- Home
- Sports
- Sports Cricket
- IPL 2026 Winner : இந்த வருஷம் ஐபிஎல் கப் இந்த டீமுக்கு தான்...! ஹர்திக் பாண்டியாவுக்குள் இப்படி ஒரு பவரா?
IPL 2026 Winner : இந்த வருஷம் ஐபிஎல் கப் இந்த டீமுக்கு தான்...! ஹர்திக் பாண்டியாவுக்குள் இப்படி ஒரு பவரா?
IPL 2026 : ஐபிஎல் தொடரில் கடந்த 3 ஆண்டுகளாக வெற்றியாளரை தீர்மானித்தது ஹர்திக் பாண்டியா தான் என்று சொன்னால் நம்ப முடிகிறதா. அதன் பின்னணியை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

Who Will Win IPL 2026 Trophy
ஐபிஎல் தொடர் கடந்த 19 ஆண்டுகளாக நடத்தப்பட்டு வருகிறது. ஐபிஎல் தொடரின் 19வது சீசன் கடந்த மார்ச் மாதம் 28-ந் தேதி தொடங்கியது. இந்த தொடர் தொடங்கி லீக் போட்டிகள் நேற்றுடன் முடிவுக்கு வந்தது. இந்த லீக் சுற்றின் முடிவில் குஜராத் டைட்டன்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களுரு, சன் ரைசர்ஸ் ஹைதராபாத், ராஜஸ்தான் ராயல்ஸ் ஆகிய நான்கு அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறி உள்ளன. இதில் முதல் பிளே ஆஃப் போட்டியில் குஜராத் - பெங்களூரு அணிகள் பலப்பரீட்சை நடத்த உள்ளன. இதையடுத்து எலிமினேட்டரில் ராஜஸ்தான், ஹைதராபாத் அணிகள் மோத உள்ளன.

ஐபிஎல் கோப்பை யாருக்கு?
ஐபிஎல் தொடரில் இந்த ஆண்டு யார் கோப்பையை வெல்லப்போகிறார்கள் என்கிற பேச்சுக்கள் தற்போதே எழத் தொடங்கிவிட்டன. சிலர் ஆர்சிபி இரண்டாவது முறையாக கோப்பையை வெல்லும் என கூறி வருகின்றனர். சிலரோ ராஜஸ்தான் கப் அடிக்க வாய்ப்பு உள்ளதாக கூறி வருகிறார்கள். ஒரு சிலர் ஹைதராபாத் அணிக்கும், குஜராத் அணிக்கும் வாய்ப்பு இருப்பதாக கூறுகின்றனர். ஆனால் இந்த சீசன் வெற்றியாளர் ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டுவிட்டார் என்று சொன்னால் நம்ப முடிகிறது. அதைப்பற்றி தான் இந்த தொகுப்பில் பார்க்க உள்ளோம்.
ஹர்திக் பாண்டியா மேஜிக்
ஐபிஎல் தொடரில் கடந்த 3 ஆண்டுகளாக கப் ஜெயித்த அணிக்கும் ஹர்திக் பாண்டியாவுக்கும் ஒரு கனெக்ஷன் இருக்கிறது. அது என்னவென்றால், ஒவ்வொரு சீசனும் தொடங்கும் முன்னர் அனைத்து டீம் கேப்டன்களையும் ஒன்றாக போட்டோஷூட் நடத்துவார்கள். அந்த வகையில் ஐபிஎல் தொடரின் கடந்த மூன்று சீசன்களிலும் நடத்தப்பட்ட போட்டோஷூட்டில் ஹர்திக் பாண்டியா அருகில் நின்ற கேப்டன்கள் தான் கப் ஜெயித்துள்ளனர். அதே கணிப்புப்படி இந்த ஆண்டும் அவர் பக்கம் நின்ற கேப்டன் ஜெயிக்க அதிக வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
இந்த வருஷம் கப் இந்த டீமுக்கா?
அதன்படி இந்த ஆண்டு ஐபிஎல் தொடரின் தொடக்கத்தில் நடத்தப்பட்ட போட்டோஷூட்டில் ஹர்திக் பாண்டியா அருகில் சுப்மன் கில் தான் நிற்கிறார். அதனால் அவர் தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணி கோப்பையை வெல்ல அதிக வாய்ப்பு இருப்பதாக நெட்டிசன்கள் சிலர் கூறி வருகின்றனர். குஜராத் டைட்டன்ஸ் அணி இதற்கு முன்னர் 2022-ம் ஆண்டு ஐபிஎல் கோப்பையை வென்றிருக்கிறது. அந்த சமயத்தில் அந்த அணியின் கேப்டனாக இருந்தது ஹர்திக் பாண்டியா தான். அதன் பின்னர் 4 ஆண்டுகள் கழித்து சுப்மன் கில், குஜராத்துக்காக கோப்பையை வென்று தருவாரா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

