Tamil New Year 2025 : தமிழ் புத்தாண்டு கொண்டாடப்பட இப்படி ஒரு காரணமா?
இன்று தமிழ் புத்தாண்டு. முக்கியத்துவம் மற்றும் கொண்டாடுவதற்கான காரணங்கள் குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்ளுங்கள்.

Tamil New Year 2025
Tamil New Year 2025: Date, Rituals, Significance, Celebrations and more : தமிழ் புத்தாண்டு என்பது தமிழ் மாதமான சித்திரை முதல் நாளில் தான் கொண்டாடப்படுகிறது. இந்த பண்டிகை உலகம் முழுவதும் இருக்கும் தமிழ் மக்களுக்கு ஒரு முக்கிய பண்டிகையாகும். மேலும் இது அறுவடை காலத்தின் தொடக்கத்தையும் குறிக்கின்றது. இது புதிய தொடக்கம், நாள், கலாச்சாரம், முயற்சி ஆகிய தருணங்களை குறிக்கின்றது.

Tamil New Year 2025
தமிழ் புத்தாண்டு 2025 :
2025 ஆம் ஆண்டு தமிழ் புத்தாண்டு இன்று (ஏப்.14) திங்கள் கிழமை உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. புத்தாண்டிற்கான சங்கராந்தி தருணம் அதிகாலை 3.30 மணிக்கு நிகழ்கிறது.
இதையும் படிங்க: தமிழ் வருடப் பிறப்பு நாளில் 'இப்படி' செய்தால் வீட்டில் பணம் அள்ள அள்ள குறையாது!!

Tamil New Year 2025 History
தமிழ் புத்தாண்டு 2025 வரலாறு:
தமிழ் புத்தாண்டு தமிழ் வரலாற்றில் கிமு 300 முதல் கிபி 300 வரை நீடித்த ஒரு குறிப்பிடத்தக்க சகாப்தம் ஆகும். பண்டைய தமிழர்கள் விவசாய பருவத்தின் தொடக்கத்தை குறிக்க இந்த பண்டிகை கொண்டாடப்பட்டதாக நம்பப்படுகிறது. இந்நாள் பாரம்பரிய பயிர் அருவருடன் தொடர்புடையது என்பதால் தான் சித்திரை மாதத்துடன் ஒத்துப்போகிறது.
இதையும் படிங்க: மண், காற்று, நீருக்கு நன்றியை வெளிப்படுத்தும் காலமாக தமிழ் புத்தாண்டு நாள் அமையட்டும்-சத்குரு வாழ்த்து

Tamil New Year 2025 Significance
தமிழ் புத்தாண்டு 2025 முக்கியத்துவம்:
தமிழ் புத்தாண்டு செழிப்பு, நம்பிக்கை வளர்ச்சியால் எடுக்கப்பட்ட ஒரு புதிய சுழற்சியின் தொடக்கத்தை குறிக்கின்றது. தனிப்பட்ட புதிய முயற்சியில் ஈடுபடுவதற்கும், இலக்குகளை நிர்ணயிப்பதற்கும் குடும்பத்தினருடன் மகிழ்ச்சியான தருணங்களை அனுபவிப்பதற்கும் இது ஒரு மங்களகரமான நாளாக கருதப்படுகிறது. இந்நாளில் தமிழர்கள் பிரார்த்தனை செய்து அமைதி, மகிழ்ச்சியால் என்ற ஒரு வருடத்திற்கான ஆசீர்வாதங்களை பெறுகிறார்கள்.

Tamil New Year 2025 Celebration
தமிழ் புத்தாண்டு 2025 கொண்டாடும் முறை:
புத்தாண்டு முந்தைய நாளே பெண்கள் தங்களது வீட்டை அலங்கரிப்பார்கள். பிறகு புத்தாண்டு அன்று அதிகாலையில் எழுந்து சிலர் மூலிகை தண்ணீரில் குளிப்பார்கள். பொதுவாக பெண்கள் இந்நாளில் மஞ்சள் தண்ணீரில் தான் குளிப்பார்கள். பின் புதிய ஆடை உடுத்தி உறவினர்கள், நண்பர்கள், குடும்பத்தினருக்கு புத்தாண்டு வாழ்த்துக்களை சொல்லி மகிழ்வார்கள். மேலும் வீட்டில் இருக்கும் பெரியவர்களிடமிருந்து ஆசிர்வாதங்களை பெறுவார்கள். ஒவ்வொரு குடும்பத்தினரும் தங்கள் குல தெய்வத்திற்கு பூஜை செய்ய கோயிலுக்கு சென்று வழிபடுவார்கள். பண்டிகை நாளில் தயாரிக்கப்படும் முக்கிய உணவு 'மாங்காய் பச்சடி' ஆகும். இதனுடன் வடை சாம்பார் சாதம் பாயாசம் அப்பளம் பொறியியல் கூட்டு போன்றவை அடங்கும்.