MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Spiritual
  • Spiritual: உருட்டினால் அதிசயம் நடக்கும்.! யாரும் அறிந்திராத ஆன்மிக ரகசியம்.!

Spiritual: உருட்டினால் அதிசயம் நடக்கும்.! யாரும் அறிந்திராத ஆன்மிக ரகசியம்.!

தற்காலத்தில் 'உருட்டு' என்ற வார்த்தை பொய் சொல்வதைக் குறித்தாலும், கர்நாடகாவின் ஸோதே மடத்தில் இதற்கு ஒரு ஆன்மிக அர்த்தம் உண்டு. அங்கு நடைபெறும் பூதராஜன் பூஜையின் போது, தேங்காயை உருட்டி வழிபட்டால் நினைத்த காரியம் நிறைவேறும் என்பது ஐதீகம்.

1 Min read
Vedarethinam Ramalingam
Published : Nov 20 2025, 02:27 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
உருட்டு, உருட்டு மாறிபோன அர்த்தம்
Image Credit : Asianet News

உருட்டு, உருட்டு - மாறிபோன அர்த்தம்

தற்போத உருட்டு என்ற வார்த்தைக்கு அர்த்தம் மாறிபோய் விட்டது. நண்பர்கள் அல்லது உறவினர்களுடன் ஜாலியாக பேசிக்கொண்டு இருக்கும் போது, உருட்டு என்ற கமெண்ட் வந்தால், நாம் சொல்வது பொய் என்பதாக கருதப்படும். இந்த நிலையில், உருட்டினால் அதிசயம் நடக்கும் என்ற ஆன்மிக ரகசியத்தைதான் இந்த கட்டுரையில் பார்க்க போகிறோம்.

25
ஸோதே மடத்தில் பூதராஜன் வழிபாடு
Image Credit : Asianet News

ஸோதே மடத்தில் பூதராஜன் வழிபாடு

கர்நாடகத்தின் ஸோதே என்ற ஊரில் அமைந்துள்ள அஷ்டமடங்களில் ஒன்றான ஸோதே மடத்தில், ஶ்ரீவாதிராஜரின் மூல பிருந்தாவனம் இருக்கிறது. மத்வமதத்தை உயர்த்திய ஶ்ரீவாதிராஜர், ஶ்ரீராகவேந்திர சுவாமிகளின் பரம்பரையில் விளங்கிய மகான். இவர் வாழ்ந்த காலத்தில் நடந்த ஒரு அதிசய சம்பவம் தான் “பூதராஜன்” வரலாறு.

Related Articles

Related image1
Spiritual: நெல்லிக்காய் தரும் ராஜயோகம்! கார்த்திகையில் இதை மட்டும் செய்யுங்க.! அடுத்தவர்களுக்கு கொடுத்து உதவும் அளவுக்கு உயர்வு கிடைக்கும்!
Related image2
Spiritual: கேட்டதை எல்லாம் தரும் கார்த்திகை ஞாயிறு வழிபாடு.! எந்த கோவிலுக்கு சென்று யாரை வணங்க வேண்டும் தெரியுமா?!
35
 அருள்பாலிக்கும் பூதராஜன்
Image Credit : Asianet News

அருள்பாலிக்கும் பூதராஜன்

ஒரு முறை அகங்காரமுள்ள பூதம் பலரிடம் வாதம் செய்து, பதில் அளிக்க முடியாதவர்களை கொன்றுவந்தது. வாதிராஜரை சந்தித்தபோது, பூதம் அவரிடம் ஆ-கா-மா-வை என்றால் என்ன? என்று கேட்டது. அதற்கு வாதிராஜர், இவை ஆஷாட, கார்த்திகை, மாசி, வைகாசி என்ற நான்கு மாதங்களை குறிக்கும்; இம்மாதங்களில் பௌர்ணமி நாளில் இறை வழிபாடு செய்வது மிகப் பலனளிக்கும் என்று விளக்கமளித்தார். வாதிராஜரின் ஞானமும் தெய்வீக ஒளியையும் கண்டு பூதம் தன்னுடைய ஆணவத்தை விட்டுவிட்டு அவருக்கு அடிநாயகனாகி பூதராஜன் ஆனது.

45
உருட்டிணால் நினைத்தது நடக்கும
Image Credit : Asianet News

உருட்டிணால் நினைத்தது நடக்கும

அதன் பின்னர் வாதிராஜர் எங்கே சென்றாலும் பல்லக்கின் முன்பகுதியைத் தாங்கி சென்றது பூதராஜன் என்று கூறப்படுகிறது. இன்று வரை ஸோதே மடத்தில் நடைபெறும் “பூதராஜன் பூஜை” மிகச் சிறப்பாக நடைபெற்று வருகிறது. அந்த பூஜையின் போது பக்தர்கள் நம்பிக்கையுடன் தங்கள் விருப்பத்தை சொல்லி, தேங்காயை உருட்டிவிட்டால், வேண்டிய காரியம் நிறைவேறும் என ஐதீகம் கூறுகிறது.

55
ஏழு பிரதட்சணம் செய்ய வேண்டும்
Image Credit : Asianet News

ஏழு பிரதட்சணம் செய்ய வேண்டும்

பூதராஜரின் ஆசீர்வாதத்தைப் பெற ஏழு பிரதட்சணம் செய்ய வேண்டும். ஒவ்வொரு சுற்றிலும் திருக்குளத்தில் நீராடி பரிசுத்தமாகச் செல்லுதல் வழக்கம். இங்கு காணப்படும் சிவலிங்கங்கள் பூதராஜரின் வேண்டுதலினால் உருவானவை என நம்பப்படுகிறது. ஸோதே மடம் இன்றும் பக்தர்களின் ஆன்மீக நம்பிக்கைக்குப் பிரதான தலமாக விளங்குகிறது.

About the Author

VR
Vedarethinam Ramalingam
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 17 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். சன் தொலைக்காட்சி, தந்தி டிவி பணியாற்றியுள்ள இவர், ஏசியாநெட் நியூஸ் தமிழில் இணைந்துள்ளார். வணிகம், முதலீடுகள் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர். எதிர்கால தேவைகளுக்குக்கு முதலீடு அவசியம் என்பதை அடித்தட்டு மக்களும் புரிந்துகொள்ளும் வகையில் எழுதி வருகிறார். இயற்கை விவசாயம் குறித்த படைப்புகளை படைப்பதிலும் கைதேர்ந்தவர்.
ஆன்மீகம்
கோவில்
கோவில் நிகழ்வுகள்
Latest Videos
Recommended Stories
Recommended image1
Spiritual: நெல்லிக்காய் தரும் ராஜயோகம்! கார்த்திகையில் இதை மட்டும் செய்யுங்க.! அடுத்தவர்களுக்கு கொடுத்து உதவும் அளவுக்கு உயர்வு கிடைக்கும்!
Recommended image2
Spiritual: கேட்டதை எல்லாம் தரும் கார்த்திகை ஞாயிறு வழிபாடு.! எந்த கோவிலுக்கு சென்று யாரை வணங்க வேண்டும் தெரியுமா?!
Recommended image3
Spiritual: ருத்ராட்சம் சொல்லும் ஆன்மிக ரகசியம்.! யார் அணியலாம், எப்போது அணியக்கூடாது தெரியுமா?
Related Stories
Recommended image1
Spiritual: நெல்லிக்காய் தரும் ராஜயோகம்! கார்த்திகையில் இதை மட்டும் செய்யுங்க.! அடுத்தவர்களுக்கு கொடுத்து உதவும் அளவுக்கு உயர்வு கிடைக்கும்!
Recommended image2
Spiritual: கேட்டதை எல்லாம் தரும் கார்த்திகை ஞாயிறு வழிபாடு.! எந்த கோவிலுக்கு சென்று யாரை வணங்க வேண்டும் தெரியுமா?!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved