#IPL2021 இந்தியாவில் இரண்டே ஊர்களில் ஐபிஎல் போட்டிகள்..! பிசிசிஐயின் அதிரடி திட்டம்
ஐபிஎல் 14வது சீசன் இந்தியாவில் நடத்தப்படவுள்ள நிலையில் இரண்டே ஊர்களில் நடத்த பிசிசிஐ திட்டமிட்டுவருகிறது.
ஐபிஎல் 13வது சீசன் கொரோனா பெருந்தொற்று காரணமாக ஐக்கிய அரபு அமீரகத்தில் பார்வையாளர்களே இல்லாமல் நடத்தப்பட்டது. கொரோனாவிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு இயல்பு நிலைக்கு திரும்பிவிட்டாலும், கொரோனா நெறிமுறைகளை பின்பற்ற வேண்டியுள்ளது.
ஐபிஎல் 14வது சீசன் இந்தியாவிலேயே நடத்தப்படவுள்ளது. ஆனால் வழக்கம்போல 8 இடங்களில் நடத்தாமல், இரண்டே ஊர்களில் மட்டும் நடத்த பிசிசிஐ திட்டமிட்டுவருகிறது.
அதன்படி, ஐபிஎல் லீக் போட்டிகள் அனைத்தும் மும்பையிலும்(பிராட்போர்ன் ஸ்டேடியம், வான்கடே ஸ்டேடியம், டி.ஒய்.பாட்டீல் ஸ்டேடியம், ரிலையன்ஸ் கிரிக்கெட் ஸ்டேடியம்), பிளே ஆஃப் போட்டிகள் அகமதாபாத் சர்தார் படேல் ஸ்டேடியத்திலும் நடத்த திட்டமிட்டுவருவதாக பிசிசிஐ அதிகாரி ஒருவர் தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.