MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Spiritual
  • மலைகள் மீது கோயில்கள் கட்ட இப்படி ஒரு காரணமா?

மலைகள் மீது கோயில்கள் கட்ட இப்படி ஒரு காரணமா?

பல தெய்வங்களுக்கு கோயில்கள் ஏன் உயர்ந்த மலைகளில் மட்டுமே இருக்கின்றன என்பதை இந்தப் பதிவில் காணலாம்.

1 Min read
Kalai Selvi
Published : May 30 2025, 04:27 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Image Credit : Pixabay

Why are Temples Built on High Mountains : இந்தியாவில் பல கோயில்கள் மலைமீதுதான் அமைந்திருக்கும். மலைக்கோயில்கள் இல்லாத மாவட்டங்கள் குறைவுதான். புனித யாத்திரைகள், வழிபாடுகள் எல்லாம் இந்தியாவில் அதிக நம்பிக்கைகளுடன் பார்க்கப்படக் கூடியவை.சில கோயில்கள் உயர்ந்த மலைகள், குன்றுகளில் தாம் இருக்கும். ஏன் கீழே அவற்றை கட்ட முடியாதா? மலைகளில் எதற்காக கட்டப்பட்டியுள்ளனர் என்பதை இங்கு காணலாம்.

24
Image Credit : our own

மற்ற மத ஸ்தலங்களை விட இந்து மதத்தில் தான் மலைக்கோயில்கள் அதிகம். கேதார்நாத், பத்ரிநாத், வைஷ்ணோ தேவி, அமர்நாத், திருப்பதி, பழனி, சபரிமலை ஐயப்பன் என மக்கள் படையெடுக்கும் பல கோவில்கள் உள்ளன. ஆனால் பெரும்பாலும் பல பிரசித்தி பெற்ற கோயில்கள் ஏன் மலைகளில் உள்ளன; இதற்கு பின் வெறும் ஆன்மீக காரணங்கள் இல்லை. அறிவியல் காரணங்களும் உள்ளன.

Related Articles

Related image1
Spritual Tour for Vaishnava Temples: வைணவ கோயில்களுக்கு ஒருநாள் இலவச ஆன்மிக பயணம்! வெளியான சூப்பர் அறிவிப்பு!
Related image2
Tirupati Temple: இனி இந்துக்களுக்கு மட்டுமே வேலை! அதிர்ச்சியில் திருப்பதி தேவஸ்தான ஊழியர்கள்!
34
Image Credit : Social Media

பஞ்சபூதம்;

வேதங்கள், புராணங்களின்படி, பஞ்ச பூதங்களிடம் இருந்து இந்த பிரபஞ்சம் உருவானதாக சொல்லப்படுகிறது. நீர், காற்று, நெருப்பு, பூமி, வானம் அனைத்திலும் கடவுள்கள் வீற்றிருக்கிறார்கள். இதில் பூமியின் மகுடமாக மலைகள் உள்ளன. இந்த மகுடத்தை கடவுள்களுக்கு சூட்டும்விதமாக புனிதத் தலங்களும், கோயில்களும் மலைகளில் கட்டப்பட்டுள்ளன.

44
Image Credit : pexels

மலைகளின் வடிவமைப்பு:

மலைகள் சுத்தமாகவும், அமைதியாகவும் இருக்கும். மலைகளில் உள்ள கோயில்களில் அமர்ந்தால் மன அமைதியைத் தரக் கூடியது. எவ்வளவு மனக்கஷ்டம் இருந்தாலும் மலையேறி சென்று தெய்வ தரிசனம் செய்தால் மனம் இலகுவாகும். அப்படிப்பட்ட சூழலில் உள்ள நேர்மறை ஆற்றலை உடலுக்குள் பரவச் செய்யும் வடிவமைப்பு மலைகளுடையது. பூமியில் அரண் போல காணப்படும் மலைகளில் தெய்வங்களுக்கு கோயில் கட்டுவதற்கு இதுவும் ஒரு காரணமாக இருக்கலாம்.

About the Author

KS
Kalai Selvi
2019இல் தொடர்பியல் துறையில் எம்.பில் முடித்து, செய்தித் துறையில் பணியாற்றி வருகிறார். 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். ஏப்ரல் 2023ஆம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்கில் பணியாற்றி வருகிறார். லைப்ஸ்டைல் தொடர்பான செய்திகளில் நிபுணத்துவம் கொண்டவர். ஆரோக்கியம், ஆன்மீகம், ஃபிட்னஸ், வீட்டு பராமரிப்பு, அழகு பராமரிப்பு குறிப்புகள், குழந்தை வளர்ப்பு செய்திகள் போன்றவை அதில் அடங்கும். ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்கில் சேருவதற்கு முன்பு, தகவல் தொடர்புத் துறையில் உதவிப் பேராசிரியராகப் பணிபுரிந்தார்.
ஆன்மீகம்
இந்து
இந்தியா
ஜோதிடம்

Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved