MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Spiritual
  • யுகாதி 2025 எப்போது? அதை கொண்டாட என்ன காரணம் தெரியுமா?

யுகாதி 2025 எப்போது? அதை கொண்டாட என்ன காரணம் தெரியுமா?

இந்த 2025ம் ஆண்டில் யுகாதி பண்டிகை எப்போது வருகிறது. அது எதற்காக கொண்டாடப்படுகிறது? எப்படி கொண்டாட வேண்டும்? மற்றும் அதன் சிறப்புகள் என்ன என்பதை குறித்து இந்த பதிவை தெரிந்து கொள்ளலாம்.

2 Min read
Kalai Selvi
Published : Mar 26 2025, 09:53 AM IST| Updated : Mar 26 2025, 10:02 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15

Ugadi 2025 Date and Time : யுகாதி பண்டிகை என்பது தென்னிந்தியாவில் பாரம்பரிய பண்டிகைகளில் ஒன்றாக கருதப்படுகிறது. இந்த பண்டிகை ஆனது தெலுங்கு மொழி பேசும் மக்களால் மிகவும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. அதாவது தெலுங்கு புத்தாண்டின் துவக்க நாளை தான் யுகாதி பண்டிகையாக கொண்டாடப்படுகிறது. ஆந்திரா, தெலுங்கானா மற்றும் கர்நாடகா ஆகிய மாநிலங்களில் இந்த பண்டிகை மிகவும் சிறப்பாக கொண்டாடப்படும்.

25
யுகாதி பண்டிகையின் முக்கியத்துவம்:

யுகாதி பண்டிகையின் முக்கியத்துவம்:

மகிழ்ச்சி மற்றும் புதுப்பித்தலின் காலத்தை குறிக்கும் ஒரு பண்டிகை இதுவாகும். மேலும் ஒருவரது நேர்மறையான மனநிலை நம்பிக்கை மற்றும் உற்சாகத்துடன் புதிய தொடக்கங்களை தழுவ ஊக்குவிக்கும் நாளாக கருதப்படுகிறது. இதனால்தான் பலர் இந்நாளில் புதிய தொழில் தொடங்குவது புதிய சொத்துக்கள் வாங்குவது ஆகியவற்றை வழக்கமாக வைத்துள்ளனர்.

இதையும் படிங்க:  வழிபாட்டில் தீபம் ஏற்றும் போது தெரியாம கூட இந்த தவறை செய்யாதீங்க!

35
யுகாதி 2025 தேதி மற்றும் நேரம்:

யுகாதி 2025 தேதி மற்றும் நேரம்:

2025 ஆம் ஆண்டு யுகாதி பண்டிகையானது மார்ச் 30ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று கொண்டாடப்படுகிறது. பிரதிபத திதியானது மார்ச் 29ஆம் தேதி மாலை 4.27 மணிக்கு தொடங்கி மார்ச் 30ஆம் தேதி மதியம் 12.49 மணிக்கு முடிவடையும்.

இதையும் படிங்க:  சூரியன் புதன் சேர்க்கை – 3 ராசிகளுக்கு ஜாக்பாட்; வீடு தேடி வரும் அதிர்ஷ்டம்!

45
யுகாதி பண்டிகை கொண்டாடும் முறை:

யுகாதி பண்டிகை கொண்டாடும் முறை:

யுகாதி பண்டிகை நாளன்று அதிகாலையில் எழுந்து எண்ணெய் தேய்த்து குளித்து புத்தாடை அணிந்து கடவுளை வழிபட வேண்டும். பிறகு யுகாதி சிறப்பு உணவுகளான உகாதி பச்சடியுடன் பலவிதமான உணவுகள் செய்து யுகாதி பண்டிகை கொண்டாடப்படுகிறது. மேலும் இந்நாளில் பஞ்சாங்கம் படிப்பது மிகவும் சிறப்பாகவும் இதனால் வீட்டில் சகல ஐஸ்வர்யங்களும் பெருகும் என்பது நம்பிக்கை.

55

யுகாதி பண்டிகை என்று பிரம்ம முகூர்த்த வேளையில் சூரிய உதயத்திற்கு முன்பாக வீட்டின் பூஜையறையில் ஐந்து தீபங்கள் ஏற்ற வேண்டும். மேலும் மஞ்சள் அல்லது சாணத்தால் விநாயகர் செய்து விநாயகருக்கு அருகம்புல் மற்றும் நெய்வேத்தியம் செய்து தீப ஆராதனை காட்டி வழிபட வேண்டும். இப்படி வழிபாடு செய்தால் உங்களது வாழ்க்கையில் சகல நன்மைகளையும் பெறுவீர்கள் என்பது ஐதீகம்.

About the Author

KS
Kalai Selvi
2019இல் தொடர்பியல் துறையில் எம்.பில் முடித்து, செய்தித் துறையில் பணியாற்றி வருகிறார். 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். ஏப்ரல் 2023ஆம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்கில் பணியாற்றி வருகிறார். லைப்ஸ்டைல் தொடர்பான செய்திகளில் நிபுணத்துவம் கொண்டவர். ஆரோக்கியம், ஆன்மீகம், ஃபிட்னஸ், வீட்டு பராமரிப்பு, அழகு பராமரிப்பு குறிப்புகள், குழந்தை வளர்ப்பு செய்திகள் போன்றவை அதில் அடங்கும். ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்கில் சேருவதற்கு முன்பு, தகவல் தொடர்புத் துறையில் உதவிப் பேராசிரியராகப் பணிபுரிந்தார்.
ஜோதிடம்
ஆன்மீகம்
உகாதி பண்டிகை 2025
உகாதி சிறப்பு
உகாதி 2025

Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved