MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Sports
  • Sports Cricket
  • IND vs BAN T20: 14 ஆண்டுகளுக்கு பிறகு முதல் முறையாக நடக்கும் டி20 போட்டி – எங்கு? யார் யாருக்கு?

IND vs BAN T20: 14 ஆண்டுகளுக்கு பிறகு முதல் முறையாக நடக்கும் டி20 போட்டி – எங்கு? யார் யாருக்கு?

14 ஆண்டுகளுக்குப் பிறகு குவாலியரில் சர்வதேச கிரிக்கெட் போட்டி திரும்புகிறது, இந்தியா மற்றும் வங்கதேசம் இடையிலான டி20 தொடரோடு புதிய ஸ்ரீமந்த் மாதவ் ராவ் சிந்தியா கிரிக்கெட் ஸ்டேடியம் திறக்கப்படுகிறது.

2 Min read
Rsiva kumar
Published : Oct 04 2024, 07:50 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
Sachin Tendulkar

Sachin Tendulkar

இந்தியா மற்றும் வங்கதேசம் இடையிலான டி20 தொடரின் முதல் போட்டி குவாலியரின் கிரிக்கெட் பாரம்பரியமான வேறு இடத்திலிருந்து தொடங்க இருக்கிறது. 14 ஆண்டுகளுக்கு பிறகு முதல் முறையாக குவாலியரில் டி20 கிரிக்கெட் போட்டி நடத்தப்படுகிறது. கிட்டத்தட்ட நீண்ட இடைவெளிக்குப் பிறக் கிரிக்கெட் தொடரானது பாரம்பரிய இடத்திற்கு திரும்புகிறது.

வரும் 6ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் டி20 போட்டி நடக்க இருக்கிறது. குவாலியரில் நடைபெறும் இந்தப் போட்டியில் இந்தியா மற்றும் வங்கதேச அணிகள் மோதுகின்றன. இந்த வரலாற்று நிகழ்வானது புதிதாக கட்டப்பட்ட ஸ்ரீமந்த் மாதவ் ராவ் சிந்தியா கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நடைபெறுகிறது. இது கிரிக்கெட் பாரம்பரியத்திற்கு ஒரு புதிய அத்தியாயத்தை குறிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

25
New Madhavrao Scindia Cricket Stadium, Gwalior

New Madhavrao Scindia Cricket Stadium, Gwalior

புதிதாக கட்டப்பட்ட ஸ்ரீமந்த் மாதவ் ராவ் சிந்தியா கிரிக்கெட் ஸ்டேடியம் அதன் முதல் சர்வதேச போட்டியை 6ஆம் தேதி நடக்கிறது. ஆனால் குவாலியரின் கிரிக்கெட் வரலாறு சின்னமான கேப்டன் ரூப் சிங் ஸ்டேடியத்தில் தான் ஆரம்பமானது. பல மறக்கமுடியாத கிரிக்கெட் தருணங்களைக் கண்ட இந்த மைதானம், முதலில் ஹாக்கி ஸ்டேடியமாக இருந்தது. 2 முறை ஹாக்கியில் ஒலிம்பிக் பதக்கம் வென்ற தியான் சந்தின் இளைய சகோதரர் ரூப் சிங்கின் நினைவாக அந்த மைதானத்திற்கு ரூப் சிங் என்று பெயரிடப்பட்டது.

கடந்த 2010 ஆம் ஆண்டு பிப்ரவரி 24 ஆம் தேதி ரூப் சிங் ஸ்டேடியத்தில் கடைசியாக இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா இடையிலான ஒருநாள் கிரிக்கெட் சர்வதேச போட்டி நடத்தப்பட்டது. இந்தப் போட்டியில் தான் இந்திய அணியின் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் ஒருநாள் போட்டியில் இரட்டை சதம் விளாசிய முதல் வீரர் என்ற சாதனையை படைத்தார். இது குறித்து வர்ணனையாளர் ரவி சாஸ்திரி, இது கிரிக்கெட் வரலாற்றில் பொறிக்கப்பட்ட தருணம். இந்த மைதானத்தில் 200 ரன்களை எட்டிய முதல் வீரர். இந்தியாவின் சூப்பர் மேன் என்று குறிப்பிட்டார்.

35
IND vs BAN T20 Series

IND vs BAN T20 Series

குவாலியரின் கேப்டன் ரூப் சிங்கின் மைதானம், உலகக் கோப்பை உள்பட பல சர்வதேச போட்டிகளை நடத்தியுள்ளது. ஆனால், நிறவெறி காரணமாக பல பிரச்சனைகளை சந்தித்த பிறகு இந்த மைதானத்தில் பல ஆண்டுகளாக போட்டிகள் நடத்தப்படவில்லை. அதன் பிறகு மீண்டும் 1991 ஆம் ஆண்டு சர்வதேச போட்டிகள் நடத்தப்பட்டது. இந்திய அணிக்கு சாதமாக இருந்த இந்த மைதானம் இந்திய அணிக்கு பல வெற்றிகளை பெற்றுக் கொடுத்துள்ளது.

1996 ஆம் ஆண்டு ரஞ்சி டிராபி தொடரின் இறுதிப் போட்டியில் மும்பை மற்றும் டெல்லி அணிகள் மோதின. இந்தப் போட்டியானது பகல் இரவு போட்டியாக நடைபெற்றது. இப்படி பல முக்கியமான போட்டிகளை நடத்திய குவாலியர் ரூப் சிங் ஸ்டேடியத்தில் பல ஆண்டுகளாக சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் நடத்தப்படவில்லை.

45
India vs Bangladesh T20 Series

India vs Bangladesh T20 Series

இந்த நிலையில் தான் கிட்டத்தட்ட 14 ஆண்டுகளுக்கு பிறகு குவாலியரில் சர்வதேச கிரிக்கெட் போட்டி நடத்தப்படுகிறது. ஆனால், புதிதாக வடிவமைக்கப்பட்ட மைதானத்தில் நடத்தப்படுகிறது. இந்த மைதானத்தில் நடத்தப்படும் முதல் சர்வதேச டி20 போட்டியில் தான் இந்தியா மற்றும் வங்கதேச அணிகள் மோதுகின்றன.

கேப்டன் ரூப் சிங் மைதானத்தின் மறக்க முடியாத போட்டிகள்:

1988 ஆம் ஆண்டு நடைபெற்ற 6ஆவது ஒருநாள் போட்டியில் 73 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவை வெஸ்ட் இண்டீஸ் வீழ்த்தியது.

55
Team India, IND vs BAN 1st T10

Team India, IND vs BAN 1st T10

1993 ஆம் ஆண்டு நடைபெற்ற ஒருநாள் போட்டியில் இங்கிலாந்திற்கு எதிராக 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றது. இதே போன்று மற்றொரு நாள் நடைபெற்ற இந்தியா 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

2010 ஆம் ஆண்டு இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான ஒருநாள் போட்டியில் இந்தியா 153 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்தப் போட்டியில் தான் சச்சின் டெண்டுல்கர் இரட்டை சதம் விளாசினார்.

About the Author

RK
Rsiva kumar
நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.
சச்சின் டெண்டுல்கர்
Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved