த நிலையில் தான் இந்த தோல்வி காரணமாக 2025 ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் ஏலத்திற்கு முன்னதாக குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டன் பொறுப்பிலிருந்து கில் நீக்கப்படுவதற்கு அதிக வாய்ப்புகள் இருப்பதாக ஐபிஎல் வட்டாரத்தில் பரவலாக பேச்சு அடிபடுகிறது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred
26
Shubman Gill

Shubman Gill

ஐபிஎல் 2025க்கான மெகா ஏலத்திற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. இன்னும் ஓரிரு மாதங்களில் ஐபிஎல் ஏலம் நடைபெற இருக்கிறது. இதில் சீனியர் வீரர்கள் முதல் இளம் வீரர்கள் வரையில் அனைவரும் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுக்கிறது. ஒவ்வொரு அணியும் எத்தனை வீரர்களை தக்க வைத்து கொள்ளலாம் என்பது குறித்து பிசிசிஐ இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.

36
Gujarat Titans - Shubman Gill

Gujarat Titans - Shubman Gill

எனினும், அணியின் உரிமையாளர்கள் குறைந்தது 4 முதல் 6 வீரர்கள் வரையில் தக்க வைக்க அனுமதி கோருகின்றனர். அதே நேரத்தில் ஒவ்வொரு அணியும் தங்களது அணியின் கேப்டன்களை மாற்றவும் வாய்ப்புகள் இருக்கிறது. ஐபிஎல் 2025க்கு முன் கேப்டனாக இருக்கும் 3 இளம் வீரர்களை இங்கே பார்க்கலாம்.

46
Sam Curran, Punjab Kings

Sam Curran, Punjab Kings

சாம் கரண்:

இங்கிலாந்து அணியின் சிறந்த ஆல் ரவுண்டரான சாம் கரண், பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டனாகவும் செயல்பட்டார். ஷிகர் தவான் கேப்டனாக இருந்து காயம் காரணமாக வெளியேறிய நிலையில் அவருக்குப் பதிலாக அணியின் கேப்டனாக சாம் கரண் தான் செயல்பட்டார். எனினும், அவருக்கு தோல்வியே பரிசாக கிடைத்தது. இதன் காரணமாக பஞ்சாப் கிங்ஸ் அணியானது ரோகித் சர்மாவிற்கு வலைவீசியது.

வரும் ஏலத்தில் ரோகித் சர்மா பங்கேற்றால் அவரை ஏலத்தில் வாங்க பஞ்சாப் கிங்ஸ் அணியானது ரெடியாக இருக்கும். இதுவரையில் ஒரு முறை கூட டிராபி கைப்பற்றாத அணிகளில் பஞ்சாப் கிங்ஸ் அணியும் ஒன்று.

56
Shubman Gill

Shubman Gill

சுப்மன் கில்:

2024 ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடரில் குஜராத் டைட்டன்ஸ் அண்யின் கேப்டனாக இருந்த ஹர்திக் பாண்டியா டிரேட் முறையில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு சென்றார். அங்கு அவருக்கு கேப்டன் பொறுப்பு கொடுக்கப்பட்டது. இதன் காரணமாக குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டனாக சுப்மன் கில் பொறுப்பேற்றார். கேப்டனாக பொறுப்பேற்ற கில் தலைமையிலான அணியானது ஒவ்வொரு வெற்றிக்காகவும் துடித்தது. இந்த தொடரில் குஜராத் விளையாடிய 14 போட்டிகளில் 5ல் மட்டுமே வெற்றி பெற்றது.

பிளே ஆஃப் வாய்ப்பை இழந்து லீக் சுற்று போட்டிகளுடன் வெளியேறியது. அதோடு புள்ளிப்பட்டியலில் 8ஆவது இடம் பிடித்தது. இந்த நிலையில் தான் ஹர்திக் பாண்டியா போன்ற ஒரு வீரரை ஏலத்தில் எடுத்து கில்லின் கேப்டன் பொறுப்பை பறிக்க குஜராத் தீவிரமாக உள்ளதாக ஐபிஎல் வட்டாரத்தில் சொல்லப்படுகிறது.

66
Faf du Plessis, Royal Challengers Bengaluru, IPL 2025

Faf du Plessis, Royal Challengers Bengaluru, IPL 2025

ஃபாஃப் டு பிளெசிஸ்:

ஐபிஎல் 2022க்கு முன்னதாக ஆர்சிபி கேப்டன் பதவியில் இருந்து விராட் கோலி விலகினார். அதன் பிறகு ஃபாஃப் டு பிளெசிஸ் கேப்டனாக பொறுப்பேற்றார். ஆனால், இவரது தலைமையிலான ஆர்சிபி அணியானது ஒரு முறை கூட டிராபி கைப்பற்றவில்லை. 3 சீசன்களாக தோல்வியை தழுவினார்.

ஐபிஎல் 2025 மெகா ஏலத்திற்கு முன்னதாக ஆர்சிபி கேப்டன் பொறுப்பிலிருந்து டூ பிளெசிஸ் நீக்கப்பட வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது. ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு எப்படியும் டிராபியை கைப்பற்ற வேண்டும் என்பதாக புதிய கேப்டனை தேடும் வேலையில் ஆர்சிபி தீவிரம் காட்டி வருகிறது.

About the Author

RK
Rsiva kumar
நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.
குஜராத் டைட்டன்ஸ்
ஐபிஎல் 2025
பஞ்சாப் கிங்ஸ்
ரோகித் சர்மா
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு
ஷுப்மன் கில்
இந்திய கிரிக்கெட் அணி
விராட் கோலி

Latest Videos
Recommended Stories
Recommended image1
CSK Playoffs 2026: SRH-யிடம் தோல்வி... CSK-க்கு ப்ளேஆஃப் வாய்ப்பு இருக்கா? கணக்குகள் சொல்வதென்ன?
Recommended image2
Sanju Samson: மின்னல் வேக ஸ்டம்பிங்.. களத்தில் வெடித்த வாக்குவாதம்..! பிளே-ஆஃப்க்குள் நுழைந்த SRH
Recommended image3
ரஜினியின் வெறித்தனமான ரசிகர்! விஜய் ஸ்டைலில் கொண்டாட்டம்! வெங்கடேஷ் ஐயர் சொன்னது என்ன தெரியுமா?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved