கோலி, சாஸ்திரியின் குறுக்குபுத்தி இந்திய வீரர்கள் அனைவருக்கும் தெரியும்..! டீமையே நாசமாக்கி வச்சுருக்காங்க
First Published Dec 6, 2020, 4:43 PM IST
வீரர்கள் மீது நம்பிக்கை வைத்து அவர்களது திறமையை நிரூபிக்கவும், நிரூபித்த வீரர்கள் சொதப்பினால், அவர்கள் மீண்டும் ஃபார்முக்கு திரும்புவதற்கும் போதிய அவகாசம் கொடுக்காமல் வீரர்களை எடுப்பதும் கழட்டிவிடுவதுமாக இருக்கும் இந்திய அணியின் கேப்டன் கோலி மற்றும் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரியை மிகக்கடுமையாக விமர்சித்துள்ளார் முகமது கைஃப்.

இந்திய அணி கேப்டன் விராட் கோலி, அணி காம்பினேஷனை தேவையில்லாமல் மாற்றுவது, ஒருசில போட்டிகளில் சொதப்பும் வீரர்கள் மீது நம்பிக்கை வைத்து தொடர் வாய்ப்பளிக்காமல் கழட்டிவிடுவது ஆகிய கோலியின் செயல்பாடுகள் தொடர் விமர்சனங்களை எதிர்கொண்டுவருகிறது. கோலியின் கேப்டன்சியை முன்னாள் ஜாம்பவான்கள் பலரும் பலமுறை விமர்சித்தனர், விமர்சித்துவருகின்றனர்.

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடந்துவரும் டி20 தொடரிலும் அதே தவறை செய்தார் கோலி. ஒருநாள் தொடரில் சரியாக ஆடாத ஷ்ரேயாஸ் ஐயரை, முதல் டி20 போட்டியில் அணியில் எடுக்கவில்லை. இன்று சிட்னியில் நடந்துவரும் 2வது டி20 போட்டியில் ஷ்ரேயாஸ் ஐயர் சேர்க்கப்பட்டுள்ளார். ஆனால் முதல் டி20 போட்டியில் ஷ்ரேயாஸ் ஐயரை கோலி நீக்கியதன் விளைவாக கோலியை மிகக்கடுமையாக சாடினார் சேவாக்.
Today's Poll
எத்தனை பிளேயர்களுடன் விளையாட விரும்புவீர்கள்?