MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
TRENDING :
Moon Transit in Scorpio
OTT Release This Week
DA Hike
Venus Retrograde
Train Lower Berth
Mercury Transit
8th Pay Commission
Chanakya Niti
Tamil Nadu Power Cut
FD Vs RD Calculator
Single Door Fridge Tips
Upcoming Hatchback Cars
Bigg Boss Tamil Season 10
  • Home
  • Sports
  • Sports Cricket
  • இந்த பையனிடம் அந்த திறமை இருக்கு.. இந்திய அணிக்கு புதிய தொடக்க வீரரை பரிந்துரைத்த ஜெயவர்தனே

இந்த பையனிடம் அந்த திறமை இருக்கு.. இந்திய அணிக்கு புதிய தொடக்க வீரரை பரிந்துரைத்த ஜெயவர்தனே

ரிஷப் பண்ட்டுக்கு இந்திய அணியின் தொடக்க வீரராக இறங்குவதற்கான  திறமை இருக்கிறது என்று இலங்கை முன்னாள் ஜாம்பவான் மஹேலா ஜெயவர்தனே கருத்து கூறியிருக்கிறார்.  

2 Min read
Author : karthikeyan V
Published : Aug 11 2022, 06:48 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15

ஆசிய கோப்பை தொடர் ஆகஸ்ட் 27 முதல் செப்டம்பர் 11 வரை நடக்கிறது. அதைத்தொடர்ந்து அக்டோபர் - நவம்பரில் டி20 உலக கோப்பை தொடர் நடக்கிறது. இந்த 2 தொடர்களுக்காகவும் இந்திய அணி தீவிரமாக தயாராகிவருகிறது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25

ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி ஆசிய கோப்பை மற்றும் டி20 உலக கோப்பை ஆகிய 2 கோப்பைகளையும் தூக்கும் முனைப்பில் உள்ளது. கோப்பையை வெல்லும் உத்தியை அறிந்த ரோஹித் சர்மாவின் கேப்டன்சியில் ஆசிய கோப்பை, டி20 உலக கோப்பை, அடுத்த ஆண்டு நடக்கவுள்ள ஒருநாள் உலக கோப்பை ஆகிய 3 கோப்பைகளையும் வெல்லும் உறுதியில் உள்ளது இந்திய அணி.

இதையும் படிங்க - இவரை ஏன்யா இன்னும் புடிச்சு தொங்கிட்டு இருக்கீங்க? இந்திய அணியில் சீனியர் வீரரின் தேர்வை விமர்சித்த கிரன் மோர்
 

35

ஆசிய கோப்பைக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுவிட்டது. டி20 உலக கோப்பைக்கான இந்திய அணியில் இடம்பிடிக்க வீரர்களுக்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது. டி20 உலக கோப்பைக்கு தயாராகும் இந்திய அணி, பல பரிசோதனை முயற்சிகளை மேற்கொள்கிறது.
 

45

அந்தவகையில், எந்த பேட்ஸ்மேனும் எந்த பேட்டிங் ஆர்டரிலும் இறங்கி ஆட ஏதுவாக,  பேட்டிங் ஆர்டர் மாறி மாறி இறக்கப்படுகிறார்கள். ரிஷப் பண்ட் ஒன்றிரண்டு போட்டிகளில் ஓபனிங்கில் இறக்கிவிடப்பட்டார். வெஸ்ட் இண்டீஸுக்கு எதிராக சூர்யகுமார் யாதவ் ஓபனிங்கில் இறக்கிவிடப்பட்டார். கேஎல் ராகுல் காயத்தால் ஆடாததால் தான் ஓபனிங்கில் இந்த பரிசோதனைகள் செய்யப்பட்டன. கேஎல் ராகுல் ஆசிய கோப்பையில் ஆடுகிறார். டி20 உலக கோப்பையிலும் ஆடுவார். எனவே அவர் தான் தொடக்க வீரராக இறங்குவார்.

இதையும் படிங்க உன் கவலை எங்களுக்கு புரியுது.. அதுக்கு நாங்க என்ன பண்றது..? ஆடம் கில்கிறிஸ்ட்டுக்கு கவாஸ்கர் பதிலடி

55

இந்நிலையில், இந்திய அணியின் ஓபனிங் பேட்டிங் குறித்து பேசியுள்ள இலங்கை முன்னாள் ஜாம்பவான் மஹேலா ஜெயவர்தனே, இந்தியா அடுத்த தலைமுறை வீரர்களுக்கு வாய்ப்பளித்து தொடர்ச்சியாக பரிசோதித்துவருகிறது. ஜிம்பாப்வே சுற்றுப்பயணம் இந்திய இளம் வீரர்களுக்கு அருமையான வாய்ப்பு. ரிஷப் பண்ட்டே கூட ஓபனிங்கில் இறங்கலாம். அவர் உள்நாட்டு போட்டிகளில் பெரிதாக ஓபனிங்கில் ஆடியதில்லை என்றாலும், அவருக்கு அந்த திறமை இருக்கிறது என்று ஜெயவர்தனே தெரிவித்துள்ளார்.
 

About the Author

KV
karthikeyan V
டி20 உலகக் கோப்பை
ஆசியக் கோப்பை
இந்திய கிரிக்கெட் அணி
ரிஷப் பண்ட்
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
IND vs AFG 2nd T20: தமிழக வீரர் விலகல்.. சஞ்சு சாம்சன் நீக்கம்.. இளம் வீரருக்கு இடம்.. பிளேயிங் லெவன்!
Recommended image2
Trophy Controversy: துபாயில் உச்சக்கட்ட டிராமா.. கோப்பையை வாங்க மறுத்த இந்திய மகளிர் அணி!
Recommended image3
Abhishek Sharma Record: சுனாமியாக கொந்தளித்த அபிஷேக் சர்மா... T20-ல் புதிய உலக சாதனை!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved