நீ யாருடா டிக்ளர் செய்ய? உள்ளூர் போட்டியில் கேப்டன் மீது வெறுப்பின் உட்சத்தில் பேட்டை விட்டெறிந்த ஸ்டார்க்
அணி கேப்டன் டிக்ளர் அறிவித்ததால், சதமடிக்கும் வாய்ப்பை இழந்த அதிருப்தியில் பெவிலியன் திரும்பிய மிட்சல் ஸ்டார்க் பேட்டை தூக்கி எறிந்த சம்பவம் நடந்துள்ளது.
ஷெஃபீல்ட் கோப்பைக்கான முதல்தர கிரிக்கெட் போட்டி நடைபெற்று வருகிறதுபின் வரிசையில் களமிறங்கிய நியூ சவுத் வேல்ஸ் அணி வீரர் மிட்சல் ஸ்டார்க், 132 பந்துகளை எதிர்கொண்டு 9 பவுண்டரிகள், 1 சிக்ஸர் அடித்து 86 ரன்களுடன் களத்தில் நின்றார்.
தன்னுடைய முதல் சதத்தைப் பதிவு செய்ய இன்னும் 16 ரன்களே தேவை என்ற எதிர்பார்ப்புடன், மிட்சல் ஸ்டார்க் களத்தில் நிற்க, அணி கேப்டனான நெவில், டிக்ளர் செய்வதாக அறிவித்தார். தன்னுடைய முதல் சதத்தைப் பதிவு செய்யும் வாய்ப்பை இழந்த அதிருப்தியில், பெவிலியன் திரும்பிய ஸ்டார்க், தன்னுடைய பேட்டையும், கையுறையும் தூக்கி எறிந்தார்
தொடக்க நாளில் 64 ரன்களுக்கு ஆட்டமிழந்த நியூ நியூ சவுத் வேல்ஸ் வியக்கத்தக்க வெற்றியைப் பெற்றபின், "நாங்கள் அதைப் பற்றி கொஞ்சம் அரட்டை அடித்துள்ளோம்" என்று நெவில் கூறினார். "நான் அவரிடம் மன்னிப்பு கேட்டேன் என்றும் அணியின் கேப்டன் கூறியுள்ளார்
அவர் மிகவும் விரக்தியடைந்தார், ஏனெனில் அவர் நன்றாக பேட்டிங் செய்தார், மேலும் ஒரு சதத்தை பெறுவதற்கு நெருக்கமாக இருந்தார். அவர் அவருக்கு பேட்டிங் செய்தால் அவை அவருக்கு இன்னொரு வாய்ப்பாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை
இந்தச் செயலானது அங்கிருந்த கேமரா ஒன்றில் பதிவாகியுள்ளது