பிசிசிஐ தலைவர் கங்குலியின் அடுத்த டார்கெட்..! ரசிகர்கள் மகிழ்ச்சி
டி20 உலக கோப்பையை அடுத்த ஆண்டு இந்தியாவில் நடத்துவது குறித்து பிசிசிஐ தலைவர் கங்குலி கருத்து தெரிவித்துள்ளார்.
கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் ஐபிஎல் 13வது சீசனை, பல்வேறு சவால்களை கடந்து ஐக்கிய அரபு அமீரகத்தில் வெற்றிகரமாக நடத்தி முடித்தது பிசிசிஐ. கொரோனா அச்சுறுத்தலால் இந்த ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடக்கவிருந்த டி20 உலக கோப்பை 2022ம் ஆண்டு ஒத்திவைக்கப்பட்டுத்தான், அந்த காலக்கட்டத்தில் ஐபிஎல் நடத்தப்பட்டது.
இதற்கிடையே அடுத்த ஆண்டு டி20 உலக கோப்பை திட்டமிட்டபடியே 2021ம் ஆண்டு நவம்பரில் இந்தியாவில் நடக்கவுள்ளது. ஐபிஎல்லை வெற்றிகரமாக நடத்தி முடித்துவிட்ட பிசிசிஐ, ஐசிசி டி20 உலக கோப்பையையும் வெற்றிகரமாக நடத்தும் முனைப்பில் உள்ளது.
இந்நிலையில், டி20 உலக கோப்பை குறித்து கருத்து தெரிவித்த கங்குலி ஐசிசி டி20 உலக கோப்பையை இந்தியாவில் நடத்துவது எங்களுக்கு கௌரவம். இந்தியா 1987 உலக கோப்பையிலிருந்து பல சர்வதேச தொடர்களை வெற்றிகரமாக நடத்தியுள்ளது. கிரிக்கெட்டை விரும்பும் நாடான இந்தியாவில் நடக்கும் டி20 உலக கோப்பையை உலகின் பல்வேறு நாடுகளிலிருந்து வரும் வீரர்கள் மகிழ்ந்து ஆடுவார்கள்.
ஐசிசி நிகழ்வுகளின் ஒரு பகுதியாக நான் ஒரு வீரராக இருப்பதை அனுபவித்துள்ளேன். உலக கிரிக்கெட் நிகழ்வின் சலசலப்பான சூழ்நிலையை உலகெங்கிலும் உள்ள பல லட்சக்கணக்கான மக்கள் ஒவ்வொரு விளையாட்டையும் பார்க்கிறார்கள் என்பதை அனுபவத்திலிருந்து அறிவேன். மதிப்புமிக்க நிகழ்வான டி20 உலக கோப்பையை நடத்த நாங்கள் தயாராகும் போது, ஒரு நிர்வாகியாக எனது பங்களிப்பை சிறப்பாக செய்ய காத்திருப்பதாக கங்குலி தெரிவித்துள்ளார்.