- Home
- Sports
- Sports Cricket
- IND vs SA 2nd Test: ஆல்ரவுண்டர் அதிரடி நீக்கம்..! தமிழக வீரர் கம்பேக்..! இந்திய அணி பிளேயிங் லெவன்!
IND vs SA 2nd Test: ஆல்ரவுண்டர் அதிரடி நீக்கம்..! தமிழக வீரர் கம்பேக்..! இந்திய அணி பிளேயிங் லெவன்!
IND vs SA 2nd Test: இந்தியா, தென்னாப்பிரிக்கா இடையிலான 2வது டெஸ்ட் போட்டி வரும் 22ம் தேதி தொடங்குகிறது. 2வது டெஸ்ட்டில் இந்திய அணியின் பிளேயிங் லெவன் குறித்து விரிவாக பார்க்கலாம்.

இந்தியா vs தென்னாப்பிரிக்கா டெஸ்ட் தொடர்
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 30 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது. இந்திய அணியின் முன்னணி பேட்ஸ்மேன்களான கே.எல்.ராகுல், ஜெய்ஸ்வால், ரிஷப் பண்ட், துருவ் ஜூரல் ஆகியோரின் மோசமான பேட்டிங்கே தோல்விக்கு முக்கிய காரணமாகி விட்டது. இந்த தோல்வியின் மூலம் இந்திய அணி 2 போட்டிகள் கொண்ட தொடரில் 0-1 என்ற கணக்கில் பின்தங்கியுள்ளது.
சுப்மன் கில் விளையாடுவது சந்தேகம்
இந்தியா, தென்னாப்பிரிக்கா இடையிலான 2வது டெஸ்ட் போட்டி கவுகாத்தியில் உள்ள பர்சபரா கிரிக்கெட் மைதானத்தில் வரும் 22ம் தேதி தொடங்குகிறது. இந்த போட்டியில் கட்டாயம் வெற்றி பெற்றால் தான் இந்திய அணியால் தொடரை டிரா செய்ய முடியும். முதல் டெஸ்ட் போட்டியில் கழுத்தில் தசைப்பிடிப்பால் விலகிய இந்திய கேப்டன் சுப்மன் கில் 2வது டெஸ்ட் போட்டியில் விளையாடுவது சந்தேகமே. இதனால் ரிஷப் பண்ட் கேப்டானாக இருப்பார்.
அக்சர் படேல் நீக்கப்பட வாய்ப்பு
சுப்மன் கில் விளையாடவில்லை என்றால் அவருக்கு பதிலாக கர்நாடக வீரர் 25 வயதான தேவ்தத் படிக்கல் இடம்பெறலாம் என தகவல்கள் கூறுகின்றன. இதேபோல் ஏற்கெனவே குல்தீப் யாதவ், ரவீந்திர ஜடேஜா மற்றும் வாஷிங்டன் சுந்தர் என 3 ஸ்பின்னர்கள் உள்ளதால் ஆல்ரவுண்டர் அக்சர் படேல் நீக்கப்பட அதிக வாய்ப்புகள் உள்ளன. அவருக்கு பதிலாக தமிழகத்தை சேர்ந்த இடது கை பேட்ஸ்மேன் சாய் சுதர்சன் அணியில் சேர்க்கப்படலாம்.
சாய் சுதர்சனுக்கு இடம்
மற்றபடி அணியில் வேறு எந்த மாற்றமும் இருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது. முதல் டெஸ்ட்டின் இரண்டு இன்னிங்சிஸ்களிலும் சொதப்பினாலும் ஜெய்ஸ்வால் இடத்துக்கு எந்த ஆபத்தும் இல்லை. அவரும், கே.எல்.ராகுலும் ஓப்பனிங்கில் களமிறங்குவார்கள். ஒன் டவுனில் வாஷிங்டன் சுந்தர் அல்லது சாய் சுதர்சன் களமிறங்கலாம். மிடில் வரிசை மற்றும் கீழ் வரிசையில் தேவ்தத் படிக்கல், ரிஷப் பண்ட், ஜடேஜா, துருவ் ஜூரல் பேட்டிங் செய்ய உள்ளனர்.
இந்திய அணி பிளேயிங் லெவன்
ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ் என்ற 2 பாஸ்ட் பவுலர்கள், ஜடேஜா, குல்தீப் மற்றும் வாஷிங்டன் சுந்தர் என 3 ஸ்பின்னர்களுடன் இந்திய அணி களமிறங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியின் உத்தேச பிளேயிங் லெவன்: ரிஷப் பண்ட் (கேப்டன்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், கே.எல்.ராகுல், சாய் சுதர்சன், தேவ்தத் படிக்கல், ரவீந்திர ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர், துருவ் ஜூரல், குல்தீப் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா மற்றும் முகமது சிராஜ்.