பத்தாண்டின் சிறந்த டெஸ்ட் அணியை அறிவித்தது ஐசிசி..! கோலிக்கு கிடைத்த கௌரவம்
First Published Dec 27, 2020, 4:01 PM IST
பத்தாண்டின் சிறந்த டெஸ்ட் அணியை ஐசிசி அறிவித்துள்ளது.

ஒவ்வொரு ஆண்டின் இறுதியிலும் சிறந்த டெஸ்ட், ஒருநாள், டி20 அணிகளை தேர்வு செய்து அறிவிக்கும் ஐசிசி, அதேபோல ஒவ்வொரு பத்தாண்டும், அந்த பத்தாண்டின் சிறந்த அணிகளை தேர்வு செய்து அறிவிக்கும்.

அந்தவகையில், கடந்த பத்தாண்டின் சிறந்த டெஸ்ட் அணியை அறிவித்துள்ளது ஐசிசி. பத்தாண்டின் சிறந்த டெஸ்ட் தொடக்க வீரர்களாக, இங்கிலாந்தின் முன்னாள் ஜாம்பவான் அலெஸ்டர் குக் மற்றும் ஆஸ்திரேலியாவின் அதிரடி வீரர் டேவிட் வார்னர் ஆகிய இருவரையும் தேர்வு செய்துள்ளது. நியூசிலாந்து கேப்டனும் சமகாலத்தின் தலைசிறந்த வீரர்களில் ஒருவருமான வில்லியம்சனை 3ம் வரிசை வீரராகவும், இந்திய அணியின் கேப்டனும் ரன் மெஷினுமான விராட் கோலியை 4ம் வரிசை வீரராக தேர்வு செய்துள்ள ஐசிசி, பத்தாண்டின் சிறந்த டெஸ்ட் அணியின் கேப்டனாகவும் கோலியையே நியமித்துள்ளது.
Today's Poll
எத்தனை பிளேயர்களுடன் விளையாட விரும்புவீர்கள்?